siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 29 நவம்பர், 2013

ஈரானில் பூமியதிர்வு; 8 பேர் உயிரிழப்பு


ஈரானில் இடம்பெற்றுள்ள பூமியதிர்ச்சி காரணமாக குறைந்தபட்சம் 8 பேர் உயிரிழந்துள்ளதுடன்,  59 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

தெற்கு ஈரானிலுள்ள அணு மின் நிலையத்திற்கு அருகில்  நேற்று வியாழக்கிழமை மாலை இந்த பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

காயமடைந்தவர்களில் 12 பேர் ஆபத்தான நிலையிலுள்ளனர்.
இந்த பூமியதிர்ச்சி ரிக்டர் அளவுகோலில் 5.6ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பல பகுதிகளில் குடியிருப்புக் கட்டடங்கள் சேதமாகியுள்ளதுடன், மின் விநியோகமும் தடைப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தப் பூமியதிர்ச்சியினால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை கேள்விப்பட்டு கவலையடைந்துள்ள ஈரானிய ஜனாதிபதி ஹஸன் ரூஹானி,  பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தனது அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார்

0 comments:

கருத்துரையிடுக