புதன்கிழமை, 17 ஒக்ரோபர் 2012, By.Rajah. |
இஸ்ரேலில் சிக்கன நடவடிக்கைகளுக்கு
ஆளும் கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒத்துழைப்பு தராத காரணத்தால், நாடாளுமன்றம்
கலைக்கப்பட்டது.
இஸ்ரேலின் பிரதமராக பதவி வகித்து வருபவர் பெஞ்சமின் நெதன்யாகு. இவருடைய
பதவிக்காலம் முடிவடைய இன்னும் ஒரு ஆண்டுகள் இருக்கிறது. இந்நிலையில் சிக்கன நடவடிக்கையை பின்பற்றும் வகையில், பட்ஜெட் தயாரிக்க ஆளும் கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒத்துழைக்காத காரணத்தால் பிரதமர் விரைவில் தேர்தலை நடத்த போவதாக கூறியிருந்தார். இதன் படி 120 பேர் கொண்ட நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. இதையடுத்து அடுத்த ஆண்டு ஜனவரி 22ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, அடுத்த ஆண்டு அக்டோபர் மாதமே(அக்டோபர், 2013) மாதமே தேர்தல் நடைபெறுவதாய் இருந்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இத்தேர்தலில் பிரதமர் தலைமையிலான லிகுத் கட்சி வெற்றி பெற அதிகளவு வாய்ப்பு இருப்பதாக கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. |
முகப்பு |