siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

சனி, 12 ஜூலை, 2014

நெதர்லாந்து அமைச்சர் இலங்கைக்கு உயர்மட்ட விஜயம்

நெதர்லாந்தின் வர்த்தக துணை அமைச்சர் சைமன் ஸ்மிட்ஸ் எதிர்வரும் 14ம் திகதி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

டச்சு அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்வது இதுவே முதல் தடவை என கொழும்பில் அமைந்துள்ள நெதர்லாந்து தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு எதிர்வரும் 14ம் திகதி விஜயம் செய்யும் அமைச்சர் ஸ்மிட்ஸ், 17ம் திகதி வரை தங்கியிருப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அவரது இந்த விஜயம், இலங்கையில் வளர்ந்து வரும் பொருளாதார சந்தை வாய்ப்புக்களை முதல்தரத்தில் கொண்டு வர உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன், அரசாங்கத்தின் சிரேஸ்ட அமைச்சர்களையும் தனியார் துறையின் அதிகாரிகளையும் ஸ்மிட்ஸ் தனது விஜயத்தின் போது சந்திக்கவுள்ளார்.

இவ்வமைச்சரின் முக்கிய சந்திப்புக்கள் டச்சு நிறுவனங்களுடன் நடைபெறவுள்ளது. இந்த டச்சு நிறுவனங்கள் நீர்வளம் மற்றும் சுகாதாரத் துறையில் தங்களது நிபுணத்துவத்தை அளிக்கும் என நெதர்லாந்து தூதரகம் தெரிவித்துள்ளது.

மற்றைய செய்திகள்

வியாழன், 10 ஜூலை, 2014

பல தடைகளையும் தாண்டி பிரம்ரன் நகரில் ஈழம் சாவடி..

 கனடாவில் ஒன்;டாரியோ மாகாணத்தில் பிரம்ப்டன் மாநகரில் கரபிராம்(carabram)நிகழ்வுகளில் தமிழர் கலை பண்பாட்டு வாழ்வை பிரதிபலிக்கும் கண்காட்சியும் நடன இசை நிகழ்ச்சிகளும் பிரம்ப்டன் சொக்கர் சென்டரில் ( டிக்ஸ்சி - சண்டல்வூட் பார்க்வே சந்தியில்) வருகின்ற வெள்ளிகிழமை சனிக்கிழமை மற்றும் ஞாயிற்று கிழமைகளில்( ஐ_லை மாதம் 11 12 13 திகதிகளில்) நடைபெறவிருக்கின்றது. வருடம் தோறும் நடைபெறும் கரபிரம்) ஏனப்படும் பல்நாட்டு கலைகலாச்சார பண்பாட்டு விழாவில் பிரம்டன் வாழ்தமிழ் மக்கள் பிரம்ட்ன் தமிழ் ஒன்றியம் சார்பாக இரண்டாம் வருடமாக இம்முறையும் தமிழ் கலை கலாச்சார வரலாற்று பண்பாட்டு பிரதிபலிக்கும் வகையில் வெகு சிறப்பாக ஆயத்தங்களை செய்துள்ளார்கள்.
  
கடந்த வருடம் கரபிராம் நிகழ்வில் ஏற்பாடு செய்யப்பட்ட ஈழம் சாவடிக்கு 8000 க்கும் மேற்பட்ட பல்லின மக்கள் தரிசித்து தமிழர் கலை பண்பாட்டினை அறிந்து கொள்வதிலும் தமிழரின் சுவை நிறைந்த உணவு வகைகளை விரும்பி உண்பதிலும் இசை நடன நிகழ்வுகளில் ஆர்வமுடன் கண்டு களிப்பதிலும் திருப்தி அடைந்தார்கள்.
கனடாவின் மத்திய மாநில நகர அரசுகளிலிருந்தும் பல நாடாள மன்ற உறுப்பினர்கள் தமிழ்மக்களும் அதிகளவில் கலந்து கொண்டதோடு விடுமுறைக்கென் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்த தமிழர்களும் ஈழம் சாவடியை தரிசித்து ஆதரவு வழங்கினார்கள். இந்த வருடமும் பாரிய அளவில் தமிழர் கலை பண்பாடு இலக்கியம் தமிழர் மருத்துவம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகைகளில் கண்காட்சியும் உணவு உடை தொடர்பான பல சாவடிகளும் சிறந்த நடனக் கல்லூரிகளிலிருந்து மாணவ மாணவிகளின் கலை நிகழ்வுகளும் பல இசைக்குழுக்களின் இசைநிகழ்ச்சிகளும் சிறுவருக்கான பொழுது போக்கு விளையாட்டுக்களும் தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்களும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. தமிழ் மக்கள் அனைவரையும் ஈழம் சாவடி நிகழ்வுகளில் கலந்து விழாவை சிறப்பிக்க அழைக்கிறார்கள் பிரம்பன் வாழ் ஒன்றிய மக்கள்.
வாருங்கள் பாருங்கள் மகிழ்ந்து செல்லுங்கள்
விழா நிகழ்வுகள்
ஐீலை 11�� 2014 (வெள்ளிக்கிழமை) மாலை 6:00 தொடக்கம் இரவு 12:00 மணி வரை
ஐீலை 12�� 2014 (சனிக்கிழமை) மதியம்; 12:00 மணி தொடக்கம் இரவு 12:00 மணி வரை
ஐீலை 13�� 2014 (ஞாயிறுக்கிழமை) நண்பகல் 1:00 மணி தொடக்கம் மாலை 6:00 வரை மற்றைய செய்திகள்




 

புதன், 9 ஜூலை, 2014

தொடர் மழை , மண் சரிவு - 73 பேரை காணவில்லை!

சீனாவில் இன்று ஏற்பட்ட பயங்கர மண் சரிவில் 73-க்கும் மேற்பட்டோர் மண்ணில் புதைந்துள்ளனர். இதுவரை 10-க்கும் மேற்பட்டோரின் உடல்கள் எடுக்கப்பட்டுள்ளன. மீதிவுள்ளவரின் நிலை என்ன? என்பது இதுவரை தெரியவில்லை. சீனாவில் கடந்த சில நாட்களாகவே தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், மக்களுக்கு போக்குவரத்து பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இன்று, அதிகாலை சீனாவில் உள்ள யுனான் மாகாணத்தில் உள்ள லோங்யாங் மாவட்டத்தில் திடீரென்று மண்சரிவு ஏற்பட்டது.
இதில் 73 க்கும் மேற்பட்டோர் மண்ணில் புதைந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழிந்துள்ளனர். மண்ணில் புதைந்தவர்களில் 25 பேரை மட்டும் காப்பாற்றியுள்ளனர். மீதமுள்ளவரின் நிலை இதுவரை தெரியவில்லை. மீண்டும் மண் சரிவு ஏற்படும் என்ற பயத்தால், மீதமுள்ள மக்களை பாதுகாப்பான இடங்களில் மீட்பு குழுவினர் தங்க வைத்துள்ளனர். தொடர் மழையால் உலகில் பல இடங்களில் தொடர்ந்து மண் சரிவு ஏற்பட்டு, அதனால் பலர் உயிரிழக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
 
மற்றைய செய்திகள்

 

பிரதேசப் பொலிசார் விடுத்துள்ள வழிப்புணா்வு எச்சரிக்கை!

ரொறன்ரோவில் - Durham என அழைக்கப்படும் பிரதேசத்தில் பல வீட்டுரிமையாளர்களுக்கு தொலைபேசி மூலமாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருப்பதாகதத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. குறிப்பாக அவர்கள் ஹைட்டோவிற்கு கிட்டத்தட்ட 1000 டொலர்கள் வரையில் செலுத்தவேண்டியிருக்கின்றது எனவும் அதற்கான பணத்தை அனுப்பாவிடின் அவர்களது மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது என அவர்கள் பயமுறுத்தப்படுகின்றார்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. அத்துடன் வீட்டடைமையாளர்கள் மட்டுமல்ல தொழில் உரிமையாளர்களுக்கும் இவ்வாறான பயமுறுத்தல்கள் தொலைபேசி மூலகமாகக் கிடைத்திருக்கின்றன எனவும் பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்
Durham பிரதேசப் பொலிசார் இவ்வாறன பல முறைப்பாடுகள் தமக்குக் கிடைத்திருப்பதாகவும் தாம் அவற்றைப் பரிசீலனை செய்துவருவதாகவும் தெரிவித்திருக்கின்றனர். தொலைபேசி மூலமாக மிரட்டுபவர்கள் பொதுமக்களின் credit card or prepaid credit card போன்றவற்றைப் பாவித்து உடனடியாக குறிப்பிட்ட பணத்தைச் செலுத்தும்படியும் அவ்வாறு அவர்கள் செய்யாவிடின் அவர்களின் மின்சாரம் துண்டிக்கப்பம் எனப் பயமுறத்தி வருகின்றார்கள் எனத் தெரிவித்திருக்கின்றார்கள்.
குறிப்பிட்ட இந்த மோசடி நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் மக்களுக்கு நம்பகத்தன்மை ஏற்படுவதற்கான வகையில் தமது தொலைபேசியில் answering machine and toll-free number போன்ற நடைமுறைகளை அமைத்திருக்கின்றார்கள் எனப் பொலிசார் தெரிவித்திருக்கின்றனர்.
இவ்வாறான பயமுறுத்தும் தொலைபேசி அழைப்பு கிடைத்தால் பணத்தினைச் செலுத்துவதற்கு நடவடிக்கை செய்வதற்கு முன்பாக கடந்த மாதத்தின் கட்டனசீட்டினைப் பரிசீலனை செய்யும்படி மக்கள் கேட்கப்படுகின்றார்கள். அத்துடன் 1-888-579 FREE யுடன் தொடர்பு கொண்டு விபரத்தைத் தெரிவிக்கும்படியும் பொலிசார் அறிவுறுத்தியுள்ளார்கள் எனத் தெரிகிறது.

மற்றைய செய்திகள்

திங்கள், 7 ஜூலை, 2014

உளவு சொல்லும் ஜேர்மன் ஊழியர்கள்?

ஜேர்மனியின் வெளிநாட்டு புலனாய்வு சேவை ஊழியர் ஒருவர் அமெரிக்காவிற்கு உளவு சொல்வதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யபட்டுள்ளார்.
பாராளுமன்ற விவகாரத்தில், ஜேர்மனியின் வெளிநாட்டு புலனாய்வு சேவை ஊழியர் ஒருவர், அமெரிக்கவின் வாஷிங்டன் அரசுக்கு உளவு சொல்வதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.
கைதுசெய்ய பட்ட அந்த 31 வயது ஊழியர், பெயர் குறிப்பிடாத மையத்திற்கு, வெளிநாட்டு புலனாய்வு சேவை செய்து வருவதாக அரசு தரப்பில் குறிப்பிடபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், ஊடகங்கள் அந்த நபர் அமெரிக்க புலனாய்வு சேவை மையத்திற்கு தகவல் வெளியிட்டுள்ளதாக குறிப்பிடுகின்றன.
அமெரிக்கா புலனாய்வு சேவை மையம், ஜேர்மனிய ஊழியர்களை குறி வைத்து உளவு சொல்வதற்கு ஆட்களை சேகரிப்பதாக வெளியான செய்திகள
அடுத்து இந்த நபர் கைது செய்யபட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் இது போன்ற விடயங்களில் ஈடுபட வேண்டாம் என மற்ற ஊழியர்களை எச்சரித்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
மற்றைய செய்திகள்
 
 



 
                     

ஞாயிறு, 6 ஜூலை, 2014

ஆசிரியரை கத்தியால் குத்திக் கொன்ற மாணவனின் தாய்

katthi
  பிரான்சில் பள்ளி வகுப்பறையில் ஒரு மாணவனின் தாய், ஆசிரியையை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு பிரான்சில் உள்ள அல்பி என்ற நகரில் உள்ள தொடக்கப் பள்ளி ஒன்றில் ஒரு மாணவனுடன், அவனது தாயும் பள்ளிக்கு வந்துள்ளார். அவர் தன் மகன் படிக்கும் வகுப்பறைக்குள் சென்று, சிறிது நேரத்தில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஆசிரியையை குத்தியுள்ளார். இதனால் பலத்த காயம் அடைந்த அந்த ஆசிரியை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனையடுத்து, கத்தியால் குத்திய பெண் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இச்சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்க கல்வித்துறை மந்திரிக்கு பிரான்ஸ் அதிபர் ஹொலாண்டே உத்தரவிட்டுள்ளார்.
 
மற்றைய செய்திகள்

சனி, 5 ஜூலை, 2014

அமெரிக்காவுடன் இணைய ரஷ்யா போடும் திட்டம்?

இங்கிலாந்திடமிருந்து சுதந்திரம் பெற்ற அமெரிக்கா, ஆண்டுதோறும் சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டாடி வருகிறது.
இந்த சுதந்திர தினத்தையொட்டி அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் நல்வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில் ரஷ்யாவும், அமெரிக்காவும் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ரஷ்யா ஜனாதிபதி மாளிகை விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,
சர்வதேச அளவில் ஸ்திரத்தன்மை, பாதுகாப்பு, ஒத்துழைப்பு ஆகியவற்றை ஒட்டுமொத்த உலகின் நலனையொட்டி பாதுகாக்கிற சிறப்பான பொறுப்பு ரஷ்யாவுக்கும், அமெரிக்காவுக்கும் உண்டு என ஒபாமாவுக்கு அனுப்பிய வாழ்த்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1776ம் ஜூலை நான்காம் திகதி இங்கிலாந்திடம் இருந்து அமெரிக்கா சுதந்திரம் அடைந்தமை குறிப்பிடத்தக்கது
மற்றைய செய்திகள்

வெள்ளி, 4 ஜூலை, 2014

இந்திய- சீன ராணுவ தளபதிகள் முக்கிய பேச்சுவார்த்தை

எல்லைப் பகுதியில் அமைதியை பராமரித்தல், புதிய எல்லை பாதுகாப்புத் திட்டம் உள்பட பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் குறித்து சீன ராணுவத் தளபதியுடன் இந்திய ராணுவ தலைமைத் தளபதி விக்ரம் சிங் ஆலோசனை நடத்தினார்.
கடந்த 9 ஆண்டுகளில் சீனாவுக்கு சென்றுள்ள முதல் இந்திய ராணுவ தலைமைத் தளபதியான ஜெனரல் விக்ரம் சிங், அந்நாட்டு ராணுவ தலைமைத் தளபதி ஃபாங் ஃபெங்குயியை பெய்ஜிங்கில் புதன்கிழமை சந்தித்துப் பேசினார்.India_china
இந்தச் சந்திப்பின்போது இருநாட்டு ராணுவத்தினரிடையேயான கூட்டுப் பயிற்சிகளை அதிகரித்தல், கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட எல்லை பாதுகாப்பு கூட்டு ஒப்பந்தம் உள்பட உயர்நிலை அதிகாரிகளிடையிலான தகவல் பரிமாற்றங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக இந்திய தரப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக, பெய்ஜிங் சென்றடைந்த விக்ரம் சிங்கை வரவேற்று ஃபாங் ஃபெங்குயி கூறுகையில், “இந்தியாவில் புதிய அரசு பதவியேற்றபிறகு முதன்முறையாக வந்துள்ள உங்கள் தலைமையிலான மூத்த ராணுவ அதிகாரிகள் குழுவின் வருகை இருநாட்டு உறவை வலுப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது’ என்றார்.
அதற்கு, “சீனாவுடனான உறவுக்கு இந்தியா அதிகபட்ச முன்னுரிமை அளித்துள்ளதோடு, இருநாட்டுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவும் உறுதி பூண்டுள்ளது’ என்று விக்ரம் சிங் பதில் அளித்தார்.

மற்றைய செய்திகள்
 

வியாழன், 3 ஜூலை, 2014

விமானத்தை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா: 290 பேர் பலி (காணொளி, )

அமெரிக்க போர்க் கப்பல் பாரசீக வளைகுடா மீது பறந்த ஈரான் நாட்டுக்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியது. இதில் பயணம் செய்த 290 பேரும் கொல்லப்பட்டனர்.
இன்று வரலாற்றில் நடந்தவை,
* 1778 - புருசியா ஆஸ்திரியாவின் மேல் படையெடுத்தது.
* 1848 - அமெரிக்கக் கன்னித் தீவுகளில் பீட்டர் வொன் ஸ்கொல்ட்டன் என்பவரால் அடிமைகள் விடுவிக்கப்பட்டனர்.
* 1867 - தமிழ்நாடு விழுப்புரம் வளவனூர் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
* 1866 - புருசியாவின் வெற்றியுடன் ஆஸ்திரிய- புரூசியப் போர் முடிவுக்கு வந்தது.
* 1944 - இரண்டாம் உலகப் போர்: பெலரஸ்சின் தலைநகர் மின்ஸ்க் சோவியத் படையினரால் நாசி ஜெர்மனியிடம் இருந்து விடுவிக்கப்பட்டது.
* 1969 - சோவியத்தின் என்1 என்ற ஏவுகணை ஏவுதளத்திலேயே வெடித்துச் சிதறியது.
* 1970 - பிரிட்டன் விமானம் ஸ்பெயினில் மலையொன்றுடன் மோதியதில் 113 பேர் கொல்லப்பட்டனர்.




மற்றைய செய்திகள்
 

புதன், 2 ஜூலை, 2014

முன்னாள் ஜனாதிபதி பொலிஸ் காவலில் வைப்பு

  பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசி மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், ஊழல் குற்றச்சாட்டு வழக்கு, நீதிமன்றத்துக்கு போகுமா என்பது குறித்து தகவல் தருவதற்காக ஒரு மாஜிஸ்திரேட்டுக்கு உயர் பதவி பெற்றுத்தருகிறேன் என வாக்குறுதி

அளித்துள்ளார். இந்த விவகாரத்தில் இரு தினங்களுக்கு முன்பு அவரது சட்டத்தரணி மற்றும் இரு நீதவான் நீதிமன்ற நீதிபதிகளிடம் பொலிஸார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில், சர்கோசியை விசாரணைக்கு ஆஜராகுமாறு பொலிஸார் அழைப்பாணை அனுப்பினர். அதன்படி நேற்று அவர் பாரீசில் பொலிஸார் முன்பு ஆஜர் ஆனார். அவரை காவலில் வைத்து பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.

 அவரை மேலும் ஒரு நாள் தங்கள் காவலில் வைத்து பொலிஸார் விசாரணை நடத்தவுனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. விசாரணைகளின் பின்னர் அவர் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்படலாம் அல்லது விடுவிக்கப்படலாம். பிரான்சில் ஜனாதிபதியாக இருந்த ஒருவர் பொலிஸ் காவலில்

வைக்கப்படுவது இதுவே முதல் முறை. 2017ம் ஆண்டு நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாக சர்கோசி சமீபத்தில் அறிவித்திருந்தார். இப்போது பொலிஸ் விசாரணையில் அவர் சிக்கி இருப்பது, மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அவருடைய முடிவுக்கு விழுந்த அடியாகக் கருதப்படுகிறது.

மற்றைய செய்திகள்