siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 10 ஆகஸ்ட், 2012

தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த படகிலிருந்து எதிரிகளை காப்பாற்றிய அமெரிக்கர்கள்

10.08.2012.
மத்திய கிழக்கு கடற்பகுதியில் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்த படகொன்றிலிருந்து 10 பேரை அமெரிக்க கடற்படையினர் முதன் முறையாக காப்பாற்றி உள்ளனர். இவர்களில் 8 பேர் ஈரானியர்கள், மீதமுள்ள 2 பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான யு.எஸ்.எஸ் ஜேம்ஸ் ஈ. வில்லியம்ஸ் என்ற போர்க்கப்பலே இவர்களை மீட்டுள்ளது.
இது குறித்து அமெரிக்க கடற்படை பேச்சாளர் ஒருவர் கூறுகையில், விபத்திலிருந்து காப்பாற்றப்பட்ட அனைவரும் தற்போது சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தார்.

அமெரிக்கப் படையினரால் ஈரானியர்கள் காப்பாற்றப்படுவது இது முதல் முறையல்ல.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஈரானியர்கள் 13 பேரைக் கடற்கொள்ளையர்களிடமிருந்து அமெரிக்க கடற்படையினர் காப்பாற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

கருத்துரையிடுக