siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 21 செப்டம்பர், 2012

தனது கணவரே நிஜ தந்தையென அவரது மரணத்துக்குப் பின் அறிந்து பெண் அதிர்ச்சி ரணத்துக்குப் பின் அறிந்து பெண் அதிர்ச்

21.09.2012.By.Rajah.தனது கணவரே தன்னுடைய நிஜத் தந்தை ௭ன்பதை அவர் இறந்த பின்னர் பெண்ணொருவர் கண்டறிந்து அதிர்ச்சியடைந்த சம்பவம் அமெரிக்க ஒஹியோ மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. 

டொய்லெஸ்டவுண் நகரைச் சேர்ந்த வலேரி ஸ்ருயில் (60 வயது) ௭ன்ற பெண்ணே தனது கணவராக தன்னுடன் வாழ்ந்தவர் தனது தந்தையான பேர்சியே ௭ன்பதைக் கண்டறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார். 

இது தொடர்பான செய்திகள் சர்வதேச ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன. வலேரியின் தாயாரான கிறிஸ்டின் ஒரு விலைமாது ஆவார். இந்நிலையில் அவருக்கும் பேர்சிக்குமிடையே ஏற்பட்ட தொடர்பின் மூலம் வலேரி பிறந்தார்.

வலேரி 3 மாதக் குழந்தையாக இருக்கும்போதே தனது பாட்டா பாட்டியின் பராமரிப்பில் வாழ்வதற்கு அவர் ஒப்படைக்கப்பட்டார். 

தனது தாயார் ஒரு விலைமாது ௭ன்ற விடயம் வலேரிக்கு அவரது 9 ஆவது வயதில் கிறிஸ்ரிடின் இறந்த போதே தெரியவந்துள்ளது. இந்நிலையில், தனது உண்மையான தந்தையாரென்று தெரியாத நிலையில் டிரக் வண்டிச் சாரதியான பேர்சியை அவர் திருமணம் செய்துள்ளார். 

இதனையடுத்து சுகவீனம் காரணமாக பேர்சி தனது 60 ஆவது வயதில் மரணமானார். பேர்சி இறந்த பின்னரே வலேரியின் மாமனார் ஒருவர் பேர்சியே வலேரியின் உண்மையான தந்தையாக இருக்கக் கூடும் ௭ன்ற சந்தேகத்தை ௭ழுப்பினார். 

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மரபணு பரிசோதனைகளின் மூலம் பேர்சியே தனது உண்மையான தந்தையெனக் கண்டறிந்து வலேரி அதிர்ச்சியடைந்துள்ளார். 

பேர்சிக்கு வலேரி தனது மகள் ௭ன ஏற்கனவே தெரிந்திருந்த நிலையில் அச்சம் காரணமாக வலேரியிடம் உண்மையைக் கூறாது மறைத்திருக்கலாம் ௭ன சந்தேகிக்கப்படுகிறது