siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வெள்ளி, 24 மே, 2013

தலதா மாளிகைக்கு முன்னால் பிக்கு தீக்குளிப்பு


கண்டி தலதா மாளிகைக்கு முன்னால் பௌத்த பிக்கு ஒருவர் தீ குளித்துள்ளார்.
குறித்த பிக்கு மிருகங்களை கொல்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தனக்குத் தானே பெற்றோலை ஊற்றி தீ வைத்துக்கொண்டுள்ளார்.
வெசாக் தினத்தையொட்டி கண்டி தலதா மாளிகையில் விசேட மத நிகழ்வுகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த நிலையில் குறித்த பிக்கு தீ குளித்துள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திலிருந்த பொதுமக்கள் குறித்த பிக்குவை பிடித்து தீயை அணைத்து கண்டி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
எனினும் கண்டி வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்

ஆட்கடத்தல்களில் ஈடுபட்டதாக இலங்கையர் மீது


பிரித்தானியாவில் சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக இலங்கையர் ஒருவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் க்ரோடிடொன் பிரதேசத்தில் வாழ்ந்து வரும் நபருக்கு எதிராகவே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
50 வயதான சுப்ரமணியம் என்பவர் சட்ட விரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. சட்டவிரோதமாக புகலிடக் கோரிக்கையாளர்களை கடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

விமான தாக்குதலில் 4 அமெரிக்கர்கள் பலி: ஒபாமா

 
 
அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா, நேற்று செனட் உறுப்பினர்களிடம் பயங்கரவாத எதிர்ப்பு குறித்து அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து உரையாற்றினார்.
அப்போது முதன்முதலாக ராணுவ நடவடிக்கையில் நான்கு அமெரிக்கர்கள் கொல்லப்பட்டதை ஒப்புக் கொண்டுள்ளார். எதிரிகளைத் தாக்கும் வண்ணம், முறைப்படுத்தப்பட்ட ஆளில்லாத ராணுவ விமானங்களைப் பயன்படுத்தி கடந்த 2009ம் ஆண்டு முதல் நான்கு அமெரிக்கர்கள் பாகிஸ்தானிலும், ஏமனிலும் கொல்லப்பட்டுள்ளனர்.
ஆனால், இது குறித்து அரசு சட்டதரனி எரிக் ஹோல்டர் எதுவும் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. அல் அவ்லாகி என்ற தீவிர இஸ்லாமிய கணக்கர் ஒருவர் கடந்த 2011ம் ஆண்டு, ஏமனில் இத்தகைய தாக்குதலில் கொல்லப்பட்டார். அதே வருடம் சமீர் கான் என்ற மற்றொரு அமெரிக்கரும் இதே வகையான தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.
டென்வரில் வாழ்ந்து வந்த அவ்லாகியின் 16 வயது மகனும் இதே போன்று கொல்லப்பட்டதாக அரசு சட்டதரனி எரிக் ஹோல்டர், செனட்டின் நீதித்துறைக் குழுவின் தலைவர் பாட்ரிக் லீஹிக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.
இவர்களுள் அவலாகி தவிர, மற்ற மூவரும் எதிர்பாராதவிதமாக இந்தத் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் என்றும் அது குறித்து அமெரிக்க அரசு அறிந்திருந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு கொல்லப்பட்ட மற்றொரு நபர் குறித்த தகவலும் சமீபத்தில் வெளிவந்துள்ளது. கடந்த 2009ம் ஆண்டில் குவாண்டிகோவில் உள்ள கப்பல்படைத்தளத்தை தாக்க முயன்று, பின்னர் பாகிஸ்தானின் பழங்குடியைச் சேர்ந்த ஜிகாதி தீவிரவாதிகளுடன் சேர்ந்த ஜுடே கெனான் முகமது என்பவரே இத்தகைய ஆளில்லாத ராணுவ விமானத்தால் கொல்லப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது முறையாக ஜனாதிபதி பதவி ஏற்றவுடன், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து சட்டசபை உறுப்பினர்களுக்குத் தெரியவேண்டும் என்று ஒபாமா கருதியதால் தான் அனைத்து விபரங்களையும் தெரிவித்துள்ளதாகவும் எரிக் ஹோல்டர் குறிப்பிட்டுள்ளார்
 

செயற்கைக்கோள் ரஷ்யாவால் கைவிடப்பட்ட ராக்கெட்டில்


ஈக்குவடார் நாட்டின் முதல் செயற்கைக் கோளான பெகாசஸ், சென்ற மாதம் சீனாவின் ஜியுகுவான் விண்வெளி நிலையத்திலிருந்து அனுப்பப்பட்டது.
விண்வெளியில் ரஷ்யாவிலிருந்து செலுத்தப்பட்டு செயலிழந்த நிலையில் சுற்றிக் கொண்டிருக்கும் ராக்கெட் ஒன்றின் மீது இந்த பெகாசஸ் செயற்கைக் கோள் மோதியதிலிருந்து அந்நாட்டின் விண்வெளி நிலையத்திற்கு சரியாக சிக்னல்கள் கிடைக்கவில்லை என்று அம்மையம் தெரிவித்துள்ளது.
ஆயினும், தொடர்ந்து விண்வெளியில் சுற்றி வருவதால் அது பழுதடைந்தது குறித்து இன்னும் சரிவரத் தகவல் தெரியவில்லை.
பூமியைச் சுற்றி வருகின்ற செயற்கைப் பொருட்களைக் கண்காணிக்கும் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த கூட்டு விண்வெளி செயல்பாட்டு நிர்வாக மையம், ரஷ்ய ராக்கெட்டுடன் நேரடியான மோதல் எதுவுமில்லை என்றும் அதன் சிதறிய துண்டுகளுடன் பின்னர் மோதியிருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.
ஈக்குவடார் நாட்டின் விண்வெளி நிலையத் தலைவரான ரோன்னி நடேர், பெகாசஸ் செயல்பாட்டில் இருப்பதாகவும் அந்நாட்டு மக்களுக்கான செயற்கைக்கோள் இயங்கி வருவதாகவும் இணையதளத்தில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்
 

லண்டனில் பயங்கரவாத தாக்குதல்: மேலும் 2 பேர்?


லண்டனில் இராணுவ வீரர் ஒருவர் கழுத்தறுத்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்தின் தென்கிழக்கு பகுதியில் உள்ள ஊல்விச் இராணுவ முகாமில் பணியாற்றும் வீரர் ஒருவர், நேற்று பிசியான லண்டன் சாலையில் கழுத்தறுக்கப்பட்டு கொல்லப்பட்டார்.
கொலையாளியை பொதுமக்களே மடக்கி பிடித்தனர். இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக ஒரு பெண் உட்பட மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் பயங்கரவாதத்துக்கு எதிரான பொலிசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளில் ஒருவர் மைக்கேல் எடிபோலஜா(28) என்று தெரிய வந்துள்ளது.
பிரிட்டன் இராணுவத்தினரால் முஸ்லிம் மக்கள் ஒவ்வொரு நாளும் கொல்லப்பட்டு வருகின்றனர். அதற்குப் பழிவாங்கவே இத்தாக்குதலை நடத்தினேன் என்று தாக்குதலுக்குப்பின் எடிபோலஜா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பாதுகாப்பு நிலை குறித்து ஆராய அவசர கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப்பின் செய்தியாளர்களை சந்தித்த டேவிட் கமரூன் கூறுகையில், பயங்கரவாதம் எந்த வடிவில் வந்தாலும் அதனை அனுமதிக்க முடியாது.
புதன்கிழமை நடைபெற்ற தாக்குதல் பிரிட்டன் மீது நடத்தப்பட்ட தாக்குதல்; இஸ்லாம் மதத்துக்கு இழைக்கப்பட்ட துரோகம். இத்தாக்குதல் பிரிட்டன் மக்களை மிகவும் பாதித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்
 

வியாழன், 23 மே, 2013

ராணுவ வீரர் தலை துண்டித்துக் கொலை

 .
 
லண்டனில், பிரிட்டன் ராணுவ வீரர் ஒருவர் தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.பரபரப்பான லண்டன் சாலையில், ராணுவ வீரர் ஒருவரைப் பிடித்த இரண்டு மர்ம மனிதர்கள், அவரது தலையைத் துண்டித்துப் படுகொலை செய்தனர். அப்போது, இஸ்லாமிய மொழியில் அவர்கள் கத்தியதாகவும் தெரிகிறது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் பயங்கரவாதிகளாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால், அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பிரிட்டனின் பல பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

அமெரிக்க எழுத்தாளருக்கு மேன் புக்கர் பரிசு

நியூயார்க்கில் வாழும் அமெரிக்க எழுத்தாளர் லிடியா டேவிஸýக்கு 2013-ம் ஆண்டுக்கான மேன் புக்கர் பரிசு கிடைத்துள்ளது. மிகச் சிறந்த எழுத்தாளரும், சிறந்த மொழிபெயர்ப்பாளருமான லிடியா டேவிஸýக்கு இதன் மூலம் 60 ஆயிரம் பவுண்ட் ரொக்கப் பரிசு கிடைத்துள்ளது. ""தி எண்ட் ஆஃப் தி ஸ்டோரி'' மற்றும் ""வெரைடீஸ் ஆப் டிஸ்டர்பன்ஸ்'' எனும் இரு நாவலுக்காக புக்கர் பரிசு கிடைத்துள்ளது.
 தி மேன் புக்கர் பரிசுக்காக தேர்வு செய்யப்பட்டவர்களில் பிரபல கன்னட எழுத்தாளர் யு.ஆர். அனந்தமூர்த்தியும் ஒருவர். இறுதியில் லிடியா தேர்வு செய்யப்பட்டதன் மூலம் புக்கர் விருது பெறும் வாய்ப்பை அனந்தமூர்த்தி இழந்தார்.
 ஆண்டுதோறும் வழங்கப்படும் புக்கர் பரிசுடன் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு எழுத்தாளருக்கு வழங்கப்படும் சர்வதேச விருதானது அவரைக் கெüரவிப்பதாக அமையும். 
இத்தகைய விருது பெறுவோர் ஆங்கிலத்தில் நாவல் எழுதியிருக்க வேண்டும். அல்லது பிற மொழியில் எழுதப்பட்டிருந்தாலும், அந்த நாவல் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று விருதுக்கான தேர்வுக்குழு தலைவர் சர் கிறிஸ்டோபர் ரிக்ஸ் கூறினார்.
 லண்டனில் உள்ள விக்டோரியா மற்றும் ஆல்பர்ட் அருங்காட்சியக அரங்கில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் தனது உடல் நலத்தையும் பொருட்படுத்தாது கலந்து கொண்டார் அனந்த மூர்த்தி.
ஒரு நாளைக்கு நான்கு முறை டயாலிசிஸ் செய்ய வேண்டிய நிலையில் இருந்தாலும் தனது 80 வயதையும் பொருட்படுத்தாது இவ்விழாவில் அவர் கலந்து கொண்டது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. இந்தியாவில் உள்ள அனைத்து எழுத்தாளர்கள் சார்பிலும் இந்த விழாவில் தான் கலந்து கொண்டதாகக் குறிப்பிட்டார் அனந்தமூர்த்தி.

பிரிட்டனில் பயங்கரவாத தாக்குதல்?

பிரிட்டனின் தலைநகர் லண்டனுக்கு அருகே புதன்கிழமை நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார்.

இதைத் தொடர்ந்து போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதிகள் இருவரும் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தாக்குதலில் உயிரிழந்தவர் ராணுவ வீரர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதலில் ஈடுபட்ட இருவரும் ஆயுதங்களுடன் வந்ததாக ராணுவ அதிகாரி சைமன் லட்ச்ஃபோர்டு தெரிவித்தார்.

சம்பவம் நடைபெற்ற லண்டனின் தென்கிழக்கில் உள்ள வூல்விச் சாலையை போலீஸார் அடைத்தனர். ராணுவ பயிற்சி முகாமுக்கு அருகே இச்சம்பவம் நடந்ததுள்ளது.

இத்தாக்குதல் பயங்கரவாதத் தாக்குதல் என்று செய்திகள் வெளியானாலும், இது குறித்து போலீஸார் எதுவும் தெரிவிக்கவில்லை.

இச்சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் தெரிவித்தார்.

புதன், 22 மே, 2013

மதுவைப் பருக்கி பாலியல் துஷ்பிரயோகம்

15 வயது சிறுவன் ஒருவனை ஏமாற்றி மதுவை அருந்த வைத்து அவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மாத்தளை பிரதேச சபையின் ஐ.ம. கூட்டமைப்பு உறுப்பினரும் சமூர்த்தி அபிவிருத்தி அதிகாரியுமான ஒருவரை எதிர்வரும் ஜூன் மாதம் 6 ஆம்திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு மாத்தளை நீதிமன்ற நீதிவான் திருமதி சத்துரிக்கா டி சில்வா உத்தரவிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோர் மாத்தளை பொலிஸ் நிலையத்தில் சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்புப் பிரிவில் செய்த முறைப்பாட்டையடுத்தே குறிப்பிட்ட சந்தேக நபரை பொலிஸார் கைது செய்திருந்தனர்.
சந்தேக நபரை விசாரணையின் பின்னர் மாத்தளை நீதிமன்றத்தில் ஆஜர்செய்தப்போதே நீதிவான் சந்தேக நபரை எதிர்வரும் 6 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதுடன் பாதிக்கப்பட்ட சிறுவனின் வைத்திய அறிக்கையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்

தேவாலயத்தினுள் தற்கொலை!

பிரபல எழுத்தாளரும் கட்டுரையாளரும் தேசியவாதிகளால் பாராட்டப்பட்டவருமான Dominique Venner  இன்று மாலை 16h00 மணிக்கு Notre-Dame de Paris தேவாலயத்தினுள் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தேவாலயத்தினுள் உள்ளேயும் வெளியேயும் உல்லாசப் பயணிகள் உட்பட ஆயிரத்து ஐநூறு பேர் உடனடியாகக் காவற்துறையினரால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். தேவாலயத்தின் முதற்கட்டுக்கு அருகில் நின்று 78 வயதான இவர் தனது தலையில் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
   இன்று காலை தனது வலைப்பதிவில் ' 26 மேயின் ஜெஹய்டெக்கர் போராட்டம்' «La manif du 26 mai et Heidegger» என்ற த
லைப்பில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட ஓரினத் திருமண அங்கீகாரச் சட்டத்தை 'மிகவும் மோசமானது' என்று விமர்சித்திருந்தார். Taubira சட்டத்தின் எதிர்ப்பாளர்களையே மே 26இல் தேசியப் பேரணிக்காக அழைத்திருந்தார்தற்கொலை செய்து கொண்ட இந்தக் கட்டுரையாளர் «இஸ்லாமிய சக்தி» யைக் கண்டித்து விமர்சித்திருந்தார். ஆபிரிக்க மக்ரெபன் குடியேற்றத்தைக் கடுமையாகக் கண்டித்ததோடு «பிரான்ஸ் இஸ்லாமியர்களின் கைகளில் விழுந்து கொண்டிருக்கின்றது» என்றும் கோபத்தோடு விமர்சித்திருந்தார். «40 ஆண்டுகளாக இதுவரை மற்றும் இப்போது ஆட்சி செய்து கொண்டிருக்கும் அரசியற் கட்சிகள் (FN நீங்கலாக), தேவாலயங்கள், முதலாளிகள் போன்றோர் அனைத்து வழிகளிலும் ஆபிரிக்க மக்ரெபன் குடியேற்றத்தை முடக்கி விட்டுக் கொண்டே வருகின்றனர்» என்று தொடர்ந்தும் எச்சரித்து வந்துள்ளார்,