siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 21 அக்டோபர், 2012

ஈரானில் 3 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்

 ஞாயிற்றுக்கிழமை, 21 ஒக்ரோபர் 2012, By.Rajah.
ஈரானில் குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய மூன்று குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஈரானின் தென்கிழக்கே பலுசிஸ்தான் மாகாணத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு ஜீலை மற்றும் டிசம்பர் மாதங்களில் சம்பாஹர் பகுதியில் குண்டு வெடித்தது. இதில் 67 பேர் பலியாயினர்.
இது தொடர்பாக யாக்ஹா, அப்துல் ஜலில், அப்துல்பாசித் ரகி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மீதான வழக்கில் ஜஹிர்தான் நீதிமன்ற நீதிபதி முகமது மெர்தாஹி தூக்கு தண்டனை விதித்தார்.
இதனையடுத்து மூன்று பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது