siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 30 ஜூலை, 2012

கையடக்கத் தொலைபேசியில் ஆபாசப்படங்களைப்;; பார்த்த நால்வர் கைது

 _
30.07.2012.இளவயது இளைஞர்கள் நான்குபேர் கையடக்கத் தொலைபேசியில் ஆபாசப்படங்களைப் பார்த்துக் கொண்டிருந்த வேளையில் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். சுன்னாகம் சபாபதிப்பிள்ளை முகாமைச்சோந்த இளைஞர்கள் நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவர்.

குறிப்பி;ட்ட முகாமில் உள்ள பொது மண்டபத்தில் மாலை வேளையில் இவர்கள் குறிப்பி;ட்ட ஆபாசப்படங்களைக் கையடக்கத் தொலைபேசியில் பார்த்துக்கொண்டு இருந்துள்ளார்கள். ரோந்துக் கடமையில் சென்ற பொலிஸாரைக் கண்டு ஆபாசப்படம் பார்த்துக் கொண்டு இருந்தவர்கள் தப்பி ஓடியுள்ளார்கள்.

சந்தேகம் கொண்ட பொலிஸார் பொது மண்டபத்தில் சென்று பார்த்த வேளையில் கையடக்கத் தொலைபேசி ஒன்று கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டது.

அதனைக் கைப்பற்றிய பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக ஆபாசப்படம் கைத்தொலைபேசியில் பார்த்த சம்பவம் தெரியவந்தது. அதனுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு பொலிஸாரின் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்

0 comments:

கருத்துரையிடுக