siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வெள்ளி, 5 ஜூலை, 2013

ஆளில்லா விமானத் (Drone) தாக்குதலில் பாகிஸ்தானில்

 
பாகிஸ்தான் அரசின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் அங்கு அமெரிக்க ஆளில்லா விமானங்களான டிரோன் தாக்குதல்கள் இன்னமும் தொடர்ந்த வண்ணமுள்ளன.
 
 சமீபத்திய தாக்குதலாக நேற்று புதன்கிழமை ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகே உள்ள பழங்குடியினர் பிரதேசத்தில் தீவிரவாதிகளின் இருப்பிடங்களையும் வாகனங்களையும் குறிவைத்து நிகழ்த்தப் பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 இத்தாக்குதலில் 18 பேர் கொல்லப் பட்டுள்ளனர். அமெரிக்க புலனாய்வுத் துறையான சிஐஏ இனால் இயக்கப் பட்ட ஆளில்லா டிரோன் விமானம் ஆப்கான் எல்லையிலுள்ள வடக்கு வரிஷிஸ்டான் பழங்குடியினர் பகுதியான மிரான்ஷாஹ் இல் தீவிரவாதிகளின் வாகனத்தைக் குறி வைத்து 4 ஏவுகணைகளை ஏவித் தாக்கியுள்ளது. இத்தாக்குதலில் இறந்தவர்களின் அடையாளம் இன்னமும் உறுதிப்படுத்தப் படாத நிலையில் குறித்த இடம் அல்-கொய்தாவுடன் தொடர்புடைய ஆயுததாரிகள் அதிகம் வசிக்கும் இடம் எனக் கூறப்படுகின்றது. மேலும் நேற்றைய தாக்குதல் இந்த இரு மாதங்களில் நிகழ்த்தப் பட்ட 2 ஆவது தாக்குதலாகும்.

 கடந்த மாதம் வடக்கு வஷிரிஸ்டானில் நிகழ்த்தப் பட்ட டிரோன் தாக்குதலில் 7 ஆயுததாரிகள் கொல்லப் பட்டமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை அமெரிக்காவின் இந்த சமீபத்திய டிரோன் தாக்குதல்கள் பாகிஸ்தான் புதிய பிரதமர் நவாஸ் ஷெரீஃப் ஆல் கடுமையாகக் கண்டிக்கப் படும் என எதிர்பார்க்கப் படுகின்றது. பல அப்பாவிப் பொது மக்கள் கொல்லப் படக் காரணமான அமெரிக்காவின் இந்த சட்ட விரோத டிரோன் தாக்குதல்களை தான் தடுத்து நிறுத்துவேன் எனத் தேர்தல் சமயத்தில் நவாஸ் ஷெரீஃப் வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களின் பெற்றோரிடம்??



சீனாவில் வைத்தியப் பட்டப்படிப்பு படிக்கும்  இலங்கையைச் சேர்ந்த ஆறு மாணவர்களை  விடுமுறை நாட்களில் இலங்கைக்கு வருவதற்கான விமானப் பயணச் சீட்டையும் விடுமுறை முடிந்து மீண்டும் சீனாவிற்குச் செல்வதற்கான விமானச் சீட்டையும் பெற்றுத் தருவதாகக் கூறி மூன்று மாத காலம் ஏமாற்றிய விமானச்சீட்டு விற்பனையாளர் ஒருவரை கடந்த 2 ஆம் திகதி பம்பலப்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்தார். 
சீனாவில் வைத்தியப் பட்டப்படிப்புக்காகச் சென்ற ஆறு மாணவர்களுக்கு விமானச்சீட்டு பெற்றுத் தருவதாக ஒவ்வொரு மாணவரின் பெற்றோரிடமிருந்தும் தலா 85இ000 ரூபா வீதம் மொத்தமாக 510,000 ரூபாவை கடந்த மார்ச் மாதம் சந்தேக நபர் பெற்று சுமார் மூன்றுமாத  காலமாக ஏமாற்றி வந்ததாக பெற்றோரிடமிருந்து கிடைத்த முறைப்பாட்டைத் தொடர்ந்தே சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார். 
சந்தேக நபர் பம்பலப்பிட்டி பகுதியில் விமானச் சீட்டு விற்பனை முகவர் நிலையம் ஒன்றை நடத்தி வருவதாகவும் அவரை விசாரணைகள் முடிந்தவுடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்

