siruppiddy nilavarai.com

Footer Widget 1

சனி, 18 ஆகஸ்ட், 2012

இந்தியாவில் இருந்து இலங்கையர்கள் திருப்பியனுப்பபடவுள்ளனர்

18.08.2012.கேரளாவின் கொல்லம் ஊடாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற 12 இலங்கைத் தமிழர்கள் நாடு கடத்தப்படவுள்ளனர்.
இதற்கான நடவடிக்கைகளை கேரள பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஜூன் 3 ஆம் திகதி 151 பேர் படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முற்படுகையில் கேரள பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர். இவர்களில் 19 பெண்களும் 22 சிறுவர்களும் இருந்தனர்.
அதிலும் அதில் 12 பேர் இலங்கையில் இருந்து ஜூன் 2 ஆம் திகதி சுற்றுலா வீசாவில் கேரளா வந்து, இந்த அவுஸ்திரேலியா செல்லும் குழுவுடன் இணைந்துக்கொண்டவர்களாவர் என்பது விசாரணைகளில் இருந்து தெரியவந்தது.
ஏனையோர் தமிழகத்தின் இலங்கை அகதி முகாம்களில் உள்ளவர்களாவர். இந்தநிலையில் தமிழகத்தின் அகதிமுகாம்களில் இருந்தவர்கள், மீண்டும் தமிழகத்துக்கு அனுப்பப்பட்டனர்.
இலங்கையில் இருந்து வந்த 12 பேர் மாத்திரம் கேரளாவில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்தனர்.
இந்தநிலையில் இவர்கள் இலங்கைக்கு திருப்பியனுப்பப்படுவார்களானால் நீண்ட நாட்களுக்கு பின்னர் இந்தியாவினால் இலங்கைக்கு திருப்பியனுப்பப்படும் தமிழர்களாக இவர்கள் இருப்பார்கள் என்று இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன