siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 21 அக்டோபர், 2012

மும்மர் கடாபியின் இளைய மகன் படுகொலை

 ஞாயிற்றுக்கிழமை, 21 ஒக்ரோபர் 2012, By.Rajah.
லிபியாவின் முன்னாள் ஜனாதிபதி மும்மர் கடாஃபியின் இளைய மகன் நேற்று(சனிக்கிழமை) திரிப்போலியில் நடைபெற்ற தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இத்தாக்குதலில் இவருடன் சேர்ந்து லிபிய தேசிய காங்கிரஸின் தலைவர் மொஹம்மட் மாக்ரிஃபும் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரிப்போலியிலிருந்து 170 Km தூரத்தில் அமைந்துள்ள 'பானி வலிட்' எனும் இடத்தில் கிளர்ச்சியாளர்களுக்கும் இராணுவத்திற்கும் இடையே கடும் மோதல் இடம்பெற்றதில் லிபிய இராணுவத்தின் பிரிவான 'காமிஸ் பிரிகேட்' இல் தளபதியாகப் பணியாற்றிய காமிஸ் கடாஃபி படுகாயமடைந்தார்.
மேலும் இராணுவத்திடம் சிக்கிய பின்னரே உயிரிழந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
இத்தாக்குதல் சம்பவம் மும்மர் கடாஃபி கொல்லப்பட்டு சரியாக ஒரு வருடம் கழித்து நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.