siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

திங்கள், 8 ஜூலை, 2013

இளவரசன் மரணம் தமிழினத்திற்கு ஏற்பட்ட இழிவு-நாம் தமிழர் கட்சி!



ஏற்பட்ட பெரும் துயரம் என்பது மட்டுமின்றி அது காதலையும் வீரத்தையும் போற்றும் எம் தமிழ் தேசிய இனத்தின் மாண்பிற்கும் பண்பாட்டிற்கும் ஏற்பட்ட ஒரு இழிவாகும்.
தமிழினத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணிற்கும் ஒரு இளைஞனுக்கும் இடையே இயற்கையாகவும் இயல்பாகவும் ஏற்பட்ட ஒரு உறவை சாதியமாக்கி அரசியலாக்கியதன் விளைவு அது முதலில் திவ்யாவின் தந்தையையும் இப்போது அவரை காதலித்து மணமுடித்த இளைஞர் இளவரசனையும் பலிகொண்டுள்ளது பெரும் வேதனையாகும்.
தமிழர் இலக்கியத்தில் காதல் போற்றப்படுகிறது தமிழர் வாழ்வியலில் வீரத்திற்கு இணையான உன்னத இடம் காதலுக்கு தரப்பட்டுள்ளது நமது கல்வியிலுன் கூட காதல் இலக்கியங்கள் இடம்பெறுகின்றன காதலை மையக் கருவாக வைத்து வெளியான பல நூற்றுக்கணக்கான தமிழ்த் திரைப்படங்கள் பெரும் வெற்றி பெற்றதோடு காலத்தால் அழியாத காவியங்களாக இன்றளவும் போற்றப்படுகின்றன. இப்படி தமிழரின் வாழ்வியலில் நீக்கமுடியாத ஒரு இடத்தைப் பெற்ற காதல் இன்றைக்கு தமிழினத்தை கூறுபோடும் சாதியப் பகைக்கும் தமிழ்த் தேசிய அரசியலுக்கும் தமிழினத்தின் ஒற்றுமைக்கும் ஒரு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றால் அதற்கு முழு முதற் காரணம் திவ்யா – இளவரசன் காதல் உரிய வகையில் கையாளப்படாததும் தாங்கள் செய்துவரும் அரசியலுக்கான கருவியாக ஆக்கப்பட்டதே. சமூக நீதிக்காக அரசியல் செய்யலாம் அது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் சாதிக்காக அரசியல் செய்வதை ஒரு நாகரீக சமூகம் ஏற்றுக்கொள்ளலாகுமா?
தமிழ்நாட்டின் சமூக வாழ்வில் ஒவ்வொரு நாளும் பல நூற்றுக்கணக்கான காதலர்கள் பெற்றோர்களின் சம்மதத்துடனும் ஆதரவுடனும் மணம் செய்துகொண்டுதான் வருகிறார்கள். ஆனால் சில காதல் திருமணங்கள் மட்டுமே இப்படி சாதிய பார்வையாலும் தங்கள் சாதியின் மாண்பைக் காக்க புறப்பட்ட சாதிய அரசியல்வாதிகளாலும் பிரச்சனையாக்கப்படுகின்றன. இப்படிப்பட்ட பிரச்சனைகள் தமிழினமும் தமிழ்நாடும் தன்னை எதிர்நோக்கியுள்ள பல்வேறு பெரும் சிக்கல்களுக்காக போராட ஒன்றுபட்டு நிற்க வேண்டிய அடிப்படையை தகர்த்து விடுகிறது.
இதனை தமிழின மக்கள் ஆழமாக புரிந்துகொள்ள வேண்டும் அதிலும் குறிப்பாக இளைய சமூதாயம் நம் இனத்தின் ஒற்றுமையை பலவீனப்படுத்தும் சக்திகளை அவைகளின் அரசியலை ஆழமாக புரிந்துகொள்ள வேண்டும். நம்மை பிளக்கும் சாதிய சக்திகளையும் அவைகள் உருவாக்கும் கீழ்த்தரமான உணர்வுகளையும் புறந்தள்ளிட வேண்டும். இதனை செய்யத் தவறினால் தமிழனுக்கு என்று ஒரு அரசியலை உருவாக்கும் நமது முயற்சியும் நம் இனத்தின் விடுதலையும் உரிமை மீட்பும் கேள்விக்குறியாகிவிடும் என்பதை தமிழினத்திற்கு நாம் தமிழர் கட்சி வலியுறுத்திக் கூற கடமைபட்டுள்ளது

இளவரசன் மரணம் தமிழினத்திற்கு ஏற்பட்ட இழிவு-நாம் தமிழர் கட்சி!



தர்ம்புரியைச் சேர்ந்த இளைஞர் இளவரசனின் மரணம் அவரது குடும்பத்தாருக்கு ஏற்பட்ட பெரும் துயரம் என்பது மட்டுமின்றி அது காதலையும் வீரத்தையும் போற்றும் எம் தமிழ் தேசிய இனத்தின் மாண்பிற்கும் பண்பாட்டிற்கும் ஏற்பட்ட ஒரு இழிவாகும்.
தமிழினத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணிற்கும் ஒரு இளைஞனுக்கும் இடையே இயற்கையாகவும் இயல்பாகவும் ஏற்பட்ட ஒரு உறவை சாதியமாக்கி அரசியலாக்கியதன் விளைவு அது முதலில் திவ்யாவின் தந்தையையும் இப்போது அவரை காதலித்து மணமுடித்த இளைஞர் இளவரசனையும் பலிகொண்டுள்ளது பெரும் வேதனையாகும்.
தமிழர் இலக்கியத்தில் காதல் போற்றப்படுகிறது தமிழர் வாழ்வியலில் வீரத்திற்கு இணையான உன்னத இடம் காதலுக்கு தரப்பட்டுள்ளது நமது கல்வியிலுன் கூட காதல் இலக்கியங்கள் இடம்பெறுகின்றன காதலை மையக் கருவாக வைத்து வெளியான பல நூற்றுக்கணக்கான தமிழ்த் திரைப்படங்கள் பெரும் வெற்றி பெற்றதோடு காலத்தால் அழியாத காவியங்களாக இன்றளவும் போற்றப்படுகின்றன. இப்படி தமிழரின் வாழ்வியலில் நீக்கமுடியாத ஒரு இடத்தைப் பெற்ற காதல் இன்றைக்கு தமிழினத்தை கூறுபோடும் சாதியப் பகைக்கும் தமிழ்த் தேசிய அரசியலுக்கும் தமிழினத்தின் ஒற்றுமைக்கும் ஒரு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றால் அதற்கு முழு முதற் காரணம் திவ்யா – இளவரசன் காதல் உரிய வகையில் கையாளப்படாததும் தாங்கள் செய்துவரும் அரசியலுக்கான கருவியாக ஆக்கப்பட்டதே. சமூக நீதிக்காக அரசியல் செய்யலாம் அது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் சாதிக்காக அரசியல் செய்வதை ஒரு நாகரீக சமூகம் ஏற்றுக்கொள்ளலாகுமா?
தமிழ்நாட்டின் சமூக வாழ்வில் ஒவ்வொரு நாளும் பல நூற்றுக்கணக்கான காதலர்கள் பெற்றோர்களின் சம்மதத்துடனும் ஆதரவுடனும் மணம் செய்துகொண்டுதான் வருகிறார்கள். ஆனால் சில காதல் திருமணங்கள் மட்டுமே இப்படி சாதிய பார்வையாலும் தங்கள் சாதியின் மாண்பைக் காக்க புறப்பட்ட சாதிய அரசியல்வாதிகளாலும் பிரச்சனையாக்கப்படுகின்றன. இப்படிப்பட்ட பிரச்சனைகள் தமிழினமும் தமிழ்நாடும் தன்னை எதிர்நோக்கியுள்ள பல்வேறு பெரும் சிக்கல்களுக்காக போராட ஒன்றுபட்டு நிற்க வேண்டிய அடிப்படையை தகர்த்து விடுகிறது.
இதனை தமிழின மக்கள் ஆழமாக புரிந்துகொள்ள வேண்டும் அதிலும் குறிப்பாக இளைய சமூதாயம் நம் இனத்தின் ஒற்றுமையை பலவீனப்படுத்தும் சக்திகளை அவைகளின் அரசியலை ஆழமாக புரிந்துகொள்ள வேண்டும். நம்மை பிளக்கும் சாதிய சக்திகளையும் அவைகள் உருவாக்கும் கீழ்த்தரமான உணர்வுகளையும் புறந்தள்ளிட வேண்டும். இதனை செய்யத் தவறினால் தமிழனுக்கு என்று ஒரு அரசியலை உருவாக்கும் நமது முயற்சியும் நம் இனத்தின் விடுதலையும் உரிமை மீட்பும் கேள்விக்குறியாகிவிடும் என்பதை தமிழினத்திற்கு நாம் தமிழர் கட்சி வலியுறுத்திக் கூற கடமைபட்டுள்ளது

ஞாயிறு, 7 ஜூலை, 2013

தவறுதலாக பெட்ரோல் ஊற்றிய சிறுவனுக்கு 1.5 கோடி அபராதம்


சவுதி அரேபியாவை சேர்ந்த 2 சிறுவர்கள் 3 ஆண்டுகளுக்கு முன்னர் தங்கள் வீட்டின் அருகே உள்ள திறந்த வெளியில் உருளைக்கிழங்கு சமைத்துக் கொண்டிருந்தனர்.
அடுப்பு சரியாக எரியாததால் சிறுவர்களில் ஒருவனான பயாஸ் முகம்மது தனது வீட்டில் இருந்து பெட்ரோலை கொண்டு வந்து அடுப்பில் ஊற்ற முயன்றான்.
தவறுதலாக உடன் இருந்த நண்பனின் மீது பெட்ரோல் கொட்டி விட்டது. அவ்வேளையில், அவன் எரியும் அடுப்பை நோக்கி நெருங்கி வந்ததால் சிறுவனின் உடலில் தீப்பற்றி பலத்த தீக்காயம் ஏற்பட்டது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் சில நாட்களுக்கு பின்னர் ‘டிஸ்சார்ஜ்’ ஆகி வீடு திரும்பினான். இந்த விபத்தினால் அவனுக்கு பெரிய அளவில் எவ்விதமான பாதிப்பும் ஏற்படவில்லை.
எனினும், தனது மகனின் மீது பெட்ரோலை ஊற்றி எரிக்க முயன்ற பயாஸ் முகம்மதுவிடம் இழப்பீடு கேட்டு காயமடைந்த சிறுவனின் தாயார் ரியாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, பயாஸ் முகம்மதுவுக்கு 9 லட்சம் சவுதி ரியால் (இந்திய மதிப்புக்கு சுமார் ஒரு கோடியே 44 லட்சத்து 55 ஆயிரத்து 909 ரூபாய்) அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
இந்த தீர்ப்பைப் பற்றி அறிந்த அவனது தந்தை 11 வயது சிறுவனுக்கு இவ்வளவு பெரிய தொகை அபராதமாக விதிக்கப்பட்டது ஏற்புடையது அல்ல. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்வேன் என்று கூறியுள்ளார்.

ராணுவத்தில் இளவரசர் ஹாரிக்கு கமாண்டர் பதவி


இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் – டயானா தம்பதியின் இளையமகன் இளவரசர் ஹாரி (28).
இவர் இங்கிலாந்து ராணுவத்தின் விமான படையில் பணிபுரிகிறார்.
அப்பாச்சி ஹெலிகாப்டர் பிரிவில் துணை விமானி ஆக இருந்தார்.
3 ஆண்டு கால பயிற்சிக்கு பிறகு தகுதி தேர்வில் வெற்றி பெற்று தற்போது அப்பாச்சி ஹெலிகாப்டர் படையின் கமாண்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான அறிவிப்பை இங்கிலாந்து ராணுவ அமைச்சகம் அறிவித்துள்ளது. இவர் ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருக்கும் நேட்டோ படையில் 5 மாதம் பணி புரிந்துள்ளார்.

