siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 18 நவம்பர், 2012

தகாத உறவால் பிறந்த குழந்தையை கொலை செய்த பெண் ?

      
By.Rajah.கணவர் வெளிநாட்டில் இருந்த போது ஒரு தகாத உறவால் பெற்றுக் கொண்ட தனது சொந்த பிள்ளையை கொலை செய்ய தாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குழந்தை பிறந்த உடனடியாகவே கொலை செய்து சிசுவின் உடல் புதைக்கப்பட்டுள்ளது.

வலிக்கந்த, குடாபொக்குண என்ற பிரதேசத்தில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸர் தெரிவித்தனர்.

கடந்த 4ஆம் திகதி குழந்தை பிறந்துள்ளது. குழந்தையை பெற்றெடுத்தவர் 24 வயதான பெண் என தெரிவிக்கப்படுகிறது.

இவரது கணவன் வெளிநாட்டில் உள்ள நிலையில் தகாத உறவினால் இக்குழந்தை கருவுற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட பெண் பொலன்நறுவை வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகிறார்.

0 comments:

கருத்துரையிடுக