ஒட்டு கேட்பு கருவி: அதிர்ச்சி தகவல் வெளியானது


லண்டன் ஈக்வடார் தூதரகத்தில் பொருத்தப்பட்ட ஒட்டு கேட்பு கருவி தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மற்ற நாடுகளின் தூதரகங்களை அமெரிக்கா உளவு பார்க்கிறது என ஸ்னோடென் வெளியிட்ட தகவல் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் பொருத்தப்பட்டிருந்த ஒட்டுக் கேட்பு கருவி தற்போது கண்டுபிடிக்கப்பட்டது.
இக்கருவியை இங்கிலாந்து நிறுவனம் ஒன்று பொருத்தியிருக்கிறது. இந்தக் கருவியை செய்தியாளர்களிடம் ஈக்வடார் வெளியுறவு அமைச்சர் செய்தியாளர்களிடம் காண்பித்தார்.
இதே ஈக்வடார் தூதரகத்தில்தான் விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சே கடந்த ஓராண்டு காலமாக தஞ்சம் புகுந்து இருக்கிறார். அவர் தூதரகத்தை விட்டு வெளியே வருவதே இல்லை.
அப்படி வெளியே வந்தால் அவர் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்படக் கூடும் என்ற நிலை இருக்கிறது. இந்நிலையில் அதே தூதரகத்தில் தான் இத்தகைய ஒட்டு கேட்புக் கருவி பொருத்தப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

வியாழன், 4 ஜூலை, 2013

பிரான்ஸ் நாட்டின் சீஸ்க்கு தடை


  தயாரிக்கப்படும் சீஸ்க்கு தடைவிதிக்க அமெரிக்க நாடானது உத்தரவிட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டில் தயாரிக்கப்படும் சீஸ்க்கு தடைவிதிக்க அமெரிக்க நாடானது உத்தரவிட்டுள்ளது.
ஒமேலும் அதன்மேல் சில வகையான சாம்பல்களை தடவி அதன் விற்பனைக்காக அழகுபடுத்துகின்றனர். ஆனால் இதனால் பல வியாதிகளே ஏற்பட வாய்ப்பு உள்ளன என FDA முகவர் அறிவித்துள்ளனர்.
இதனை தடை செய்வதால் தயாரிப்பாளர்களுக்கு எந்த நஷ்டஈடும் கொடுக்க முடியாது. ஆனால் இதனால் பெருமளவு தொழிலாளர்களே பாதிக்கப்படுவதால் மிகவும் கவலையளிப்பதாக உள்ளது என பிரான்ஸ் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த வகையான மிமோலட் சீஸ்க்கு(Mimolet chees) ஏராளமான ரசிகர்கள் அதிகம். இதனை பிடிக்கும் வகையில் 3,000 நபர்கள் பேஸ்புக்கில் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதன் சுவைக்கு அடிமையாகி ஏராளமானோர் கடந்த ஏப்ரல் மாத்தில் நியுயார்க் நகரத்தில் அரசாங்கத்திற்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது குறித்து சீஸ் இறக்குமதியாளர் கூறுகையில் கடந்த 20 வருடங்களாக எந்தவிதமான பிரச்சனையும் இல்லாமல் வாழ்ந்துவிட்டோம். ஆனால் இதனால் ஏதேனும் ஒவ்வாமை ஏற்படுமோ என அச்சுறுத்தலாக உள்ளது என கூறியுள்ளார்

மாணவியின் வாயில் டேப் ஒட்டிய ஆசிரியரால்???


