siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 18 நவம்பர், 2012

6 கோடி ரூபாய் அளித்தால் மரண தண்டனை ரத்தாகும்: சவுதி ?

By.Rajah.குற்றவாளி ஒருவரின் மரண தண்டனையை ரத்து செய்ய 6 கோடி ரூபாய் அளிக்கும் படி சவுதி அரசு நிபந்தனை விதித்துள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர் ஜோஸ்லிட்டோ சபன்டா. இவர் கடந்த 2009ஆம் ஆண்டு நடந்த தகராறின் போது, சூடான் நாட்டை சேர்ந்த நபரொருவரை கொன்று விட்டார்.
இதனையடுத்து தொடரப்பட்ட வழக்கில், சபன்டாவுக்கு தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றும் படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பெனிக்கோ அகினோவின் வேண்டுகோளின் படி, கடந்த நான்கு மாத காலமாக மரண தண்டனையை சவுதி அரசு நிறுத்தி வைத்துள்ளது.
மேலும் கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்துக்கு 6 கோடி ரூபாய் அளிக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளது

0 comments:

கருத்துரையிடுக