siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வியாழன், 3 செப்டம்பர், 2015

குழந்தை சடலம் கடல்கரையில் ஒதுங்கியது???

துருக்கி கடல்கரையில் 3 வயது சிறுவனது உடல் கரைஒதுங்கியது தொடர்பான புகைப்படங்கள் உலகம் முழுவதும் உள்ள மக்களில் நெஞ்சை பிளக்கும் விதமாக உள்ளது. 
லிபியா, சிரியா, ஏமன் உள்ளிட்ட நாடுகளில் நிலவி வரும் உள்நாட்டு போர் காரணமாக அங்கு அமைதியற்ற சூழ்நிலை நிலவுகிறது. இதனால் அங்குள்ள பெரும்பாலான மக்கள் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் 
அடைந்து 
வருகிறார்கள். சட்டவிரோதமாக படகுகளில் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிக்கொண்டு மத்திய தரைக்கடல் வழியாக செல்லப்படுகிறது. இத்தகைய படகுகள் விபத்தில் சிக்கி உயிரிழப்பு சம்பவமும் அரங்கேறிவருகிறது. இவ்வாறு 
விபத்துக்குள்ளாகி இந்த ஆண்டு மட்டும் சுமார் 2500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனர் என்று ஐ.நா. சபை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 
வங்காளதேசம் மற்றும் ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்தவர்களும் அகதிகளாக ஐரோப்பிய யூனியனுக்கு செல்லும் சம்பவமும் அரங்கேறிவருகிறது. 
இதற்கிடையே அகதிகளின் ஆக்கிரமிப்பை  கட்டுப்படுத்த
 ஐரோப்பிய யூனியன் நடவடைக்கை எடுத்து வருகிறது. தடுப்பு சுவர்கள் கட்டப்பட்டு அகதிகள் உள்ளே நுழைய தடையை ஏற்படுத்தி வருகின்றனர். இத்தாலி உள்ளிட்ட நாடுகள் அதிகள் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். அகதிகள் நுழைவதற்கு ஐரோப்பிய 
யூனியன் தடைசெய்து வரும்நிலையில் லிபியா, சிரியா, ஏமன் உள்ளிட்ட நாடுகளில் இருந்து செல்லும் அகதிகள் அங்கு செல்லவும் முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்கள் கடலில் அலையோடு 
அலையாக ஆடும் சூழ்நிலையும் உள்ளது. சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் மிகவும் கடுமையான சூழ்நிலையில் உள்ளனர் என்று கூறப்படுகிறது. 
இவ்வாறு எங்கும் செல்ல முடியாத நிலையில் அவர்கள் உயிரை விடும் நிலையும் நிலவுகிறது. 
இந்நிலையில் துருக்கி நாட்டில் சுற்றுலா பகுதியில் உள்ள கடற்கரையில் 3 வயது சிறுவனின் சடலம் கரைஒதுங்கி உள்ளது. இதுதொடர்பான புகைப்படமானது வெளியாகி உலக முழுவதும் உள்ள மக்களின் நெஞ்சை பிளக்கும் விதமாகவும், கண்ணீரை வரச்செய்யும் விதமாக கொடூரமாக உள்ளது. துள்ளி குறுநடைபோடக்கூடிய பச்சிளம் பிஞ்சு, வாடிய முகத்துடன் சடலமாக 
கிடப்பதை வீரர் ஒருவர் தூக்கும் காட்சி வெளியாகிஉள்ளது.  உயிரிழந்த குழந்தையானது சிரியாவை சேர்ந்தது என்று தெரியவந்து உள்ளது. குழந்தை சிவப்பு நிற டீசர்ட் மற்றும் நீல நிறத்திலான கால்சட்டையும் அணிந்து உள்ளது. மிகவும் அழகான அந்த பிஞ்சின் வாழ்க்கையை 
தண்ணீரே போய்விட்டது.
சிரியாவில் இருந்து கிரீஸ் நாட்டிக்கு பயணம் செய்த படகு ஒன்று கடலில் மூழ்கியது. இந்த படகில் இருந்த 12 பேர் உரிழந்தனர். 
படகில் இருந்த 3 வயது குழந்தையும் உயிரிழந்து, கரைஒதுங்கிஉள்ளது. குழந்தையின் பெயர் அய்லான் குர்தி என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. மனிதாபிமானம் 
துடைத்தெரியபட்டது
 என்றும் ஒருபுகைப்படம் உலகை அமைதியடைய செய்தது என்ற டேக்குடன் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. ஒட்டுமொத்த உலக நாடுகளின் பார்வையையும் திருப்பி உள்ளது. புகைப்படத்தை பார்த்து அழும் சமூக வலைதள பயனாளர்கள் தங்களது கருத்தை 
தெரிவித்து வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

