siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 30 ஜூலை, 2012

இயற்கையாகவே எலும்புகளை உருவாக்கலாம்: ஆராய்ச்சியில் தகவல்

30யூலை 2012,
மனிதனின் உடலில் எலும்புகள் சேதமடைந்தால் அதற்கு பதிலாக செயற்கையான பிளேட்டுகளை பொருத்தி சீர்செய்யும் மருத்துவ முறை தற்போது உள்ளது. இதற்கு பதிலாக இயற்கையாகவே எலும்பை உருவாக்கி சிகிச்சை அளிக்கலாம் என்று அயர்லாந்தில் உள்ள றொயல் மருத்துவ கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் மரபணுக்கள் மூலமாக, அதாவது ஒரு வித புரோட்டீன் மூலமாக எலும்பு திசுவை உருவாக்கும் முறையை கண்டுபிடித்துள்ளனர்.
இதன் மூலமாக எந்த விதமான எலும்பையும் உருவாக்க முடியும் என்று தெரிவித்துள்ளனர்.
முதலில் இவற்றை விலங்குகளுக்கு பொருத்தி சோதனை செய்ய உள்ளனர். பின்னர் மனிதர்களுக்கு பயன்படுத்தப்படும்.
விபத்தில் அடிபட்டாலோ அல்லது இயற்கையாக எலும்பு சேதமடைந்தாலோ அவர்களுக்கு இது பெரும் உதவியாக இருக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

0 comments:

கருத்துரையிடுக