siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 31 அக்டோபர், 2012

இன்னும் ஒரு மாதத்தில் புதிய படம்: கே.வி. ஆனந்த்

Wednesday, 31 October 2012, By.Rajah.
மாற்றான் படத்தினைத் தொடர்ந்து இயக்குனர் கே.வி.ஆனந்த் தனது அடுத்த படத்திற்கான கதையை தயார் செய்து வருகிறார்.
மாற்றான் படத்தினைத் தொடர்ந்து கே.வி.ஆனந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கார்த்தியை இயக்க இருக்கிறார் என்று தகவல் வெளியாகியன.
இந்நிலையில் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடிய இயக்குனர் கே.வி.ஆனந்த், பெரிய நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடம் இருந்து வாய்ப்புகள் வந்திருக்கின்றன. ஆனால் நான் இன்னும் எதுவும் ஒப்பந்தமாகவில்லை என்றார்.
கோ படத்தினை முடித்துவிட்டு உடனே 'மாற்றான்' படத்தின் வேலைகளை தொடங்கி விட்டேன். ஆகையால் தற்போது தான் குடும்பத்தினருடன் நேரத்தினை செலவிட்டு வருகிறேன்.
எனது அடுத்த படத்தினை பற்றிய அறிவிப்பு வர குறைந்தபட்சம் ஒரு மாதம் ஆகலாம். எனது அடுத்த படத்திற்கான கதையினை தயார் செய்து வருகிறேன்.
அதை முடித்தவுடன் தான் நடிகர்கள் தெரிவு நடைபெறும் என்று கூறியிருக்கிறார்

1 comments: