siruppiddy nilavarai.com

Footer Widget 1

சனி, 18 ஆகஸ்ட், 2012

3 வருடங்களின் பின் இணைந்த மனிதக் குரங்குகள் மகிழ்ச்சியில் ஆரத் தழுவிக் கொண்டன

18.08.2012.நீண்ட காலம் பிரிந்திருந்த உறவினர்கள் ஒரு வரை யொருவர் கட்டித் தழுவி மகிழ் ச்சியை வெளிப்படுத்துவது போல் பிரித்தானியாவில் வில்ட்ஷியரிலுள்ள லோங்லீட் சபாரி பூங்காவில் 3 வருடங்களுக்குப் பின் சந்தித்துக் கொண்ட மனிதக் குரங்குகள் ஒன்றையொன்று கட்டித் தழுவி மகிழ் ச்சியைப் பரிமாறி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தின. அயர்லாந்தில் டப்ளின் நகரில் பிறந்த கெஷோ, அல்ப் ௭ன்ற இந்த மனிதக் குரங்குகளில் கெஷோ 3 வருடங்களுக்கு முன் லோங்லீட் சபாரி பூங்காவுக்குக் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் மூன்று வருடங்கள் கழித்து கெஷோ இருந்த அந்த மிருக க் காட்சி சாலைக்கு அல்ப் கொண்டுவரப்பட்ட போது, இரு மனிதக் குரங் கு களும் ஒன்றையொன்று இனங் கண்டு ஆ ரத் தழுவிக் கொண்டன.