siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 21 டிசம்பர், 2012

சோமாலியாவில் அகதிகள் படகு கவிழ்ந்தது: 55 பேர் பலி

சோமாலியாவிற்கு அருகிலுள்ள கடலில் படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 55 பேர் மூழ்கியுள்ளதாக அகதிகளுக்கான ஐ.நா முகமை தெரிவித்துள்ளது. வட -கிழக்கு சோமாலியாவின் போஸாஸ்ஸோ துறைமுகத்திலிருந்து புறப்பட்ட படகே இவ்வாறு கவிழ்ந்ததாகவும், இப்படகில் அதிகளவான பயணிகள் பயணித்ததே விபத்திற்கு காரணம் எனவும் அகதிகளுக்கான ஐ.நா முகமையாளர் தெரிவித்துள்ளார்.
இப்படகில் சோமாலியா மற்றும் எத்தியோப்பியா நாட்டை சேர்ந்தவர்கள் பயணித்து இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.
மேலும் 23 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், ஏனையவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

0 comments:

கருத்துரையிடுக