siruppiddy nilavarai.com

Footer Widget 1

சனி, 6 அக்டோபர், 2012

டொரண்டோ: நவம்பர் 14ஆம் தேதி பிளாஸ்டிக் பைகளுக்கு



Saturday 06 October 2012.By.Rajah.தடைவிதிப்பதுகுறித்துபொதுமக்களுடன் கலந்தாய்வு. டொரண்டோவில் வரும் 2013ஆம் ஆண்டு ஜனவரி முதல் பிளாஸ்டிக் பைகளுக்கு தடைவிதிக்கும் மசோதா ஏற்கனவே நிறைவேறியுள்ளது. இந்த தடை குறித்து விரிவாக பொதுமக்களுடன் கலந்தாய்வு செய்ய நவம்பர் 14ஆம் தேதி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பிளாஸ்டிக் பைகளால் ஏற்படும் தீமைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு கிடைக்கச்செய்யப்படும் என பிளாஸ்டிக் பைகள் எதிர்ப்பாளர்கள் கருத்து தெரிவித்தனர்.
ஆனால் பிளாஸ்டிக் பைகள் உற்பத்தியாளர்களும், வியாபாரிகளும் இந்த தடை விதிப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக நீதிமன்றத்திற்கு செல்லவும் அவர்கள் முறைப்படி ஏற்பாடு செய்துள்ளனர். நீதிமன்றம் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி, தங்களுக்கு நல்லதொரு நீதி கிடைக்க வழிவகுத்திடும் என வியாரிகள் நம்புவதாக டொரண்டோ கடைவியாரிகள் சங்க உறுப்பினர் ஒருவர் நமது செய்தியாளரிடம் கூறினார்.