siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 12 அக்டோபர், 2012

அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்று

         
Friday 12 October 2012 .By.Rajah.
கியூபிரிவு பொலிஸாரிடம் பிடிபட்ட இலங்கையர்கள் விடுதலை ! அவுஸ்திரேலியாவுக்கு, செல்ல முயன்று, தூத்துக்குடி அருகே சிக்கிய இலங்கை அகதிகள் 55 பேர், நேற்று மாலை விடுவிக்கப்பட்டு, முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர்.
.
தமிழகத்தின் பல்வேறு முகாம்கள், வீடுகளில் வசித்த 25 குடும்பங்களைச் சேர்ந்த இலங்கை அகதிகள் 55 பேர், அவுஸ்திரேலியா செல்ல வந்தபோது, தூத்துக்குடி அருகே சிந்தலக்கரை வெக்காளியம்மன் கோயிலில், கியூபிரிவு பொலிஸாரிடம் பிடிபட்டனர்.
.
அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர்களை விடுவிக்க உத்தரவிட்ட தமிழக அரசு, அவர்கள் மீண்டும் அதே இடத்திற்கு அனுப்ப வருவாய்த்துறை, பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது.
.
அதன்படி, 3 குடும்பங்களைச் சேர்ந்த 8 பேரை, மண்டபம், வாழவந்தான் கோட்டை, போகநல்லூர் முகாம்களுக்கு, கியூபிரிவு பொலிஸார் நேற்று மாலை, பஸ்களில் அழைத்துச் சென்றனர்.
.
அரசு அனுமதிபெற்று சென்னை, சிதம்பரம், திருச்சியில் வீடுகளில் வசித்த, 22 குடும்பங்களைச்சேர்ந்த 47 பேரை, கியூ பிரிவு பொலிஸார் அந்தந்த இடங்களுக்கு அழைத்துச்சென்றனர். இவர்கள் அனைவரும், அந்தந்த ஊர்களில் பொலிஸாரால் தீவிரமாக கண்காணிக்கப்படுவர் என, வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்