siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 12 அக்டோபர், 2012

கடும் பொருளாதார நெருக்கடி: நோபல் பரிசை பெறுகிறது ஐரோப்பிய

 வெள்ளிக்கிழமை, 12 ஒக்ரோபர் 2012, By.Rajah.
யூனியன்கிழக்கு, மேற்கு ஜேர்மனிகளை ஒருங்கிணைத்ததில் ஐரோப்பிய யூனியனுக்கு பெரும் பங்குண்டு என்ற அடிப்படையில் ஐரோப்பிய யூனியன் அமைதிக்கான நோபல் பரிசை பெறுகிறது. கடந்த 1957ம் ஆண்டில் 6 ஐரோப்பிய நாடுகளை ஒருங்கிணைத்தே ஐரோப்பிய யூனியன் முதன் முறையாக உருவாக்கப்பட்டது.
தற்போது இதில் 27 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள நிலையில் ஒரு பொது பாராளுமன்றமும் பொதுவான கரன்சியாக யூரோவும் புழக்கத்தில் இருக்கிறது.
இருப்பினும் 17 நாடுகள் மட்டுமே இந்த யூரோவை புழக்கத்தில் கரன்சியாக பயன்படுத்தி வருகின்றன.
இந்த யூனியன் உருவாகி 55 ஆண்டுகளாகிவிட்ட நிலையில், தற்சமயம் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியால் ஐரோப்பிய யூனியன் சிக்கித்தவிக்கிறது.
குறிப்பாக, இந்த யூனியனில் உள்ள ஸ்பெயின், கிரீஸ், போர்சுகல் போன்ற நாடுகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருவதோடு, பொது கரன்சியான யூரோவின் மதிப்பும் சரித்து வருகின்றன.
இதனால் ஒட்டு மொத்த ஐரோப்பாவின் பொருளாதாரமும் தள்ளாடிக் கொண்டுள்ளதையடுத்து கிரீஸை யூனியனை விட்டே விரட்ட வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில் இந்த யூனியனுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
ஐரோப்பாவில் அமைதி, ஒற்றுமை, ஜனநாயகம், மனித உரிமைகளை தழைத்தோங்கச் செய்ததில் ஐரோப்பிய யூனியனின் பங்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மேலும் பிரிந்து கிடந்த கிழக்கு, மேற்கு ஜேர்மனிகளை ஒருங்கிணைத்ததில் ஐரோப்பிய யூனியனுக்கு பெரும் பங்கு உண்டு என்று நோபல் பரிசுக் குழு தெரிவித்துள்ளது.