siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 21 செப்டம்பர், 2012

மஹிந்தவின் படத்தை எரித்தும், மதித்தும் ராஜபக்‌ஷவை

 
[காணொளி ]
 
21.09.2012.By.Rajah.இலங்கை ஜனாதிபதி ராஜபக்‌ஷ இந்தியா வந்ததை கண்டித்து இன்று தமிழக வாழ்வுரிமை கட்சியினர் சுமார் 2000 க்கு அதிகமானோர் சென்னை சென்ட்ரல் தொடர்வண்டி நிலையத்தை முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பண்ருட்டி வேல்முருகன் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.
கடலூர் , பண்ருட்டி , சிதம்பரம் போன்ற பகுதியை சேர்ந்த மாணவர்கள் , இளைஞர்கள் பலரும் இந்த போராட்டத்தில் பங்கெடுத்தனர். அவர்கள் அனைவரையும் அடக்க முடியாமல் காவல் துறை திணறியது.
பெரும்பாலான மக்களை கைது செய்த பிறகு சிலர் தாமதமாக வந்து தங்களையும் கைது செய்ய வேண்டும் என காவல் துறையிடம் கேட்டனர். ஆனால் போதிய வாகனங்கள் இல்லாததால் காவல்துறை அவர்களை கைது செய்ய மறுத்தது.
இரண்டாயிரத்துக்கு மேற்பட்டோர் மத்திய தொடருந்து நிலையத்தில் நுழைந்து முழக்கமிடவே, ஒட்டுமொத்த நிலையமே அதிர்ந்தது.
ராஜபக்‌ஷவை வெளியேற்று, இந்திய அரசே இலங்கைக்கு துணை போகாதே என்று அனைவரும் முழக்கமிட்டனர் . ராஜபக்சேவின் உருவ படங்களை எரித்தும், மிதித்தும் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர்.