பாடசாலையில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு:42 பேர்



நைஜீரியாவின் யோபே மாநிலத்தில் உள்ள இடைநிலைப் பள்ளிக்குள் புகுந்து இஸ்லாமியத் தீவிரவாதக் குழுவான போக்கோ ஹராம் இன் போராளிகள் நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் பல மாணவர்கள் உட்பட 42 பேர் கொல்லப் பட்டுள்ளனர்.
 
 இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 பொட்டிஸ்கும் பொது வைத்தியசாலையில் இருந்து அதிகாரிகள் AFP செய்திச் சேவைக்குத் தகவல் அளிக்கையில், மமுடோ இடைநிலைப் பள்ளியில் இருந்து துப்பாக்கிச்சூட்டினால் கொல்லப் பட்ட 42 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் சடலங்கள் அங்கு வந்து சேர்ந்திருப்பதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது. நைஜீரியாவின் முக்கிய வர்த்தக நகரான பொட்டிஸ்கும் இல் இருந்து மமுடோ 5 Km தொலைவிலேயே அமைந்துள்ளது. இங்கு சமீப காலமாக போக்கோ ஹராம் ஆயுதக் குழுவின் செயற்பாடுகள் அதிகரித்துக் காணப்படுகின்றன. இந்தத் தாக்குதலில் தப்பித்த ஏனைய ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தகவல் தருகையில், கொல்லப் பட்டவர்கள் அனைவரையும் முதலில் பிணைக் கைதிகளாக ஹாஸ்டலில் பிடித்து வைத்ததாகவும் பின்னர் அவர்கள் மீது சிறிய வெடிகுண்டுகளை வீசியும் துப்பாக்கிச்சூடு நடத்தியும் கொடூரமாகக் கொலை செய்ததாகக் கூறியுள்ளனர்.

 மேலும் பாதுகாப்பு அதிகாரிகள் பாடசாலை வளாகத்தில் துப்பாக்கிச் சூட்டிலிருந்து தப்பிப்பதற்காக ஒளிந்து சென்றவர்களையும் காயங்களுடன் ஓடிச் சென்றவர்களையும் தேடினர். இதன் போது காயங்களுடன் 6 மாணவர்கள் கண்டுபிடிக்கப் பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

 இதேவேளை வியாழக்கிழமை டோகொன் குக்கா எனும் நகரில் நைஜீரிய இராணுவம் புகுந்து நிகழ்த்திய தாக்குதலில் 22 போராளிகள் கொல்லப் பட்டதற்குப் பதிற் தாக்குதலாகவே போக்கோ ஹராம் இன் இன்றைய தாக்குதல் நிகழ்த்தப் பட்டிருக்கலாம் எனக் கருதப் படுகின்றது. இந்நிலையில் நைஜீரிய அரசு மேலதிக வன்முறைகளக் கட்டுப் படுத்தும் பொருட்டு அடமாவா,போர்னோ, மற்றும் யோபே எனும் மூன்று மாநிலங்களிலும் ஊரடங்குச் சட்டம் அமுல் படுத்தியுள்ளது. 2009 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை போக்கோ ஹராம் உடன் சம்பந்தப் பட்ட வன்முறைகளில் 3600 பேர் கொல்லப் பட்டுள்ளனர்.

 ''மேற்குலகக் கல்வி தீங்கானது!' எனப் பொருள் படும் போக்கோ ஹராம் குழுவைச் சேர்ந்த போராளிகளால் கடந்த சில மாதங்களில் நூற்றுக் கணக்கான மாணவர்கள் கொல்லப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
 

ரயில்வே ஊழியர்கள் நள்ளிரவு முதல் பணி பகிஷ்கரிப்பு



இலங்கை ரயில்வே திணைக்களத்தின் ஊழியர்கள் தமது சம்பள முரண்பாடுகளை நீக்கக்கோரி இன்று நள்ளிரவு முதல் 48 மணி நேர பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் தொழில்சார் தொழிற்சங்க கூட்டு முன்னணி அறிவித்துள்ளது

வெள்ளி, 5 ஜூலை, 2013

கற்பழிக்கப்படுவதை பெண்களே விரும்புகிறார்கள்:


தாங்கள் கற்பழிக்கப்படுவதை சில பெண்களே விரும்புகிறார்கள் என்று கூறியுள்ள இஸ்ரேல் நீதிபதியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டெல் அவிவ் மாவட்ட நீதிபதி நிஸ்ஸின் யஷயே என்பவர் தான் இப்படி கருத்து கூறியுள்ளார்.
கற்பழிப்பு வழக்கு ஒன்றை விசாரித்த யஷயே கருத்து தெரிவிக்கையில், சில பெண்கள் இருக்கிறார்கள், அவர்களுக்கு தாங்கள் கற்பழிக்கப்படுவது பிடித்திருக்கிறது, அதை விரும்பவும் செய்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.
இந்தக் கருத்து இஸ்ரேலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பிரதமர் பெஞ்சமின் நதான்யாஹுவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதேபோல இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் பெண்கள் நல கமிட்டியும் கண்டனம் தெரிவித்துள்ளது.
13 வயது சிறுமி கற்பழிப்பு வழக்கில்தான் இந்த நீதிபதி இப்படிக் கருத்து தெரிவித்துள்ளார்.
நான்கு பாலஸ்தீனியர்கள் சேர்ந்து இந்தப் பெண்ணை பலாத்காரம் செய்தனர். அவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டும், அவர்கள் மேல்முறையீடு செய்தனர்.
அந்த வழக்கு விசாரணையின் போது தான் நீதிபதி இவ்வாறான கருத்தை தெரிவித்துள்ளார்.

குப்பை தொட்டியில் ஏழு மனித தலைகள்


மெக்சிகோவில் குப்பை தொட்டி ஒன்றில் ஏழு மனித தலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மெக்சிகோவின் வடக்கு மாகாணத்தில் உள்ள சகோல்கோ நகரில் உள்ள குப்பை தொட்டி ஒன்றில் துர்நாற்றம் வீசுவதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து பொலிசார் நடத்திய சோதனையில், சுமார் ஏழு தலைகள் மற்றும் சில உடல் உறுப்புகள் அடைத்து வைக்கப்பட்ட குப்பை கவர் கிடைத்துள்ளது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொலிசார், இந்த தலைகள் யாருடையது, எதற்காக இங்கு வந்து போடப்பட்டுள்ளது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்

அதிபர் மோர்ஸியின் பதவி இறக்கத்தை வரவேற்ற மத்திய கிழக்கு


எகிப்தில் நேற்று திடீரென இராணுவப் புரட்சி ஏற்பட்டு அங்கு அதிபராகக் கடமையாற்றிய இஸ்லாமியக் கட்சியைச் சேர்ந்த் முஹம்மது மோர்ஸி பதவியிறக்கப் பட்டதுடன் அவர் வீட்டுக்காவலில் அடைக்கப் பட்டு இடைக்கால அதிபராக மூத்த நீதிபதி மன்சூர் நியமிக்கப் பட்டிருந்தார்.
 
 எகிப்தில் கடந்த சில நாட்களாக மோர்ஸிக்கு எதிராகக் கடுமையான ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

 புதன்கிழமை ஆர்ப்ப்பாட்டத்தின் போது போலிசாருக்கும் பொது மக்களுக்கும் இடையே கலவரம் வெடித்ததில் 30 இற்கும் அதிகமானோர் கொல்லப் பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மோர்ஸி பதவியிறக்கப் பட்டு வீட்டுக்காவலில் வைக்கப் பட்டதால் அங்கு ஜனநாயக முறைப்படி அரசு அமையவுள்ள காரணத்தால் எகிப்து பங்குச் சந்தையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இம்மாற்றம் குறித்து ஜேர்மனி கருத்துத் தெரிவிக்கையில் எகிப்தில் ஜனநாயகம் நிலவுவதற்காக அதிக இழப்புடன் ஏற்பட்டுள்ள மறுமலர்ச்சி இதுவெனக் கூறியுள்ளது.

