siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

இலங்கை அரசாங்கத்தை நம்பமுடியாது – ரொபட் ஓ பிளேக்

 
 
16.09.2012.By.Rajah.இலங்கையின் அதிகாரிகள் எவரையும் நம்பமுடியாது என்று தெற்காசியாவுக்கான பிரதி அமரிக்கா ராஜாங்க செயலாளர் ரொபட் ஓ பிளெக் குறிப்பிட்டுள்ளார். இந்த செய்தியை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது
2009 ம் ஆண்டு போர் முடிவடைந்த பின்னர், இலங்கைக்கு விஜயம் செய்த ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகளான ஹோம்ஸ் மற்றும் பெஸ்கோ ஆகியோர் இலங்கை தலைவர்களுடனும் அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தினர்.
இதன்போது இலங்கையின் சார்பில் எவருமே நம்பி செயற்படும் அளவில் நடந்துகொள்ளவில்லை என்று ஐக்கிய நாடுகளின் அதிகாரிகள் ரொபட் ஓ பிளெக்கிடம் தெரிவித்துள்ளனர்.
வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் இலங்கை அதிகாரிகள் உரிய தரவுகளை வழங்கவில்லை என்று ஐக்கிய நாடுகளின் அதிகாரிகள் பிளெக்கிடம் குறிப்பி;ட்டுள்ளனர்.
இதேவேளை இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் இலங்கை அரசாங்கம் எவ்வித ஆக்கபூர்வமான செயற்பாட்டையும் கொண்டிருக்கவில்லை.
அத்துடன் தமிழர்கள் என்ற பெயரை பயன்படுத்தி சிங்கள தேசியவாதிகளின் வாக்குகளை கவரும் நடவடிக்கையிலேயே இலங்கை அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக ரொபட் ஓ பிளெக், அமெரிக்க இராஜாங்க திணைக்களத்துக்கு அறிவித்துள்ளார்.
இதன் கட்டங்களாகவே மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம், எதிர்க்கட்சிகளை வலுவிழக்கச்செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாகவும் பிளெக் குறிப்பிட்டுள்ளார்.