ஜப்பானில் ஆசிரியர் ஒருவர் 7 வயது மாணிவியின் வாயில் டேப் ஒட்டிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஜப்பானில் பள்ளி மாணவ- மாணவிகள் மதிய உணவை தங்கள் வகுப்பறையில் வைத்தே சாப்பிடுவது வழக்கம்.
அவ்வாறு சாப்பிடும் போது, சாப்பாடு பரிமாறும் மாணவிகள் தங்கள் வாய் மற்றும் மூக்கை மறைக்கும் மாஸ்க் எனப்படும் முகக்கவசம் அணியவேண்டும்.
இதனை மீறும் குழந்தைகளை ஆசிரியர்கள் கடுமையாக கண்டிக்கின்றனர்.
இந்நிலையில் வடக்கு டோக்கியோவின் டோச்சிகியில் உள்ள ஒரு பள்ளியில் இன்று மதிய உணவு பரிமாறிய 7 வயது சிறுமி, மாஸ்க் அணியவில்லை.
இதனால் அவரை ஆசிரியர் கண்டித்துள்ளார். அப்போது அந்த சிறுமி தனது மாஸ்க்கை எடுத்து வர மறந்துவிட்டதாக கூறியுள்ளார்.
இதையடுத்து ஆசிரியர் அந்த சிறுமியின் வாயில் இருந்து மற்றவர்களுக்கு கிருமிகள் பரவாமல் தடுக்கும் வகையில் வாயில் டேப் ஒட்டியிருக்கிறார்.
இச்சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து, சம்பந்தப்பட்ட சிறுமி மற்றும் அவரது பெற்றோரிடம் ஆசிரியர் மன்னிப்பு கேட்டுள்ளார்
 

புதன், 3 ஜூலை, 2013

பிராஸ்னனின் செல்ல மகள் மரணம்


ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நடித்து புகழ் பெற்ற பியர்ஸ் பிராஸ்னனின் மகள் சார்லட் பிராஸ்னன் புற்றுநோயால் மரணமடைந்துள்ளார்.
60 வயதாகும் பியர்ஸ் பிராஸ்னனுக்கு இரு மகன்கள் மட்டுமே, மகள் சார்லட்டை சிறு வயதிலேயே தத்தெடுத்து வளர்த்தார்.
இவரது தாயார் காஸென்ட்ரா தனது கணவரைப் பிரிந்து குழந்தையுடன் தனியாக நின்ற போது காஸென்ட்ராவை மணந்து கொண்டு சார்லெட்டை தத்தெடுத்துக் கொண்டார்.
மகள் மீது நிறையப் பிரியம் வைத்திருந்தார் பிராஸ்னன்.
சார்லெட்டுக்கு கருப்பை புற்றுநோய் இருந்தது சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
தனக்கு புற்றுநோய் வந்திருப்பது தெரிந்தும் கூட மனம் தளராத சார்லெட், மிகவும் தைரியத்துடனும், நம்பிக்கையுடனும் சிகிச்சையை தொடர்ந்து வந்தார்.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு சார்லெட்டின் நிலைமை மோசமானது.
இதையடுத்து அவர் வீட்டுக்குக் கொண்டு வரப்பட்டார். கடந்த மாதம் 28ம் திகதி மரணமடைந்தார்.
இத்தகவலை பிராஸ்னன் ஒரு சிறு அறிக்கை மூலம் உலகுக்கு அறிவித்தார்.
அதில், ஜூன் 28ம் திகதி எனது அன்பு மகள் சார்லெட் எமிலி, இறைவனடி சேர்ந்தார். கருப்பை புற்றுநோயால் அவர் மரணமடைந்தார்.
அவர் மரணித்தபோது கணவர் அலெக்ஸ், குழந்தைகள் இசபெல்லா, லூகாஸ், சகோதரர்கள் கிறிஸ்டோபர், சீன் ஆகியோர் உடன் இருந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் தான் நடித்து வரும் நவம்பர் மேன் இன் செர்பியா என்ற படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொண்ட பிராஸ்னன், அதில் வரும் ஒரு சண்டைக் காட்சியில் வழக்கம்போல நடித்துக் கொடுத்தாராம்.
சார்லெட்டின் தாயார் காஸன்ட்ராவும் இதே போலத்தான் புற்று நோய்க்கு தனது 42வது வயதில் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது

 

நாடுகளை உளவு பார்த்ததற்கு மன்னிப்பு கேட்க முடியாது:


மற்ற நாட்டு தூதரகங்களை உளவு பார்த்த விடயத்தில் யாரிடமும் மன்னிப்பு கேட்க தேவையில்லை என அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் பாட்ரிக் வென்ட்ரல் செய்தியாளர்களிடம் கூறுகையில், நாங்கள் பெரும்பாலான நாடுகளுடன் மிகவும் நெருக்கமான நட்புறவுடன் உள்ளோம்.
அவர்களுடனான இந்த தூதரக ரீதியிலான உறவு மேலும் தொடரும். எனவே அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் உள்பட 38 நாடுகளின் தூதரகங்களை உளவு பார்த்த விஷயத்தில் யாரிடம் மன்னிப்புக் கேட்கத் தேவையில்லை.
இது அனைத்து நாடுகளும் மேற்கொள்ளும் வழக்கமான ஒன்றுதான் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ஐரோப்பிய நாடுகளுடன் தாராள வர்த்தக ஒப்பந்தத்தை அமெரிக்க தொடரும். இதுதொடர்பான பேச்சுவார்த்தை இன்னும் ஒருவாரத்தில் தொடங்க உள்ளது.
இந்த ஒப்பந்தம் மூலம் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாட்டு மக்கள் பொருளாதார ரீதியாக மிகவும் பயனடைவார்கள். இதுவே மற்ற நாடுகளுடன் எங்களின் ஒளிவுமறைவற்ற செயல்பாட்டை வெளிப்படுத்துவதற்கு சான்று என்றும் அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே இது தொடர்பாக ஜனாதிபதி ஒபாமா கூறுகையில், ஒரு நாடு மற்ற நாடுகளை உளவு பார்ப்பது என்பது வழக்கமான ஒன்றுதான் என்று தெரிவித்துள்ளார்
 

ஆறுமுகம் தொண்டமானுக்கும் பா.சிதம்பரத்திற்கும் இடையில் பேச்சுக்கள்!


இந்தியா சென்றுள்ள சிறீலங்கா அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் தலையிலான குழுவினருக்கும் இந்திய நிதிஅமைச்சர் பா.சிதம்பரத்திற்கம் இடையிலான பேச்சுக்கள் நடைபெற்றுள்ளது.
நேற்று மாலை இந்திய நிதிஅமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் கடந்த மாதம் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள தொழிலாளர் காங்கிரசின் குழுவினர் இந்தியா காங்கிரஸ் கட்சி தலைவி சோனியாவுடன் கலந்துரையாடியுள்ளார்கள்
இதன் தொடர்ச்சியான பேச்சுக்களே சிதம்பரத்துடன் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.
இதன்போது இந்திய வம்சாவளி தோட்ட மக்களுக்கான வீடமைப்பு,மாணவர்களுக்கான கல்வி, இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு,தொழில்பயிற்சி,தோட்ட மருத்துவமனைகள் மற்றும் பாடசாலைகளின் அபிவிருத்தி தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 2 ஜூலை, 2013

மைதானத்தில் தோன்றிய திடீர் புத்தர் சிலை!


