siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 26 அக்டோபர், 2012

இருவரின் தலைகளுக்கு நிர்வாணமான படங்களை பொருத்தியவர் கைது?

           
Friday 26 October 2012.பாடசாலை அதிபர், இரு ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் இருவரின் தலைகளுக்கு நிர்வாணமான படங்களை பொருத்தி நீச்சல் தடாகத்தில் இருப்பதை போல வடிவமைத்து பேஸ் புக் இணையத்தளத்தில் தரவேற்றம் செய்த புகைப்பட கலைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொழும்புக்கு அண்மையிலுள்ள ஹோமாகவை அண்மித்த பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றின் அதிபர், இரு ஆசிரியர்கள் மற்றும் ஆCரியைகள் இருவரின் தலைகளுக்கே இவ்வாறு நிர்வாணப் படங்கள் பொருத்தப்பட்டு பேஸ் புக்கில் தரவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
அவ்வாறு தரவேற்றம் செய்த புகைப்பட கலைஞர் ஒருவரை கைது செய்த கஹத்துடுவ பொலிஸார் அவரை குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர். பாடசாலை வைபவமொன்றில் பிடிக்கப்பட்ட புகைப்படங்களை பயன் படுத்தியே குறித்த நபர் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த புகைப்பட கலைஞர் குறிப்பிட்ட பாடசாலை மாணவி ஒருவரிடம் தன்னை காதலிக்குமாறு கேட்டமை தொடர்பில் மேலே குறிப்பிட்ட அதிபர், ஆசிரியர்கள் மற்றும் ஆரியைகள் அவரை எச்சரித்ததை அடுத்தே புகைப்பட கலைஞர் இவ்வாறு செய்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருவதாக கஹத்துடுவ பொலிஸார் தெரிவித்தனர்