siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 21 டிசம்பர், 2012

பயங்கர ஆயுதங்களால் தாக்கி தப்பிக்க முயன்ற மெக்சிகோ கைதிகள்

      
21 பேர் சுட்டுக்கொலை.நாட்டின் கோமேஸ் பலாசியோ நகரில் உள்ள சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் 21 பேர் கொல்லப்பட்டனர்.
சிறையிலிருந்து தப்பிக்க கைதிகள் முயன்றபோது கைதிகளுக்கும் சிறைக் காவலர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது கைதிகள் தங்களிடமிருந்த ஆயுதங்களைக் கொண்டு காவலர்கள் மீது தாக்கினர். அப்போது பதிலுக்கு காவலர்களும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த மோதலில் கைதிகள் தரப்பில் 12 பேரும் காவலர்கள் தரப்பில் 9 பேரும் உயிரிழந்தனர் என துராங்கோ மாகாண பொதுப்பாதுகாப்பு இலாகா செயலர் ஜீசஸ் ரோசோ தெரிவித்தார்.

கைதிகள் பயன்படுத்திய ஆயுதங்கள் எந்த வகையைச் சேர்ந்தவை, எப்படி ஆயுதங்கள் கைதிகளுக்கு கிடைத்தன என்பது பற்றிய விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை. சிறையிலிருந்து செவ்வாய்க்கிழமை கைதிகள் தப்பிக்க முயற்சி செய்வதை அறிந்து காவலர்கள் அபாயமணியை ஒலிக்கச் செய்தனர். இதையடுத்து கலவரம் வெடித்தது.

0 comments:

கருத்துரையிடுக