siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

எனக்காக ஒருவர் பிறந்தே இருக்கிறார்,











09.09.2012.BY.Rajah. அவரையும் கடவுள் எனக்கு கொடுப்பார்: நயன்தாரா நம்பிக்கை


பிரபுதேவாவுடன் காதல் முறிந்ததையடுத்து நடிகை நயன்ராதா சினிமா படங்களில் நடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறார். தெலுங்கில் அவர் 3 படங்களில் நடித்து வருகிறார்.


இதற்கான படப்பிடிப்பில் கலந்து கொள்ள வந்த நயன்தாரா காதல் மீது தனக்கு இன்னும் நம்பிக்கை இருப்பதாக கூறினார். அவர் கூறியதாவது:-

காதல் மீது எனக்கு இன்னும் நம்பிக்கை உள்ளது. நான் நடித்த ஒரு படம் தோல்வி அடைந்தால் அதற்காக வருத்தம் அடைவேன். அடுத்த படத்தில் அதனை திருத்திக் கொள்வேன். அதன் மூலம் வெற்றி பெறுவேன்.
வாழ்க்கையும் சினிமா போல்தான். எதிர்பார்த்த ஒன்று கிடைக்காவிட்டால் அதுபற்றி வருத்தப்படாமல் அதனை மறந்துவிட வேண்டும். கசப்பான அனுபவம்தான் நமக்கு கூடுதல் முன்னேற்றத்தை அளிக்கும். இன்றைய கசப்பான அனுபவம் நாளைய இனிப்பான நிகழ்வாக இருக்கும் என்பது எனது கருத்து.

எனக்கு கடவுள் எவ்வளவோ கொடுத்து உள்ளார். அன்பு, காதல், மீது எனக்கு இன்னும் நம்பிக்கை உள்ளது. எனக்காக ஒருவர் பிறந்தே இருக்கிறார். அவரையும் கடவுள் எனக்கு கொடுப்பார் என்று கூறினார் நம்பிக்கை குறையாமல்