siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

திங்கள், 15 ஏப்ரல், 2013

அழைப்பை நிராகரித்தது வடகொரியா: போர் மூளுமா?


பேச்சுவார்த்தைக்கு வருமாறு தென் கொரியா விடுத்த அழைப்பை வடகொரியா நிராகரித்து விட்டது.
சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா கடந்த பிப்ரவரி மாதம் அணு ஆயுதச் சோதனையை நடத்தியது. இதைத் தொடர்ந்து அந்நாட்டின் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன.
எனினும், மீண்டும் ஏவுகணைச் சோதனைகளை நடத்த வடகொரியா தயாராகி வருவதாக உளவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தென் கொரியாவையும் அதற்கு ஆதரவு தெரிவிக்கும்.
அமெரிக்காவையும் தாக்குவோம் என்று வடகொரியா அறிவித்துள்ளது. இதனால் கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுதப் போர்ப் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
பதற்றத்தைத் தணிப்பதற்காக பேச்சுவார்த்தைக்கு வருமாறு வடகொரியாவுக்கு தென் கொரியா கடந்த வாரம் அழைப்பு விடுத்திருந்தது. எனினும், இது தென் கொரியாவின் தந்திரம் என்று கூறி இந்த அழைப்பை வடகொரியா நிராகரித்து விட்டது.
தென் கொரியா தனது மோதல் போக்கைக் கைவிடும் வரை அதனுடன் பேச்சு நடத்தும் எண்ணம் தங்களுக்கு இல்லை என்று வடகொரிய அரசின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே வடகொரியா ஏவுகணைத் தாக்குதல் நடத்தினால் அதை எதிர்கொள்ளும் வகையில் ஜப்பான் அரசு, தலைநகர் டோக்கியோவைச் சுற்றிலும் பேட்ரியாட் ஏவுகணைகளை நிறுத்தி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

முதன்முறையாக தேர்தலில் போட்டியிடவுள்ள ?;



பாகிஸ்தானில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் வரலாற்றில் முதன்முறையாக பிந்தியா ராணா என்ற திருநங்கை போட்டியிடுகிறார்.
தேர்தலில் போட்டியிட முடிவெடுத்தது ஏன் என்பது தொடர்பாக பிந்தியா ராணா நிருபர்களிடம் கூறியதாவது:- பாகிஸ்தான் அரசியலைப் பற்றி நான் எப்போதுமே கவலைப்பட்டதில்லை.
கடந்த 2004ம் ஆண்டு என்னைப் போன்ற ஒரு திருநங்கை இறந்துவிட்டார். அவரது பிரேதத்தை சொந்த ஊரான பஞ்சாப் மாகாணத்திற்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்தோம். நானும் உடன் சென்றேன்.
ஆனால், விமானம் மூலம் பிரேதத்தை கொண்டு செல்வதற்குள் பல அவமானங்களை சந்திக்க நேர்ந்தது. என்னையும் இறந்துப்போன என் தோழியையும் அதிகாரிகள் கேவலமாக பேசி கேலி செய்தார்கள்.
அவள் எப்படி செத்தாள் அவள் சாகும் அளவிற்கு நீ என்ன செய்தாய் என்று ஆபாசமாக கிண்டல் செய்தனர். எங்களைப் போன்ற திருநங்கைகள் எவ்வளவு கேவலமாக நடத்தப்படுகிறார்கள் என்று எண்ணி அன்று மிகவும் வேதனைப்பட்டேன்.
அதிகாரவர்க்கம், தொழில்முறை அரசியல்வாதிகள், ரியல் எஸ்டேட் மாஃபியாக்கள் ஆகியோரின் முகத்திரையை கிழிப்பதற்கான வாய்ப்பாக இந்த தேர்தல் அமைந்துள்ளது.
திருநங்கைகளின் அவலங்களை மக்கள் பிரதிநிதி என்ற முறையில் அரசிடம் எடுத்துக்கூறி உரிய தீர்வு காணவே தேர்தலில் போட்டியிடுகிறேன் என மேலும் அவர் கூறினார்.
 

ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

தகராறு : துப்பாக்கிச் சூட்டில் முடிவடைந்தது !