மட்டக்களப்பு ஓட்டமாவடிப்பகுதியில் பிறைந்துரைச்சேனை அஸ்ஹர் வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் திடீர் என புத்தர் சிலை இருந்ததால் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் வாழைச்சேனை காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளது.
பிறைந்துரைச்சேனையில் உள்ள அஸ்ஹர் வித்தியாலயம் மற்றும் சாதுலியா வித்தியாலயம் என்பவற்றுக்கு உள்ள ஒரே விளையாட்டு மைதானம் இம்மைதானமாகும். இம்மைதானம் வாழைச்சேனை புத்த ஜயந்தி விகாரைக்கு அருகில் அமைந்துள்ளது.
கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக பாடசாலைகளின் விளையாட்டு நிகழ்ச்சிகள் பிரதேச விளையாட்டுக் கழகங்களின் விளையாட்டுப் போட்டிகள் கலை கலாச்சார நிகழ்ச்சிகள் இங்கு நடைபெற்று வந்தன.
விளையாட்டு மைதானத்திற்கு அருகில் உள்ள புத்த ஜயந்தி விகாரையின் விகாராதிபதியால் 2010ம் ஆண்டு மார்ச் மாதம் 01ம் திகதி சுற்றுமதில் உடைக்கப்பட்டு இக்காணி புத்த ஜயந்தி விகாரைக்குரிய காணி என்றும் இதற்குள் வெளியாட்கள் எவரும் விளையாட வரக்கூடாது என்று அறிவித்தார்.
இது தொடர்பில் பாடசாலை நிருவாகத்தால் வாழைச்சேனை பொலிஸ் முறைப்பாடு செய்யப்பட்டு வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் வழங்குத் தொடரப்பட்டு 11 தவணைகள் இடம்பெற்றதன் பின்னர் நீதிமன்றத்தால் விகாரைக்குரிய இடம் அல்ல என்று பாடசாலை மைதானம் என்று சுட்டிக்காட்டி 2013ம் ஆண்டு ஜீன் 25ம் திகதி தீர்ப்பளிக்கப்பட்டது.
இன்று திங்கட்கிழமை அதிகாலை மீண்டும் புத்த ஜயந்தி விகாரையின் விகாராதிபதியினால் மைதானத்தின் நடுவில் மேசையின் மீது புத்தர் சிலை ஒன்றை வைத்துள்ளதனால் குழப்பம் அடைந்த பாடசாலை நிருவாகம் வாழைச்சேனை காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளனர்

யாழில் சட்டவிரோத மணல் அகழ்வில் படையினர்!


வலி.கிழக்கின் அக்கரை கிராம கடற்கரையோரங்களில் படையினர் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டு வருகின்றனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தேசிய பாதுகாப்பு என்ற அடிப்படையில் படையினர் என்னத்தையும் கொண்டு போகலாம் என்ற நிலையினை ஏற்றுக் கொள்ள முடியாது சட்டவிரோத மணல் அகழ்வினை காவல்துறையினரும் கண்டு கொள்ளாமல் இருக்கின்றனர்.இப்பகுதி நீண்ட காலமாக படை கட்டுப்பாட்டில் இருந்தது. இப்போது மீள்குடியேற்றத்திற்காக அந்த பகுதியில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சில பகுதிகளில் மிதிவெடி உள்ளதாக மக்கள் அச்சங் கொண்டிருந்ததால் முழுமையாக அப்பகுதியை கண்ணிவெடியகற்றித் தருமாறு மக்கள் கோரிக்கை விடுத்ததோடு அயல் கிராமங்களிலும் தற்காலிகமாகத் தங்கியுள்ளனர்.பொது மக்களது உழவு இயந்திரங்களைப் பாவித்து படையினர் மணல் அகழ்ந்து கொண்டு செல்கின்றனர்.
மணல் அள்ளப்படுவதற்குரிய எந்த அனுமதிகளும் உரியவாறு எடுக்கப்படவில்லை. கடற்கரையிலுள்ள இந்த மணலானது அகழ்ந்து எடுக்கப்படுவதானது பாரிய விளைவுகளை ஏற்படுத்தும். இதனைப் பொது மக்கள் கேட்டபோது பிரிகேடியரிடம் கேளுங்கள் அல்லது இராணுவத் தலைமையத்திடம் கேளுங்கள் என்ற பதில்கள் சொல்லப்படுகின்றது.
படையினர் தமக்கான புதிய முகாம்கள் அமைப்பதற்கும் புதிய பல விடயங்களைச் செய்வதற்கும் இந்த மணலைப் பாவிக்கின்றனர். படையினர் அடிக்கும் மணல் கொள்ளைக்கு இணையாக உழவு இயந்திரங்களை படையினருக்க வழங்குபவர்களும் கொள்ளை அடிக்கின்றனர்.அகழ்ந்த மணலை இராணுவம் கொண்டு செல்கின்றது என்று காவல்துறையினரும் கண்டு கொள்வதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்