 இதேவேளை சக நாடுகளுடன் இறுக்கமான அரசியல் கொள்கைகளையும் நட்புறவையும் கொண்டிருந்த அதிபர் மோர்ஸி பதவியிறக்கப் பட்டது உலகளாவிய ரீதியில் சாதகமான பயன்களையே ஏற்படுத்தக் கூடியது என்று அரசியல் அவதானிகள் கூறும் வேளை தற்போது யுத்தம் நிகழ்ந்து கொண்டிருக்கும் சிரியா உட்பட மத்திய கிழக்கு நாடுகள் வியாழக்கிழமை மோர்ஸி பதவியிறக்கப் பட்டதை வரவேற்றுக் கருத்துத் தெரிவித்துள்ளன.

 எகிப்தில் இதற்கு முன்னர் இந்தளவு மிகப் பெரிய மக்கள் எழுச்சி நிகழ்ந்ததோ அல்லது மக்களின் எதிர்ப்பினால் அதிபர் பதவியிறக்கப் பட்டதோ நிகழ்ந்தது கிடையாது என்பதால் தற்போது அங்குள்ள ஒவ்வொரு அரசியல் கட்சியும் விழிப்புடன் உள்ளன. அதாவது இக்கட்சிகள் அல்லது இயக்கங்கள் அனைத்தும் ஜனநாயக ரீதியாக அங்கு ஆட்சிக்கு வரக்கூடிய உரிமையைக் கொண்டுள்ளன என்பதை இப்புரட்சி மூலம் உணர்ந்துள்ளன.

 இதேவேளை இதுவரை மோர்ஸியின் ஆட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நிகழ்த்திய எகிப்து மக்கள் வியாழக்கிழமை கெய்ரோவிலுள்ள டாஹ்ரிர் சதுக்கத்தில் அமைதியான முறையில் அவர் பதவி நீக்கப் பட்டு தேர்தல் நடைபெறவுள்ள சந்தோசத்தை அமைதியான முறையில் பட்டாசு வெடித்தும், ஆரவாரம் எழுப்பியும் கொண்டாடியுள்ளனர்

வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் 50 பேர் பலி:12 000 பேர்


 
இந்தியாவின் உத்தரகண்டைப் போலவே கடந்த சில 3 வாரங்களாக நேபாளத்தில் பெய்து வரும் கனமழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கிலும் மண்சரிவுகளிலும் சிக்கி 50 பேர் வரை பலியாகியிருப்பதாகவும் 12 000 பொது மக்கள் இடம்பெயர்ந்திருப்பதாகவும் அந்நாட்டு அரசு இன்று அறிவித்துள்ளது.
 
 மேலும் 19 பொதுமக்களைக் காணவில்லை எனவும் அவர்களை மீட்கும் பணி தோல்வியில் முடிந்திருப்பதாகவும் உட்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

 மொன்சூன் பருவமழை சீசனான இப்போதைய காலநிலை காரணமாக நேபாளின் தெற்கு பீடபூமிகளும் மேற்கு மலைப் பிரதேசங்களும் முக்கியமாக இவ்வனர்த்தத்தால் பாதிக்கப் பட்டுள்ளன. மேலும் இந்த அனர்த்தம் காரணமாக 900 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன.

 மேலும் பண்ணைத் தொழிலுக்காக வளர்க்கப் பட்ட 1000 விலங்குளும் இந்த அனர்த்தத்தில் பலியாகியுள்ளன. இந்நிலையில் நேபாள அரசு நிவாரணப் பணிகளுக்கென 9.2 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது