siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

ஞாயிறு, 20 ஜூலை, 2014

உச்சிமாநாடு: ரஷ்ய ஜனாதிபதிக்கு எதிராக பலத்த சர்ச்சை

அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள ஜீ-20 உச்சிமாநாட்டில் ரஷ்ய ஜனாதிபதி விளாத்திமிர் புத்தின் கலந்து கொள்வாரா என்பது தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் ரஷ்ய ஜனாதிபதி கலந்து கொள்வது தொடர்பில் பொறுத்திருந்து தான் தீர்மானிக்க வேண்டுமென அவுஸ்திரேலிய பிரதமர் ரோனி அபொட் தெரிவித்துள்ளார்.
மலேசியன் எயார்லைன்ஸ் விமானத்திற்கு நேர்ந்த கதியைத் தொடர்ந்து, அவுஸ்திரேலிய அரசாங்கம் ரஷ்யத் தலைவருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுவடைந்து வருகின்றன.
நடுவானில் பறந்து கொண்டிருந்த எம்எச்-17 விமானம் ஏவுகணைத் தாக்குதலுக்கு இலக்காகி உக்ரேனின் கிழக்குப் பகுதியில் வீழ்ந்து நொருங்கியது. இந்த அசம்பாவிதத்தில், 28 அவுஸ்திரேலியர்கள் அடங்கலாக, விமானத்தில் இருந்த 298 பேரும் பலியாகியிருந்தார்கள்.
ரஷ்யாவின் ஆதரவுடைய கிளர்ச்சியாளர்கள் தான் தாக்குதலை நடத்தியதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் குற்றஞ்சாட்டுகிறது.
இது பற்றிய சர்வதேச விசாரணைகளுக்கு ரஷ்யா ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் அரசாங்கம் கூறகிறது.
ரஷ்யா ஒத்துழைக்காவிட்டால், புத்தினை அவுஸ்திரேலியாவிற்குள் அனுமதிக்கக்கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் பில் ஷோர்ட்டன் தெரிவித்தார்.
ஆனால், ரஷ்யா எவ்வாறு நடந்து கொள்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்க விரும்புவதாக அவுஸ்திரேலிய பிரதமர் குறிப்பிட்டார்.
அவுஸ்திரேலியா தன்மானமுள்ள நாடாகும். அத்துடன், அவுஸ்திரேலியாவை நாடும் விருந்தாளிகள் அந்நாட்டின் மீது நல்லெண்ணம் கொண்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

மற்றைய செய்திகள்

சனி, 19 ஜூலை, 2014

வறுமைக் கோட்டுக்கு கீழேயுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை

ஜப்பானில் குழந்தைளின் வறுமை நிலை குறித்து எடுக்கப்பட்ட நலத்துறை அமைச்சகத்தின் கணக்கீடு இந்த ஆண்டு அதிக பட்ச உயரத்தைத் தொட்டுள்ளதாக அரசுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்ற ஆண்டைவிட இப்போது 16.3 சதவிகிதம் அதிகரித்துக் காணப்படும் இந்த நிலையானது கணக்கீடு தொடங்கப்பட்ட முப்பதாண்டுகளில் இதுவரை இல்லாத உயர்ந்தபட்ச சதவிகிதம் என்று கூறப்படுகின்றது. அதுமட்டுமின்றி, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் 34 உறுப்பினர் நாடுகளில் ஜப்பானிலும் குழந்தை வறுமை அதிக அளவில் இருப்பதாக இந்தக் கணக்கீடுகள் தெரிவிக்கின்றன. மெக்சிகோ, இஸ்ரேல், சிலி, அமெரிக்கா, துருக்கி ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக ஜப்பான் இதில் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது
ஒரு நபருக்கான ஆண்டு நிகர வருமானம் 1.22 மில்லியன் யென்னுக்குக் குறைவாக (12000 அமெரிக்க டாலர்) உள்ள குடும்பங்களில் வளரும் குழந்தைகளே இந்தக் கணக்கெடுப்பில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. ஒரு பெற்றோராக இருக்கும் குடும்பங்களில் பாதிக்கு மேல் வறுமை நிலைக்குக் கீழிருப்பதுவும், பல குழந்தைகள் உள்ள குடும்பங்களில் மூன்றில் இரண்டு சதவிகிதத்தினர் தங்களின் பொருளாதார நிலை மிகவும் மோசமாக இருப்பதாகக் கருதுவதும் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று வெளியிடப்பட்ட இந்தக் கணக்கெடுப்பில் தெரியவந்தது.
மக்களின் ஊதிய விகிதங்களில் தென்பட்ட இந்த மிகப்பெரிய இடைவெளி நீண்டகாலமாக சமத்துவ சமுதாயத்தைக் கொண்டுள்ளதாக பெருமைப்பட்டுக்கொள்ளும் ஜப்பானின் நிலையை வெளிச்சம் போட்டுக்காட்டுவதாக அமைந்துள்ளது. கடந்த இருபதாண்டுகளாக காணப்பட்டுவரும் நலிவுற்ற பொருளாதார நிலை பெண்கள் குறைந்த அளவு ஊதியம் பெறும் ஒப்பந்த நிலையை இங்கு ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகின்றது. குடும்ப வருமானக் குறைவே குழந்தைகளின் வறுமை சதவிகிதத்தை உயர்த்தியுள்ளது என்று நலத்துறை அமைச்சகம் குறிப்பிடுகின்றது.
இந்த நிலை ஆச்சரியத்தை அளிக்கவில்லை என்று கூறும் மசாடோ ஹிராயு என்ற குழந்தை வறுமை ஒழிப்பு ஆர்வலர் இந்தப் பிரச்சினையைக் கையாளுவதில் செயலாற்ற நிலையை உடைய அரசினால் ஏற்படும் இயற்கையான முடிவு இதுவாகத்தான் இருக்கும் என்று குறிப்பிடுகின்றார்.
 
மற்றைய செய்திகள்

வியாழன், 17 ஜூலை, 2014

செர்பியா எல்லையில் தோன்றியது பாரிய பள்ளம்! !

 செர்பிய நாட்டின் யாமல் தீபகற்பகத்தில் திடீரென மெகா பள்ள தோன்றியுள்ளது பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யா - செர்பியா எல்லையான வடமேற்கு மாகாணத்தில் யாமல் தீபகற்ப பகுதி உள்ளது. இயற்கை எரிவாயு அதிகம் உள்ள நிலப்பரப்பு இப்பகுதி ஆகும். உலகத்தின் முடிவு எனவும் அழைக்கப்படுகிறது. இப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் மெகா சைஸ் பள்ளம் தோன்றியுள்ளது. 80 மீ அகலம் கொண்டதாகவும் இருந்தது.
   அதன் ஆழம் குறித்து விஞ்ஞானிகள் ஆய்வில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். திடீரென பள்ளம் தோன்றியது விஞ்ஞானிகளுக்கு புரியாத புதிராக உள்ளது.பூமிக்கடியில் உள்ள பாறைகள் இடம் பெயர்வதே இப்பள்ளத்திற்கு காரணம் எனவும் கூறப்படுகிறது.
விஞ்ஞானிகள் அதிர்ச்சியில்!

மற்றைய செய்திகள்

இராக்கில் தவித்த புதுவை இளைஞர் மீட்பு

இராக்கில் வேலைக்காகச் சென்று, உள்நாட்டுப் போரால் சிக்கித் தவித்த புதுவையைச் சேர்ந்த இளைஞர் மத்திய அரசால் மீட்கப்பட்டு புதன்கிழமை வீடு திரும்பினார்.
புதுவை பெரியார் நகர் பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்தவர் ஷியாபுதீன் (35). கடந்த பிப்ரவரி 22-ஆம் தேதி இராக் சென்ற அவர், குருதீஸ்தான் பகுதியில் உள்ள எக்ஸ்பெர்ஸ் என்ற தனியார் நிறுவனத்தில், பராமரிப்புப் பிரிவில் பணியாற்றி வந்தார்.
அங்கு உள்நாட்டுப் போர் மூண்டதால், அந்த நிறுவனம் மூடப்பட்டது. இதனால் வேலையின்றியும், அங்கிருந்து வெளியே செல்ல வழியின்றியும் அவர் தவித்து வந்தார்.
ஷியாபுதீனை மீட்கக் கோரி அவரது மனைவி மரியம்பி, தனது 2 பிள்ளைகளோடு வந்து, கடந்த ஜூன் 23-ஆம் தேதி புதுவை முதல்வர் ரங்கசாமியிடம் மனு அளித்தார்.
இந்நிலையில், மாநில அரசின் அறிவுறுத்தலின் பேரில், மத்திய வெளியுறவுத் துறையின் முயற்சியின் காரணமாக, புதுவையைச் சேர்ந்த ஷியாபுதீனும் தமிழகத்தைச் சேர்ந்த சிலரும், இராக்கிலிருந்து புதன்கிழமை தாயகம் திரும்பினர்.
காலையில் சென்னை விமான நிலையம் வந்த ஷியாபுதீன், அங்கிருந்து பேருந்தில் புதுவைக்கு வந்து சேர்ந்தார். அவரை மனைவி மரியம்பி மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்றனர்.
ஷியாபுதீனை மீட்க உதவிய மத்திய, மாநில அரசுகளுக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர். இதனையடுத்து, முதல்வர் ரங்கசாமியை சந்தித்து, ஷியாபுதீன் நன்றி தெரிவித்தார். மேலும், இராக்கில் தான் பணியாற்றிய நிறுவனத்தில் முடங்கியுள்ள பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை மீட்டுத் தர வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார்.

மற்றைய செய்திகள்

 

ஜனாதிபதி இரங்கல் மரணத்தை தழுவிய இராணுவ வீரர்...

பிரான்ஸ் நாட்டில் இராணுவ வீரர் ஒருவர் உளவு பணியிலிருந்த போது இறந்திவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரான்சின் வடக்கு மாலி நகரில் நேற்று உளவுப்பணியில் இராணுவ வீரர் ஒருவர் உளவுப்பணியில் ஈடுபட்டிருந்தபோது தற்கொலை செய்து கொண்டதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த இறப்பிற்கு பிரான்ஸ் ஜனாதிபதி மாளிகை வருதத்தை தெரிவித்துள்ளது.மேலும் இறந்த வீரரின் குடும்பத்திற்கு இரங்கலை தெரிவித்த ஜனாதிபதி ஹோலாண்டே அவருக்கு புகழாரமும் சூட்டியுள்ளார்.
இதேபோல் கடந்த ஜனவரி 2013ம் ஆண்டிலிருந்து இதுவரை மொத்தம் 9 வீரர்கள் மரணம் அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
மற்றைய செய்திகள்

செவ்வாய், 15 ஜூலை, 2014

புத்தகத்தில் இடம் பிடித்த உலகின் மிக உயரமான டீன் ஏஜ் பெண்!

துருக்கியை சேர்ந்தவர் ருமேசா கெல்கி (17). இவர் 11வது வகுப்பு படித்து வருகிறார். இவரது உயரம் 7 அடி 9 இஞ்ச் ஆகும். வீவர் சிண்ட்ரோம் என்ற அபூர்வ நோயால் ருமேசா பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் தான் இவர் அதிக உயரம் வளர்ந்துள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அதுவே அவருக்கு பெருமை சேர்த்துள்ளது. அதாவது உலகிலேயே மிக உயரமான 'டீன்ஏஜ்' பெண்
அதற்காக சமீபத்தில் அவரது சொந்த ஊரான சப்ரான் போலுவில் பாராட்டு விழா நடந்தது. அப்போது அவருக்கு அதற்கான கின்னஸ் சான்றிதழ் வழங்கப்பட்டது. அந்த விழாவில் ருமேசா கூறியதாவது..
"நான் வெளியில் செல்லும் போது அனைவரும் என்னை வினோதமாக பார்ப்பார்கள். அதற்காக நான் மனசங்கடப்படுவதில்லை. மாறாக பெருமை கொள்வேன். உயரமாக இருக்கும் நான் மற்றவர்களை குனிந்து பார்ப்பதில் எனக்கு அலாதியான மகிழ்ச்சி ஏற்படும். ஒரு சில சிறந்தவர்களால் மட்டுமே கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற முடியும். அந்த வகையில் நானும் அதில் இடம் பிடித்து இருக்கிறேன் என்பதில் எனக்கு பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது" என்றார்.
 
மற்றைய செய்திகள்

 

செய்மதி தொலைபேசிகள் எப்படிக் கிடைத்தன?

புகலிடம் தேடி வந்த அகதிகளிடம் செய்மதித் தொலைபேசிகள் இருந்தமை குறித்து அவுஸ்திரேலியா விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அண்மையில் அவுஸ்ரேலிய கடற்பரப்பை படகு மூலம் சென்றடைந்த 153 அகதிகளிடம் செய்மதித் தொலைபேசிகள் காணப்பட்டன. இது தொடர்பில் அவுஸ்ரேலிய அரசாங்கம் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அகதிகள் சட்டத்தரணிகளுடன் செய்மதி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டுள்ளனர். அவர்களுக்கு எவ்வாறு சட்டத்தரணிகளின் தொலைபேசி இலக்கங்கள் கிடைக்கப் பெற்றன என்பது குறித்தும் விசாரணை செய்யப்பட உள்ளது.
   இந்த தொலைபேசி உரையாடல்களை அவுஸ்திரேலிய புலனாய்வுப் பிரிவினர் பதிவு செய்துள்ளனர். அகதிகளின் இந்த பயணம் திட்டமிட்ட அடிப்படையிலான சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கை என அவுஸ்ரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மற்றைய செய்திகள்

திங்கள், 14 ஜூலை, 2014

சர்ச்சையில் சிக்கிய பிரான்சின் முன்னாள் ஜனாதிபதி

பிரான்சின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோசி  லஞ்ச ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார்.
2007ம் ஆண்டு பிரான்சில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற லஞ்ச ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டதாக நிக்கோலஸ் சர்கோசி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர்தான் வழக்கு விசாரணையை எதிர்கொண்டார்.
தன்னுடைய அரசியல் மறுபிரவேசத்தைக் குறைத்து மதிப்பிடும் வண்ணம் நீதித்துறையைக் கைக்குள் போட்டுக்கொண்ட அவரது எதிரிகள் தன்னை இப்படியொரு கோரமான பிரச்சினைக்குள் மாட்டிவிட்டதாக சர்கோசி குறை கூறினார். ஆனால் இப்போது அவரது தொலைபேசி உரையாடல் ஒன்று வெளியிடப்பட்டு மீண்டும் அவரை சர்ச்சைக்குள்ளாக்கியுள்ளது.
பிரெஞ்சு பத்திரிகை ஒன்றில் வெளியிடப்பட்டிருந்த இந்த உரையாடலில் மொனாகோவில் உள்ள நீதிபதி கில்பர்ட் அசிபர்ட் தன் மீது சுமத்தப்பட்டுள்ள ஆறு நிதி ஊழல் வழக்குகளில் ஒன்றில் உதவி புரிந்தால் அதற்குத் தகுந்த வேலை ஒன்று பரிந்துரைக்கப்படும் என்று சர்கோசி தனது நீண்டகால வழக்கறிஞரிடம் தெரிவிப்பதுபோல் உள்ளது.

இந்த நீதிபதியுமே நீண்டகாலமாக நடைபெற்று வந்துள்ள கோடீஸ்வரர்கள் லோரியல் ஹேரஸ், லிலியன் பெட்டென்கோர்ட் நன்கொடை வழக்குகள் குறித்து சட்டவிரோதமாக சர்கோசிக்கு தகவல்கள் தந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
பிரான்ஸ் அரசின் சிபாரிசின்பேரில் அளிக்கப்படும் இந்தப் பதவி அந்த நீதிபதிக்கு அளிக்கப்படவில்லை என்றபோதும் இவ்வாறு உதவி புரிவதாகக் கூறுவதே பிரெஞ்சு அரசியல் சட்டத்தின்படி குற்றமாகக் கருதப்படும்.
போலியான பெயரில் வாங்கிய தொலைபேசியில் கடந்த பிப்ரவரி மாதம் இந்த உரையாடலை சர்கோசி மேற்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதுமட்டுமின்றி மொனாகோவின் பிரதமர் மைக்கேல் ரோஜரை சந்தித்தது குறித்தும் கில்பர்ட்டுக்குத் தகவல் தெரிவித்தார் என்றும் சர்கோசி மீது புகார் எழுந்தது. ஆனாலும், தனது தொலைபேசி உரையாடல் ஒட்டுக்கேட்கப்படுகின்றது என்பதை அறிந்திருந்த சர்கோசி இப்படி ஒரு வாய்ப்பை வெளியிட்டிருக்கமாட்டார் என்றும் அந்தத் தகவல் குறிப்பிடுகின்றது.

 
மற்றைய செய்திகள்

சனி, 12 ஜூலை, 2014

நெதர்லாந்து அமைச்சர் இலங்கைக்கு உயர்மட்ட விஜயம்

நெதர்லாந்தின் வர்த்தக துணை அமைச்சர் சைமன் ஸ்மிட்ஸ் எதிர்வரும் 14ம் திகதி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

டச்சு அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்வது இதுவே முதல் தடவை என கொழும்பில் அமைந்துள்ள நெதர்லாந்து தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு எதிர்வரும் 14ம் திகதி விஜயம் செய்யும் அமைச்சர் ஸ்மிட்ஸ், 17ம் திகதி வரை தங்கியிருப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அவரது இந்த விஜயம், இலங்கையில் வளர்ந்து வரும் பொருளாதார சந்தை வாய்ப்புக்களை முதல்தரத்தில் கொண்டு வர உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன், அரசாங்கத்தின் சிரேஸ்ட அமைச்சர்களையும் தனியார் துறையின் அதிகாரிகளையும் ஸ்மிட்ஸ் தனது விஜயத்தின் போது சந்திக்கவுள்ளார்.

இவ்வமைச்சரின் முக்கிய சந்திப்புக்கள் டச்சு நிறுவனங்களுடன் நடைபெறவுள்ளது. இந்த டச்சு நிறுவனங்கள் நீர்வளம் மற்றும் சுகாதாரத் துறையில் தங்களது நிபுணத்துவத்தை அளிக்கும் என நெதர்லாந்து தூதரகம் தெரிவித்துள்ளது.

மற்றைய செய்திகள்

வியாழன், 10 ஜூலை, 2014

பல தடைகளையும் தாண்டி பிரம்ரன் நகரில் ஈழம் சாவடி..

 கனடாவில் ஒன்;டாரியோ மாகாணத்தில் பிரம்ப்டன் மாநகரில் கரபிராம்(carabram)நிகழ்வுகளில் தமிழர் கலை பண்பாட்டு வாழ்வை பிரதிபலிக்கும் கண்காட்சியும் நடன இசை நிகழ்ச்சிகளும் பிரம்ப்டன் சொக்கர் சென்டரில் ( டிக்ஸ்சி - சண்டல்வூட் பார்க்வே சந்தியில்) வருகின்ற வெள்ளிகிழமை சனிக்கிழமை மற்றும் ஞாயிற்று கிழமைகளில்( ஐ_லை மாதம் 11 12 13 திகதிகளில்) நடைபெறவிருக்கின்றது. வருடம் தோறும் நடைபெறும் கரபிரம்) ஏனப்படும் பல்நாட்டு கலைகலாச்சார பண்பாட்டு விழாவில் பிரம்டன் வாழ்தமிழ் மக்கள் பிரம்ட்ன் தமிழ் ஒன்றியம் சார்பாக இரண்டாம் வருடமாக இம்முறையும் தமிழ் கலை கலாச்சார வரலாற்று பண்பாட்டு பிரதிபலிக்கும் வகையில் வெகு சிறப்பாக ஆயத்தங்களை செய்துள்ளார்கள்.
  
கடந்த வருடம் கரபிராம் நிகழ்வில் ஏற்பாடு செய்யப்பட்ட ஈழம் சாவடிக்கு 8000 க்கும் மேற்பட்ட பல்லின மக்கள் தரிசித்து தமிழர் கலை பண்பாட்டினை அறிந்து கொள்வதிலும் தமிழரின் சுவை நிறைந்த உணவு வகைகளை விரும்பி உண்பதிலும் இசை நடன நிகழ்வுகளில் ஆர்வமுடன் கண்டு களிப்பதிலும் திருப்தி அடைந்தார்கள்.
கனடாவின் மத்திய மாநில நகர அரசுகளிலிருந்தும் பல நாடாள மன்ற உறுப்பினர்கள் தமிழ்மக்களும் அதிகளவில் கலந்து கொண்டதோடு விடுமுறைக்கென் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்த தமிழர்களும் ஈழம் சாவடியை தரிசித்து ஆதரவு வழங்கினார்கள். இந்த வருடமும் பாரிய அளவில் தமிழர் கலை பண்பாடு இலக்கியம் தமிழர் மருத்துவம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகைகளில் கண்காட்சியும் உணவு உடை தொடர்பான பல சாவடிகளும் சிறந்த நடனக் கல்லூரிகளிலிருந்து மாணவ மாணவிகளின் கலை நிகழ்வுகளும் பல இசைக்குழுக்களின் இசைநிகழ்ச்சிகளும் சிறுவருக்கான பொழுது போக்கு விளையாட்டுக்களும் தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்களும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. தமிழ் மக்கள் அனைவரையும் ஈழம் சாவடி நிகழ்வுகளில் கலந்து விழாவை சிறப்பிக்க அழைக்கிறார்கள் பிரம்பன் வாழ் ஒன்றிய மக்கள்.
வாருங்கள் பாருங்கள் மகிழ்ந்து செல்லுங்கள்
விழா நிகழ்வுகள்
ஐீலை 11�� 2014 (வெள்ளிக்கிழமை) மாலை 6:00 தொடக்கம் இரவு 12:00 மணி வரை
ஐீலை 12�� 2014 (சனிக்கிழமை) மதியம்; 12:00 மணி தொடக்கம் இரவு 12:00 மணி வரை
ஐீலை 13�� 2014 (ஞாயிறுக்கிழமை) நண்பகல் 1:00 மணி தொடக்கம் மாலை 6:00 வரை மற்றைய செய்திகள்