siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 17 அக்டோபர், 2012

சிறிய ஏவுகணை மூலம் ஒசாமாவை கொலை

 
 புதன்கிழமை, 17 ஒக்ரோபர் 2012, By.Rajah.
செய்ய திட்டமிட்ட அமெரிக்கா: புதிய தகவலால் பரபரப்புசர்வதேச தீவிரவாத தலைவர் ஒசாமா பின்லேடனை அமெரிக்க அதிரடி படையினர் கடந்தாண்டு சுட்டுக் கொன்றனர். இந்த நடவடிக்கைகளுக்கு முன்பாக நடைபெற்ற இரகசிய ஆலோசனைகள், அமெரிக்கா உருவாக்கிய யுக்திகள் குறித்து அவ்வப்போது புதிய தகவல்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றன.
இந்நிலையில் நவீன மேஜிக் குண்டு தயாரித்து ஒசாமாவை கொலை செய்ய திட்டமிட்டது குறித்து மார்க் போவ்டன் என்பவர் தனது தி பினிஷ் என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அவர் கூறுகையில், ஒசாமாவை கொலை செய்வதற்கு முன்பாக பல்வேறு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.
அதில் நவீனரக மேஜிக் குண்டு மூலம் கொலை செய்வது குறித்து ஆலோசனை தெரிவிக்கப்பட்டது. இக்குண்டு நவீன ரக சிறிய ஏவுகணையை போன்று செயல்படும்.
இதனை உளவு விமானத்தின் மூலம் ஏவினால், குறிப்பிட்ட நபரை மட்டுமே தாக்கும். அருகில் இருக்கும் மற்ற நபர்களுக்கோ, பொருளுக்கோ சேதம் ஏற்படாது.
எனவே ஒசாமா தனியாக வரும்போது அவரை இலக்கு வைத்து தாக்கவிடலாம் என்று முடிவு செய்யப்பட்டது.
ஆனால், இந்த ஏவுகணை குறி தவறி மற்ற நபரை தாக்கினால் என்ன செய்வது? ஒசாமா கொல்லப்பட்டு விட்டார் என்பதை எவ்வாறு உறுதி செய்வது? போன்ற கேள்விகள் எழுந்தன.
இதனையடுத்து இத்திட்டம் கைவிடப்பட்டு, அதிரடி படையை அனுப்பி கொலை செய்வதே இறுதியானது என்பது முடிவு செய்யப்பட்டது