திஸ்ஸமகாராம - கங்கசிரிபுர பகுதியில் இரு குடும்பங்களுக்கு இடையில் இடம்பெற்ற சண்டையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.இந்த சம்பவம் நேற்று (13) இரவு 7 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.புத்தாண்டை வரவேற்று போடப்பட்ட பட்டாசு ஒன்று அருகில் உள்ள வீட்டில் விழுந்துள்ளது. இதனை அடுத்து பட்டாசு போட்ட நபரின் குடும்பத்திற்கும் பட்டாசு விழுந்த வீட்டு குடும்பத்திற்கும் இடையில் சண்டை மூண்டுள்ளது.
இச்சண்டை விரிவடைந்து அங்கு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, மகன், மகள் ஆகியோர் படுகாயமடைந்து ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.இதில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மகள் மேலதிக சிகிச்சைகளுக்கென கராபிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். துப்பாக்கிச்சூடு நடாத்திய கணவன் மற்றும் மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். திஸ்ஸமகாராம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 

சனி, 13 ஏப்ரல், 2013

தொழில் நடத்துவது கடினம்: நெஸ்ட்லே ?,?


சுவிட்சர்லாந்தில் சட்டதிட்டங்கள் கடுமையாகிக் கொண்டிருப்பதால் இந்நாட்டில் தொழில் நடத்துவது எங்களுக்குக் கடினமாக இருக்கின்றது என்று உலகில் மிகப்பெரிய உணவுப்பொருள் நிறுவனத்தின் தலைவரான பிராபெக் லெட்மாதே( Brabeck-Letmathe) தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தில் பொருளாதாரம், அரசியல், சமூகம் ஆகியவற்றுக்கு இடையே புதிய கருத்தொற்றுமை நிலவவேண்டும்.
மேலும் இந்த மூன்று துறைகளிலும் தொழில் நடத்துவதில் ஏற்படும் சிரமங்களையும், சவால்களையும் புரிந்து கொண்டால் மட்டுமே சமனிலையில் நின்று தொழில்துறையை ஊக்குவிக்க முடியும் என்று ஆஸ்திரியாவைச் சேர்ந்த லெட்மாதே விரிவாக தெரிவித்துள்ளார்.
 

இரத்த வெறி பிடித்துவிட்டது: ஓரினச் சேர்க்கை,.,,,



பிரான்சில் ஓரினச் சேர்க்கையாளருக்குத் திருமண அந்தஸ்தும், குழந்தையைத் தத்தெடுக்கும் உரிமையும் தரலாம் என்று நேற்று பிரெஞ்சு மேலவையில் மசோதா தாக்கலானது.
இதனால் வெகுண்டெழுந்த ஓரினச் சேர்க்கை எதிர்ப்பாளர்கள் ஜனாதிபதி ஹேலாண்டுக்கு ரத்தவெறி பிடித்து அலைவதாகக் கண்டனக் குரல் எழுப்பினர்.
மேலும் வருகின்ற மே 26ம் நாள் அன்று பெரிய அளவில் நாடு தழுவிய போராட்டம் நடத்தப் போவதாக ஓரினச் சேர்க்கையை எதிர்ப்பவர்கள் அறிவித்திருந்தனர்.
இது குறித்து மைய - வலது UMP கட்சியைச் சேர்ந்த கிறிஸ்ட்டியன் ஜேக்கப்(Christian Jacob) கூறுகையில், ஜனாதிபதி பிரெஞ்சு மக்களுடன் கடுமையாக மோதுகிறார் என்றும் இது ஒரு உள்ளூர்ப் போர் எனவும் சாடிவுள்ளார்
 

கண்காணிப்பாளர்களில்லாமல் பேசமுடிவதில்லை ?