வியாழன், 27 ஆகஸ்ட், 2015

ஜெர்மனி இந்தியாவில் ரூ.6,600 கோடி முதலீடுசெய்கிறது ???

இந்தியாவின் முக்கிய திட்டங்களுக்காக, ரூ.6,600 கோடி முதலீடு செய்வது தொடர்பாக இந்திய-ஜெர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பில் உறுதி செய்யப்பட்டது. ஜெர்மனிக்கு 2 நாள் அரசு முறை பயணம் 
மேற்கொண்டுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ஜெர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் பிராங் வால்டர் ஸ்டீன்மீரை சந்தித்து பேசினார்.
 இச்சந்திப்பின் போது, இந்தியா-பாகிஸ்தான் விவகாரம், ஆப்கனில் நிலவும் சூழல் பற்றி விவாதிக்கப்பட்டது. இந்தியாவும், ஜெர்மனியும் தங்கள் நாடுகளுக்கிடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
சோலார் திட்டம், கங்கையை துாய்மைப்படுத்தும் திட்டம், நவீன நகரங்கள் திட்டம், திறன்மேம்பாட்டுத்திட்டம் உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய திட்டங்களுகாக, இந்தியாவில் ஜெர்மன் ரூ.6,600 கோடி முதலீடு செய்ய முடிவு செய்வது பற்றி முடிவு செய்யப்பட்டது.
கேந்திரியா வித்யாலயா பள்ளிகளில், மீண்டும் ஜெர்மன் மொழியை கற்பிக்கவும், ஜெர்மன் பள்ளிகளில் சமஸ்கிருத மொழி கற்பிக்கவும் இரு தரப்பிலும் முடிவு செய்யப்பட்டது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, ஜெர்மன் பிரதமரின் 
இந்திய வருகையின் போது அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் அக்டோபர் மாதம், ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் இந்திய சுற்றுப்பயணம் மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

திங்கள், 24 ஆகஸ்ட், 2015

தொலைபேசி தகவலை வைத்து தொற்று நோய் பரவுவதை கண்டுபிடிப்பு.???

தொற்று நோய்கள் எவ்வாறு பரவுகின்றன என்பதை தொலைபேசி தகவல்களை வைத்து கண்டறிவதற்கான ஆய்வொன்று  ஹார்வர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த ஆய்வு ஆப்ரிக்க நாடான கென்யாவில் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இதற்காக 1.5 கோடி மக்களின் தொலைபேசி தகவல்கள் ஆய்வு செய்யப்பட்டதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்
.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
தொலைபேசியில் பேசப்பட்ட நேரம், குறுந்தகவல் அனுப்பிய நேரம், அதன்போது தொலைபேசி பயனாளர் இருந்த இடம் போன்ற தகவல்கள் தொலைபேசி கோபுர, சமிக்ஞை மூலம் சேகரிக்கப்பட்டன. கடந்த 2008 ஜூன் முதல் 2009 ஜூன் வரை சேகரிக்கப்பட்ட 1,200 கோடி தொலைபேசி தகவல்கள்

 ஒருங்கிணைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன.
தொலைபேசி உரிமையாளர்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு எந்த நேரத்தில் செல்கின்றனர், ஒரே இடத்தில் எப்போது இருக்கின்றனர் என்பன 

போன்ற தகவல்களும் ஆராயப்பட்டன.
இத்தகவல்கள் அனைத்தும் கென்யாவில் ஆண்டிற்கு மூன்று முறை பரவலாகக் காணப்படும் ருபெல்லா எனப்படும் தொற்று நோய் பரவும் காலம் தொடர்பான தகவல்களுடன் ஒப்பீடு செய்யப்பட்டன.
ஆய்வின் முடிவில் ஆச்சரியப்படும் வகையில் தொலைபேசி உரிமையாளர்கள் இடம் பெயர்தல் தொடர்பான தகவல்கள் அமைந்த விதமும் ருபெல்லா நோய் பரவிய காலம் மற்றும் பகுதி போன்ற தகவல்கள் அமைந்த 

விதமும் ஒரே மாதிரியாக இருந்தன.
கென்யாவில் ஒரு ஆண்டில், பிப்ரவரி, மே, செப்டம்பர் மாதங்களில் ருபெல்லாவின் தாக்கம் அதிகமாக இருந்ததை உணர்த்தும் வகையில் தொலைபேசி தகவல்கள் அமைந்திருந்தன.
இதன் மூலம் தொலைபேசி தகவல்களை வைத்து தொற்று நோய் பரவல் நிகழும் பகுதிகள், காலம் போன்றவற்றை அறிய முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது மோன்ற மேலதிக ஆய்வுகளும் தற்பொழுது ஆராய்ச்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை
 குறிப்பிடத்தக்கது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



வியாழன், 20 ஆகஸ்ட், 2015

சுமார் 10 லட்சம் மக்கள் கொல்லப்பட்ட கிறித்துவ பாதிரியார் மீதுள்ள வழக்கை தள்ளுபடி

உலகையே உலுக்கிய ரிவாண்டா நாட்டு இனப்படுகொலையில் சுமார் 10 லட்சம் அப்பாவி மக்கள் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் கிறித்துவ பாதிரியார் மீதுள்ள வழக்கை தள்ளுபடி செய்யவுள்ளதாக பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.
ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றான ரிவாண்டாவின்
 அதிபர் Juvenal Habyarimana கடந்த 1994ம் ஆண்டு விமான விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
இது ஒரு திட்டமிடப்பட்ட சதி எனக்கூறி அவரது ஆதரவாளர்கள் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர். 1994ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நிகழ்ந்த இந்த உள்நாட்டு யுத்தத்தில் சுமார் 5 லட்சம் முதல் 10 லட்சம் வரையிலான மக்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் ரிவாண்டா நாட்டை சேர்ந்த Wenceslas Munyeshyaka என்ற கிறித்துவ பாதிரியார் ஒருவர், கிளர்ச்சியாளர்களுக்கு தன்னுடைய தேவாலயத்தில் அடைக்கலம் அளித்தற்கும், அங்கு ஏற்கனவே அடைக்கலம் ஆகியிருந்த நூற்றுக்கணக்கான சிறுமிகள் மற்றும் பெண்கள் கற்பழிப்பிற்கு காரணமாக இருந்துள்ளார் என அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
ரிவாண்டா நாட்டு சிறை தண்டனையிலிருந்து தப்பிக்க அந்த பாதிரியார் பிரான்ஸ் நாட்டில் அடைக்கலம் தேடி கடந்த 1995ம் ஆண்டு முதல் பிரான்ஸில் வசித்து வருகிறார்.
ரிவாண்டா நாட்டின் கோரிக்கையை ஏற்று பிரான்ஸ் அரசும் அவர் மீது வழக்கு போட்டதை தொடர்ந்து, ரிவாண்டா ராணுவ நீதிமன்றம் அந்த பாதிரியார் இல்லாமலே அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.
இதனை தொடர்ந்து, அவரை தன் நாட்டிடம் ஒப்படைக்குமாறு ரிவாண்டா விடுத்த கோரிக்கையை பிரான்ஸ் அரசு நிராகரித்து
 வந்துள்ளது.
பல ஆண்டுகளாக நடைப்பெற்று வந்த இந்த விசாரணையை தொடர்ந்து, தற்போது பாதிரியார் மீது சுமத்தப்பட்டுள்ள எந்த குற்றச்சாட்டுகளையும் நிரூபிக்கும் வகையில் தகுந்த ஆதாரங்கள் இல்லை என்பதால் அவர் மீதுள்ள வழக்கை தள்ளுபடி செய்யவுள்ளதாக பிரான்ஸ் அரசு
 முடிவு செய்துள்ளது.
எனினும், இந்த முடிவை பிரான்ஸ் நாட்டு உச்சநீதிமன்றம் தான் இந்த வழக்கை மேலும் விசாரிக்க வேண்டுமா, வேண்டாமா என முடிவு செய்ய வேண்டும் என்றும் பாரிஸ் நகர வழக்கறிஞரான Francois Molins தெரிவித்துள்ளார்.
இனப்படுகொலை குற்றம் சாட்டப்பட்டுள்ள பாதிரியார் தற்போது தெற்கு பிரான்ஸின் Gisors என்ற நகரில் உள்ள ஒரு தேவாலயத்தில் பாதிரியாராக செயல்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 12 ஆகஸ்ட், 2015

