siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 21 டிசம்பர், 2012

பிரிந்த தந்தையை சந்திக்க சூட்கேசுக்குள் மறைந்து சென்ற சிறுவன்.

.
 
இத்தாலியில் பிடிபட்டான் ஆப்கானிஸ்தானிலிருந்து, சூட்கேசில் அடைத்து, எடுத்து வரப்பட்ட சிறுவன், இத்தாலி, நாட்டில் மீட்கப்பட்டான்.
இத்தாலி, எல்லையோர காவல் படையினர், கடந்த வாரம், தங்கள் நாட்டு எல்லையில் நுழைந்த, அலி ஷெகர், 35, என்ற நபரை சோதனை இட்டனர். அப்போது அவர், ஒரு சூட்கேசை பத்திரமாக வைத்திருந்தார். சந்தேகமடைந்த காவலர்கள், அந்த சூட்கேசை திறந்து பார்த்த போது, 5 வயது பையன், சுருட்டியபடி படுத்திருந்தான்.
இது குறித்து அதிகாரிகள், விசாரித்த போது, ஜெர்மனியில் உள்ள உறவினரிடம் ஒப்படைப்பதற்காக, இந்த சிறுவனை அழைத்து வந்ததாக, ஷெகர் கூறினார்.மூன்று மாதத்திற்கு முன் சிறுவன், ஆப்கானிஸ்தானை விட்டு புறப்பட்டுள்ளான்.
மொழி பெயர்ப்பாளர் மூலம், சிறுவனிடம் விசாரித்த போது, தந்தையை பார்க்க விரும்புவதாக கூறினான். பெற்றோர் ஒப்புதலுடன் தான் சிறுவன் அழைத்து வரப்பட்டானா, என்பதை விசாரிக்கும் படி, வெனிஸ் கோர்ட் நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்

0 comments:

கருத்துரையிடுக