siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 18 நவம்பர், 2012

சிறிலங்காவை நம்பாத உகண்டா அதிபர் - குடிப்பதற்கான குடிநீரையும்??

          
By.Rajah.உகண்டா அதிபர் யொவேரி முசவேனி கடந்த வாரம் சிறிலங்காவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டிருந்தார்.

அவர் கொழும்பு வரும்போது சமையற்காரர் ஒருவரையும், குடிப்பதற்கான குடிநீரையும் தனது விமானத்திலேயே கொண்டு வந்திருந்தார்.

கொழும்பில் ஹில்டன் விடுதியில் தங்கிருந்த போதும், சிறிலங்கா அதிபர் உள்ளிட்ட அதிகாரபூர்வ சந்திப்புகளின் போதும், அவர் குடிப்பதற்கு சிறிலங்கா குடிநீரைத் தொட்டுக் கூடப் பார்க்கவில்லை.
தான் எடுத்துச் சென்றிருந்த குடிநீரையே பயன்படுத்திக் கொண்டார்.

தனது பாதுகாப்பின் மீது கவனமாக இருந்து கொண்ட உகண்டா அதிபர், ஹில்டன் விடுதியில் தனது சமையற்காரர் மூலம் சமைக்கப்பட்ட சைவஉணவுகளை மட்டுமே சாப்பிட்டார்.

அசைவ உவுகளை தவிர்த்துக் கொண்டதற்கும், சமையற்காரர், பாதுகாவலர்கள் மற்றும் குடிநீருடன் அவர் வந்து இறங்கியதற்கும் தனிப்பட்ட பாதுகாப்பின் மீது கொண்ட அக்கறையே காரணம் என்று கூறப்பட்டாலும், அது சிறிலங்கா மீதான நம்பிக்கையீனமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

0 comments:

கருத்துரையிடுக