siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 1 அக்டோபர், 2012

தொடர்ச்சியாக 8 நிமிடங்கள் தண்ணீரில் மூழ்கி நடிக்க விதார்த் பயிற்சி

 




01.10..2012.By.Rajah.மங்கலேஸ்வரன் இயக்கத்தில், “காட்டு மல்லி என்ற படத்தில் விதார்த் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சில காட்சிகளை, தண்ணீருக்குள் படமாக்குகிறார் இயக்குனர்.
அதற்காக, கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ள ஒரு ஆற்றுக்குள், காட்சிகளை படமாக்க திட்டமிட்டிருப்பதாக சொல்லும் இயக்குனர், குறைந்தது, 8 நிமிடமாவது தண்ணீருக்குள் முங்கியிருந்தபடி நடிக்க வேண்டும் என்பதால், இப்போதே விதார்த்தை, அதற்கான பயிற்சியில் ஈடுபடுத்தி உள்ளார்.
அதனால், கடந்த ஒரு மாதமாக, “தம் பிடித்தபடி, நீச்சல் குளத்தில்,தீவிர பயிற்சி எடுத்து வருகிறார் விதார்த். ஆரம்பத்தில், 2, 3 நிமிடம் தண்ணீருக்குள் இருக்கவே கஷ்டப்பட்டவர், இப்போது, 6 நிமிடம் வரை, மூச்சு பிடிக்கும் அளவுக்கு, தன்னை தயார்படுத்தி விட்டார்.