புலம்பெயர் தமிழர்கள் நீதிமன்றத் தீர்ப்பினால் நெருக்கடியிலாம்???

பிரிட்டன் நீதிமன்ற தீர்ப்பினால் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் சமூகம் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. போர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் பிரிட்டன் நீதிமன்றம் நேற்று இந்த தீர்ப்பினை வழங்கியிருந்தது. போர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் குற்றம் 
சுமத்தப்பட்ட வேறு நாட்டு பிரஜை ஒருவரை பிரிட்டன் சட்டங்களின் அடிப்படையில் பிரிட்டனில் கைது செய்து வழக்குத் தொடர அதிகாரமில்லை என அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது
இந்த தீர்ப்பு இலங்கைக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ள, பிரிட்டன் அரசாங்கத்திற்கும், புலி ஆதரவு புலம்பெயர் அமைப்புகளுக்கும் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது. பிரிட்டன் செல்லும் வன்னிப் போரில் பங்கேற்ற படையினரை கைது செய்ய சில காலத்திற்கு முன் இருந்தே திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
போர்க்குற்றச் செயல்கள் குற்றம் சுமத்தி லண்டனில் கைது செய்யப்பட்ட ருவன்டா புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் ஜெனரல் கரென்ஸி கராதே தொடர்பான வழக்கு விசாரணையின் போது இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஜெனரல் கரென்ஸி சார்பில் முன்னாள் பிரிட்டன் பிரதமர், டோனி பிளயரின் மனைவி நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.
பிரிட்டன் மற்றும் ஸ்பெய்ன் ஆகிய நாடுகள் ஜெனல் கரென்ஸி மீது போர்க்குற்றச் செயல்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தன. எனினும், ருவன்டா புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் 
பிரிட்டனுக்குள் குற்றம் இழைக்கவில்லை என்பதனால் அவரை தண்டிக்க முடியாது எனவும், அவரை விடுதலை செய்யுமாறும் உத்தரவிடடு அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என சிங்கள பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

திங்கள், 10 ஆகஸ்ட், 2015

காரை 360 டிகிரியில் சுழற்றிய நபர்: கதிகலங்கிய காரோட்டிகள் (காணொளி )

பிரித்தானியாவில் குடிபோதையில் கார் ஓட்டிய நபருக்கு 3 வருடங்கள் கார் ஓட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் நார்த்தாம்டன்ஷைர் கவுண்டியின் கெட்டரிங் என்ற இடத்தில் உள்ள A14 நெடுஞ்சாலையில், கடந்த நவம்பர் மாதம் மார்டின் கண்ட்ரில்(43) என்பவர், மின்னல் வேகத்தில் கார் ஓட்டியதோடு மட்டுமல்லாமல், தனது காரை 360 டிகிரியில் சுழற்றி பிற காரோட்டிகளை கதிகலங்க செய்துள்ளார்.
இவரின் இந்த செயலை நபர் ஒருவர் வீடியோ எடுத்து பொலிசிடம் புகார் அளித்துள்ளார், இதனைத் தொடர்ந்து மார்டினை கைது செய்த பொலிசார், அவரது உடலில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட மூன்றரை மடங்கு ஆல்கஹால் இருப்பதை கண்டுபிடித்தனர்,
இதுதொடர்பாக நடைபெற்று வந்த வழக்கு விசாரணையில், மார்டினை 10 மாதங்கள் பணியிலிருந்து தற்காலிக நீக்கம் செய்யவும், 3 வருடங்கள் கார் ஓட்டுவதற்கு தடைவிதித்து
 தீர்ப்பளித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

புதன், 5 ஆகஸ்ட், 2015

பிறந்தநாள் வாழ்த்து செல்வி திரு .அருளானந்தம் அபிநயா. 05 .08 .15.


யாழ்  நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகக் கொண்ட திரு .அருளானந்தம்   தம்பதிகளின்  செல்வப்புதல்வி அபிநயா தனது  ஏழாவது  பிறந்த நாளை  05.08.2015.இன்று.தனது இல்லத்தில் மிக சிறப்பாக கொண்டாடுகின்றார் இவரை அன்பு அப்பா அம்மா அண்ணா அக்கா பெரியப்பா பெரியம்மா மற்றும் அப்பம்மா மாமி மார் மாமா மார்
 சித்தப்பாமார்  சித்திமார்   மச்சான்மார் மச்சாள் மார் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்களும் இறைஅருள் பெற்று பல்கலைகளும்  பெற்று சீரும்சிறப்புடன்  பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றனர் இவர்களுடன் இவர்களுடன் இணைந்து எமது http://lovithan.blogspot.ch/ lஇணையமும் நவக்கிரி.கொம் நிலாவரை .கொம் 
நவற்கிரி .கொம் இணைய ங்களும் வாழ்த்துகின்றனர்.
இன்று பிறந்தநாள் 
ஒரு மலர் மலர்ந்தநாள் 
என் பாசமலரின் பிறந்தநாள். 
இதோ..! உனக்காக.. 
ஒரு வாழ்த்து..! 
என் அன்பு 
வானத்தின் நட்சத்திரமே..! 
வாகை சூடி சரித்திரம் படைத்திடு.! 
வானம் தொடும் புகழ் அடைந்திடு.! 
வாழ்வில் நிம்மதி தஞ்சம் அடையட்டும் 
வாழம் வாழ்வில் உறுதி நெஞ்சம் இருக்கட்டும். 
வாழ்வில் வசந்தம் வீசட்டும்...! 
-நிம்மதியான 
வாழ்க்கையின் எல்லா செல்வமும் பெற்று 
வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்.! 
என் .இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!   



திங்கள், 3 ஆகஸ்ட், 2015

கிடைத்த பாகம் மாயமான எம்.எச்.370 விமானத்துடையது தான்???

ரீயூனியன் தீவுகளில் கிடைத்த பாகம் 239 பயணிகளுடன் மாயமான எம்.எச்.370 போயிங் 777 விமானத்துடையதே என்று மலேசிய அதிகாரிகள் உறுதி தெரிவித்துள்ளனர்.
மலேசியாவிலிருந்து பீஜிங் நோக்கி, கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் 8-ம் திகதி சென்ற மலேசிய விமானம் எம்.எச்.370 ராடாரிலிருந்து திடீரென மறைந்தது.
அதனை தேடும் பணி 16 மாத காலங்களாக நீடித்து வந்த நிலையில், அது இந்தியப் பெருங்கடலில் விழுந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த வாரம் ரீயூனியன் தீவுகளில் கரையில் விமான பாகம், இறக்கை ஆகியவை ஒதுங்கியது.
இதையடுத்து அந்த பாகங்கள் காணாமல் போன மலேசிய விமானத்தை சேர்ந்தது தானா என்று பிரான்சில் பரிசோதனை நடத்தப்பட்டது.
அந்த பரிசோதனையில், அது போயிங் 777 எம்.எச்.370 விமானத்துடையது என்று உறுதியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது குறித்து மலேசிய போக்குவரத்து துறை அமைச்சர் லியோவ் தியாங் வெளியிட்ட அறிக்கையில், கண்டெடுக்கப்பட்ட இறக்கை போயிங் 777 விமானத்தினுடையது என்பது அதிகாரபூர்வமாக உறுதியாகியுள்ளது.
பிரான்சில் செய்யப்பட்ட சோதனையில், போயிங் விமான தயாரிப்பாளர்கள் மற்றும் மலேசிய ஏர்லைன்ஸ் சிவில் ஏவியேஷன் துறையினரும் இதனை உறுதி செய்தனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் 16 மாதகாலம் உலகை உலுக்கிய அந்த துயரச் சம்பவத்தின் புதிர் முடிச்சு அவிழ்ந்துள்ளது என்று 
மலேசியா தெரிவித்துள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சண்டைக்கு எதிராக நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

பிரான்ஸில் பாரம்பரிய விளையாட்டான சேவல் சண்டைக்கு பரவலாக தடை உள்ள நிலையில், இனி நாடு முழுவதும் சேவல் சண்டைக்கான புதிய மைதானங்களை அமைக்க கூடாது என நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
பிரான்ஸ் நாட்டில் காளை அடக்குதல் போட்டி போல, சேவல் சண்டையும் அந்நாட்டு மக்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றாக கொண்டாடப்பட்டு வருகிறது.
சேவல் சண்டைக்கு பெரும்பாலான நகரங்களில் சட்டப்பூர்வமாக தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பிரான்ஸின் புறப்பகுதிகளில் இந்த சேவல் சண்டை விளையாட்டுகளை உள்ளூர் நிர்வாகங்கள் அனுமதித்து வருகிறது.
இந்த சேவல் சண்டைக்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வந்த நிலையில், சேவல் சண்டை நடைப்பெற்று வந்த இடங்களிலும் அந்த விளையாட்டுக்கு எதிராக போராட்டம் நிகழ்ந்து வந்துள்ளது.
இந்நிலையில், Sainte-Marie என்ற நகரை சேர்ந்த இரண்டு நபர்கள் சேவல் சண்டையை நடத்த புதிய மைதானம் அமைக்க உள்ளூர் நிர்வாகம் அனுமதி தர மறுக்கிறது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் அன்மையில் வந்தபோது பேசிய அந்த நபர்கள், பிரான்ஸ் நாட்டில் காளை அடக்குதல் போட்டிகளுக்கு நாடு முழுவதும் அனுமதி உள்ள நிலையில், சேவல் சண்டைக்கு அனுமதி மறுப்பது ஏன் என கேள்வி எழுப்பினர்.
இதனை விசாரித்த நீதிபதி, காளை சண்டையும் சேவல் சண்டையும் பிரான்ஸ் நாட்டு மக்களின் பாரம்பரிய விளையாட்டுகளாக இருந்தாலும் கூட, இரு விளையாட்டுகளின் தன்மைகள் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது அல்ல.
எனவே, இனி நாடு முழுவதும் சேவல் சண்டையை நடத்த புதிதாக மைதானங்கள் அமைக்க தடை விதித்தது சரியானது தான் என தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளார்.
நீதிபதியின் இந்த உத்தரவு விலங்களுகள் நல ஆர்வலர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்திருந்தாலும், சேவல் சண்டை மூலம் தங்களுக்கு வரும் வருமானம் போய்விட்டது என இந்த உத்தரவிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுப்பட உள்ளதாக சேவல் சண்டை 
விளையாட்டு பிரியர்கள் 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

சமமாக காதலோடு போட்டியிடும் நட்பு: நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

சர்வதேச அளவில் நண்பர்கள் தினம் எல்லோராலும் விரும்பியே கொண்டாடப்பட்டு வருகிறது.
சமுதாயத்துக்கு பயனுள்ள நல்ல விடயமாக இருக்கிற ஒவொவொன்றுக்குமே வருடத்தில் ஒரு நாளை ஒதுக்கி கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு நாட்டுக்குள்ளும் அங்குள்ள கலாச்சார அடிப்படையில் பண்டிகைகள் கொண்டாடுவது வழக்கம். அப்படிப்பட்ட பண்டிகைகள் அவர்களுடைய கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் பிரதிபலிப்பது சிறப்புடையதுதான்.
அதேவேளையில், உலகத்தில் ஒவ்வொரு பண்டிகைக்கு பின்னாலும் ஒரு சமுதாயம் தன்னை தனித்துவத்துடன் அடையாளம் காட்டிக்கொள்கிறது. அது உலக ஒருங்கிணைப்பில் விலகி நிற்பது போன்றதுதான்.
அதனால், ஐ.நா. போன்ற அமைப்புகள் சர்வதேச அளவில் சில தினங்களை ஏற்படுத்தி உலகில் உள்ள எல்லா நாட்டினராலும் இனத்தவராலும் கொண்டாடும்படியான ஒரு சூழலை, ஒருங்கிணைப்பை உருவாக்கியுள்ளன.
அதுவும் இந்த நுற்றாண்டில்தான் தினங்கள் கொண்டாடுவதை ஊடகங்களும் வாணிபமும் உற்சாகப்படுத்தி வருகின்றன.
நண்பர்கள் தினம் முதன்முதலாக, தென் அமெரிக்காவின் தென் பகுதியில் உள்ள பாரகுவே மக்களிடம்தான் பிரபலமானது. இதை இளைஞர்கள் தங்கள் நண்பர்களுக்குள் கொண்டாடி வந்தனர்.
இந்தியா, பங்களாதேஷ், மலேசியா போன்ற நாடுகளிலும் இந்த நாளில் கார்டுகள், மலர்க்கொத்துகள் கொடுத்து வாழ்த்து பரிமாறிக்கொண்டனர்.
காதலர் தினம், மகளிர் தினம், யோகாதினம் போல, நண்பர்கள் தினமும் ஐ.நா. வால் அறிவிக்கப்பட்டது.1958 ஆம் ஆண்டுதான். ஆகஸ்டு மாதம் முதல் ஞாயிறு கொண்டாடப்படுகிது.
இதை கொண்டாடுகிறார்களோ இல்லையோ கொண்டாடுகிற உரிமை எல்லோருக்கும் தரப்பட்டுள்ளது.
காதலர் தினம், யோகா தினம் போன்றவைகளுக்கு கூட சில நாடுகளில் மதம், கலாச்சாரத்தை காரணம் காட்டி எதிர்ப்பாளர்கள் உருவாகின்றனர்.
நண்பர்கள் தினத்துக்கு எந்த பிரிவினரிடமும் எதிர்ப்பு எழ 
வாய்ப்பே இல்லை.
காதல், மனிதர்களுக்கு இரண்டாவது உயிர் என்றால், அந்த காதலோடு சமமாக போட்டியிட்டு வருவது நட்பு. அது மட்டுமல்ல, சமயங்களில் காதலையே வெல்லக் கூடியதாகவும் உள்ளது நட்பு.
திருக்குறளில் உள்ள 133 அதிகாரங்களில் நட்புக்கு ஒரு அதிகாரத்தையே தெய்வப்புலவர் திருவள்ளுவர் ஒதுக்கியுள்ளபோது. 365 நாட்களில் ஒரு நாளை நண்பர்கள் தினத்துக்கு ஒதுக்கியிருப்பது கூட நாம் அதற்கு அளித்திருக்கும் சிறிய அங்கீகாரம்தான்.
இந்நாளில், நட்பை வளர்ப்பதற்கும், உறவுக்கு சமமான அங்கீகாரம் கிடைப்பதற்கான முயற்சியில் இளைஞர்கள் ஈடுபடலாம்.
இளமையில் நண்பர்கள் வட்டம் விரிவடைந்து கொண்டே செல்லும், முதுமையில் அதை சுருக்கிக்கொள்வதையே சராசரி மனிதர்களின் மனநிலை நிம்மதியாக கருதுகிறது.
இதை மாற்றுகிற கடமை இந்த நண்பர்கள் தினத்துக்குதான் உண்டு.
காதல்தான் சமுதாயத்தில் சமத்துவத்தை கொண்டுவர முடிந்தது என்று எல்லோரும் எண்ணுகிறோம். அதை அதனினும் அனுகூலமாக செய்யும் வலிமை நட்புக்கும் உண்டு.
ரத்த பாத்தியதை உள்ள உறவுகள் துன்பத்தில் உதவுவது. ஆச்சரியத்துக்கும் பாராட்டுக்கும் உரியதல்ல. ரத்த சம்பந்தம் இல்லாத நண்பர்கள் உதவுவதுதான் மெய்சிலிர்க்க வைப்பதும் மெச்ச தகுந்ததுமாகும்.
அத்தகைய மாண்புமிக்க நண்பர்கள் தினத்தில் உங்கள் நண்பர்களுக்கு உயர்வான உதவிகளை செய்யுங்கள்.
அல்லது, உங்களுக்கு உதவிய நண்பர்களுக்கு இந்த நன்னாளில் நன்றியை நினைவு கூருங்கள்.