siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 20 செப்டம்பர், 2012

பின்லாந்து பெண் ஒருவர் மீது பாலியல் பலாத்காரம்! தொடர்புடைய ஒருவர் கைது

 
 
20.09.2012.By.Rajah.ஹிக்கடுவ பிரதேசத்தில் பின்லாந்து பெண் ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளார்.
இரண்டு பேர் குறித்த பின்லாந்து பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர்.
ஹிக்கடுவ கோணபீனிவல பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நான்காயிரம் யூரோ பணம், இரண்டு லட்ச ரூபா பணம், செல்லிடப் பேசி, கடவுச் சீட்டு உள்ளிட்ட பொருட்களும் கொள்ளையிடப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொள்ளையிடப்பட்ட சொத்துக்களும் மீட்கப்பட்டுள்ளன.
ஏனைய சந்தேக நபரை தேடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்