சர்வதேச செஞ்ச்சிலுவைசங்கத்தினர், உலக நாடுகளின் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளைச் சந்தித்து பேசி, குற்றவாளிகளின் மனநிலையை சீராக்கவும், அவர்களது மனச்சுமைகளைக் குறைக்கவும் உதவுவர்.அவர்கள் குற்றவாளிகளைச் சந்திக்கும்போது யாருடைய குறுக்கீடும் இன்றி, தனிமையில் பேசுவது, குற்றவாளிகளுக்கும் எளிதான சூழ்நிலையை உருவாக்கும். ஆனால், உஸ்பெகிஸ்தானில் நிலைமை அதுபோல் இல்லை என்றும், கண்காணிப்பாளர்கள் இல்லாமல் தங்களால் குற்றவாளிகளுடன் தனிமையில் பேச முடிவதில்லை என்றும், அது அவர்களுக்கு எந்தப் பலனையும் ஏற்படுத்தாது என்றும் சங்கத்தின் நிர்வாக இயக்குனர் ஒய்விஸ் டெக்கார்ட் தெரிவித்துள்ளார்.
எனவே, தங்கள் உறுப்பினர்கள் அந்நாட்டு சிறைக்கைதிகளை இனி சந்திக்கப்போவதில்லை என்று அவர் கூறினார். இதுபோல் ஒருபோதும் நிகழ்வதில்லை என்றும், இந்த முடிவை அவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது எனவும் டெக்கார்ட் குறிப்பிட்டார்.
செஞ்சிலுவை சங்கத்தினரின் முடிவு குறித்து, உஸ்பெகிஸ்தான் நாட்டு அரசு பதில் ஏதும் தெரிவிக்கவில்லை. அந்நாட்டு அதிபர் இஸ்லாம் கரிமோவின் மனித உரிமை குறித்த செயல்பாடுகள், மேற்கத்திய பிரச்சாரக் குழுக்களிடையே, எப்போதுமே விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கின்றன. முறையான அரசியல் எதிர்க்கட்சிகள் என்று எதுவும் இல்லாத நிலையில், அந்நாட்டு ஊடகங்களும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன

: தலிபான்களின் தாக்குதலில் 13 இராணுவ வீரர்கள்


ஆப்கானிஸ்தானில் தற்போது சாதகமான பருவநிலை நீடிப்பதால் பாகிஸ்தானில் இருந்து ஏராளமான தீவிரவாதிகள் மலைவழியாக கிழக்கு ஆப்கானிஸ்தானுக்குள் சுலபமாக ஊடுருவி விடுகின்றனர்.இப்படி ஊடுருவிய தீவிரவாதிகள் உள்ளூர் தலிபான் தீவிரவாதிகளுடன் சேர்ந்து ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள அமெரிக்க ராணுவத்தினர் மீது அதிரடி தாக்குதல்களை நடத்துகின்றனர்.  குனார் மாகாணம், நாரி மாவட்டத்தில் உள்ள ராணுவ கூடாரம் மீது நேற்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 13 ராணுவ வீரர்கள் பலியாகினர்.
சுமார் 5 மணி நேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டையில் 13 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், அந்த ராணுவ கூடாரம் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாகவும் தலிபான் செய்தி தொடர்பாளர் சபியுல்லா முஜாஹிதீன் கூறினார்

ஓரினச்சேர்க்கைக்கான அகராதிப் பொருள் கண்டுபிடிப்பு/;


பிரான்சில் ஆண்களும் பெண்களும் தமக்குள் ஒரு பால் மண உறவு கொள்வதை சட்டம் இன்னும் அங்கீகரிக்காத நிலையில், லாரோஸ்(Larousse) அகராதி ஒருபால் உறவையும் திருமணம் என்று பொருள் தந்துள்ளது.
இந்த அகராதியானது எதிர்வரும் 2014ம் ஆண்டில் வெளிவரும் இதில் திருமணம் என்ற சொல்லுக்குப் புதிய பொருள் தரப்பட்டுள்ளது.
அதாவது ஒரே பாலினத்தைச் சேர்ந்தவரோ வெவ்வேறு பாலினத்தைச் சேர்ந்தவரோ இணைந்து வாழ தமக்குள் ஏற்படுத்திக் கொள்ளும் ஒரு புனிதச் செயல் என்று பொருள் தந்துள்ளது.
முந்தைய அகராதிகளில் திருமணம் என்ற சொல்லுக்கு, ஆணும் பெண்ணும் இணைந்து வாழ நாட்டின் சட்டப்படி நடைபெறும் ஒரு புனிதச் செயல் என்று பொருள் காணப்பட்டது. புதிய அகராதி தேசியச் சட்டப்படி என்பதை நீக்கிவிட்டது. ஆணும் பெண்ணும் என்பதையும் மாற்றிவிட்டது.
வருகின்ற வாரங்களில் பிரெஞ்சு மேலவையில் ஒருபால் உறவுக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கும் மசோதா இயற்றப்படும். இந்த சூழ்நிலையில் இந்த அகராதியைச் சிலர் பாராட்டுகின்றனர். ஆனால் UMP கட்சியைச் சேர்ந்த ஹெர்வி மேரிட்டோன் என்பவர் ஒரு பால் உறவை கடுமையாக எதிர்த்தைப் போல இந்த அகராதியையும் எதிர்த்துள்ளார்.
மேலும் அகராதியில் இவ்வாறு பொருள் கூறி இருப்பது நாட்டின் ஜனநாயகப் பண்புக்கு எதிரானது என்றும் இப்போக்கை கடுமையாகக் கண்டித்து ஒடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இக்கட்சியின் துணைத்தலைவரான லாரண்ட் வக்கீசும் கடுமையாக எதிர்த்துள்ளார்.
இதற்கிடையே இந்த அகராதியின் வெளியீட்டாளர்கள் விடுத்த ஓர் அறிக்கையில் ஐரோப்பிய நாடுகளில் திருமணம் என்பதற்கான பொருள் மாறி வருவதையே நாங்கள் அகராதியில் தெரிவித்திருக்கிறோம் என்று விளக்கம் அளித்துள்ளனர்.
 

