siruppiddy nilavarai.com

Footer Widget 1

சனி, 18 ஆகஸ்ட், 2012

மரத்தில் வரையப்பட்ட பாரதத் தலைவர்களின் முகத்தோற்றங்கள்

18.08.2012.இப்படத்தை உற்றுப்பார்த்தால் இந்தியாவின் மறைந்த தலைவர்கள் 10 பேரின் முகத்தோற்றங்கள் ஒரு மரத்தின் கிளைகளில் வரையப்பட்டிருப்பதைக் காணலாம். கண்டுபிடிக்க முடிகிறதா? அவர்கள்:

1.இந்திரா காந்தி. 2.ராஜிவ்காந்தி 3.ஜவகர்லால் நேரு 4.மகாத்மா காந்தி 5.பாலகங்காதர திலகர் 6. கோபால கிருஷ்ண கோகலே 7.சுபாஷ் சந்திர போஷ் 8.ரவிந்திரநாத் தாகூர் 9. வ.உ.சிதம்பரப்பிள்ளை 10.பகவத் சிங்.

இவர்களில் கோபால கிருஷ்ண கோகலே யார் என்பது குறித்த விபரத்தையும் இணைத்துள்ளோம்.

கோபால கிருஷ்ண கோகலே (மே 9, 1866 - பிப்ரவரி 19, 1915) இந்தியாவில் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு எதிராக இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போது உருவான சமூக மற்றும் அரசியல் தலைவர்களில் ஒருவராவார். கோகலே இந்திய தேசிய காங்கிரஸின் மூத்த தலைவரும் இந்திய சேவகர்கள் அமைப்பின் உருவாக்குனரும் ஆவார்.

இவர் தன்னுடைய குறிக்கோள்களை அடைவதற்காக இரு முக்கிய கொள்கைகளைப் பின்பற்றினார். வன்முறையைத் தவிர்த்தல் மற்றும் இருக்கும் அரசு நிறுவனங்களுக்குள்ளேயே மாற்றத்தைக் கொண்டுவருதல். இவரது தாக்கமே அஹிம்சா மூர்த்தியாக மகாத்மா காந்தி மலர வழிவகுத்தது எனில் மிகையில்லை