siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 1 அக்டோபர், 2012

ஈராக்கில் தொடர்ச்சியாக குண்டுகள் வெடித்தது: 32 பேர் பலி

01.10.2012.By.Rajah.ஈராக் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக குண்டுகள் வெடித்ததில் 32 பேர் பலியாயினர். ஈராக்கில் பாக்தாத் நகரின் வடக்கே உள்ள டாஜி பகுதியில் அல்கொய்தா தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இப்பகுதியில் நேற்று 3 கார்களில் வைக்கப்பட்டிருந்த குண்டுகள் வெடித்ததில் 8 பேர் இறந்தனர், 28 பேர் படுகாயமடைந்தனர்.
கார் குண்டுகள் வெடித்த சிறிது நேரத்தில் ஷியா முஸ்லிம்கள் நிறைந்த பகுதியான ஷுலா என்ற இடத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. இதில் ஒருவர் கொல்லப்பட்டார்.
அடுத்து கர்ராடா பகுதியில் பொலிஸ் ரோந்து சென்றபோது குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் ஒரு பொலிஸ் அதிகாரி உள்பட 2 பேர் இறந்தனர்.
இதைத் தொடர்ந்து அதே பகுதியில் கார் குண்டு வெடித்து இதில் 3 பேர் இறந்தனர். மொத்தமாக நேற்று நடந்த தாக்குதல்களில் மட்டும் 32 பேர் கொல்லப்பட்டனர்.
இதுவரை இச்சம்பவத்திற்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.