வெள்ளி, 12 ஏப்ரல், 2013

இணையங்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள்



எம் பெருமான் துணை  நம் நவற்கிரி.கொம் நிலாவரை .கொம் இணையக்களின் ஓர்ராண்டு வாழ்த்துக்கள் ஏந்தி வரும் கருத்துக்கள் ஏற்றிட வைத்திடும் பெருமைக்கு உரிய நவற்கிரி.நிலாவரை இணையமே வாழ்க நீ வரம்புயர நீர் உயரும் நீ உயர பாடுபடும் பலரது முயற்சியினாலும் இணைய வாசகர்களின் உக்கிவிப்பினாலும் வளர்ந்து வருகின்றது மிகவும் மகிழ்சி இங்கு நல்ல கருத்தாய், நாம் சுவைக்க நீ தந்தாய். வாழிய நீ பல்லாண்டு கிராமிய மணமும் எம்மவரின்  நிகழ்வுகளையும் நித்தமும் சுமந்து வந்து.சுவை யான ,,,திடுக்கிடும் செய்திகளையும் உடனுக்கு உடன் தருகின்றது  தந்திடுவீர்
முக்கிய குறிப்பு ```தற் பொழுது இலவச இணைப்பு பிறந்தநாள் திருமணநாள் கழியாட்டு வைபவங்கள் மற்றும் இறப்பு அறிவிப்புக்கள் எதுவாக இருந்தாலும்உடன்
தொடர்புகொள்ள E M ,, navatkiri@ hispeed .ch அல்லது ,,பேஸ்புக்கில்navatkiricom navatkiri ,,,தொடர்புகொள்ளவும் நன்றி,,,

http://www.navarkiri.com/ navatkirinew.blogspot.ch / navakiri.blogspot.ch/ http://navakirithevan.blogspot.ch/
navakirinilavarai.blogspot.ch /http://navarkirionriyam.blogspot.ch/http://lovithan.blogspot.ch/{www.srimanikkappilliya.com}http:/


போர் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்: அமெரிக்கா ?


அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா வடகொரியா நடத்தும் போர் நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வடகொரியா தனது அண்டை நாடான தென் கொரியா மீது போர் பிரகடனம் செய்தது. பின்னர் தென் கொரியாவின் நட்பு நாடான அமெரிக்கா மீதும் அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தது.
இந்நிலையில் இதுகுறித்து ஜனாதிபதி ஒபாமா கூறுகையில், வட கொரியாவில் போர் நடப்பதை யாரும் விரும்பவில்லை. அதே நேரத்தில் மக்களை காப்பாற்றவும் நட்பு நாடுகளை பாதுகாக்கவும் தேவையான நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொள்ளவுள்ளது.
மேலும் வடகொரியா தனது பகைமையான போர் அணுகுமுறையை நிறுத்திக்கொள்ள வேண்டிய நேரம் இது. இதனால் உலகிலுள்ள மற்ற நாடுகளைப் போல வடகொரியாவும் அடிப்படை விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
வடகொரியா அணு ஏவுகணைகளை வருகின்ற நாட்களில் பயன்படுத்த வாய்ப்புள்ளது என்று அமெரிக்க பென்டகனின் உளவு பிரிவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது