siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வெள்ளி, 28 செப்டம்பர், 2012

தாண்டவம். விமர்சனம்


Friday28September2012.By.Rajah..பாடல்கள் ,பின்னனி இசைமிக அருமை,அனுஷ்கா-விக்ரம் பார்ட் மிக அழகிய ஹைக்கூ கவிதை.கதை என்னவென்றால் காலம் காலமாக நமது டைரக்டர்கள் அரைத்து அரைத்து புளிக்க வைக்கப்பட்ட அதே பழைய பழிவாங்கும் கதை தான்.இதில் என்ன புதுமை என்றால் நாயகன் பார்வை பறிபோனவர் .கதை லண்டணில் நடக்கிறது அவ்வளவுதான்.
கதாநாயகனுக்கு ஏன் பார்வை போனது ,ஏன் பழிவாங்குகிறார் என்பது பிளாஷ்பேக்காக விரிகிறது கதை.சுமரான கதை,மிக சுமரான திரைக்கதை இதையெல்லாம் மீறி படம் எப்படி பிடிக்கிறது எனில் தெளிந்த நீரோடை போன்ற காட்சி அமைப்பு,படக்கோர்வை,பின்ணனி இசை,அனுஷ்கா-விக்ரம் பார்ட் இது மட்டுமே.லட்சுமிராய்&எமிஜாக்சன் -அழகிய ஊறுகாய் பாட்டிகள் அப்போ அப்போ தொட்டுக்கொள்ள மட்டுமே பயன் படுத்துபட்டு இருக்கின்றார்கள்.

கண் பார்வையற்ற, லண்டன் சர்ச்சில் நல்ல பிள்ளையாக பியானோ வாசிக்கும் ஹீரோ, திடீர் திடீர் என சிலரைக் கொல்கிறார். லண்டன் போலீஸில் வேலை செய்யும் நாசர் அதைத் துப்பறிகிறார். அந்தக் கொலைகள் ஏன், எதற்கு, எப்படி நடந்தது என்பதே கதை.


லண்டனில் மிஸ்.இங்கிலாந்து ஆக முயற்சிக்கும் எமி ஜாக்சன், கண் பார்வையற்ற விக்ரமை சந்திக்கிறார். ஒரு எறும்புக்குக் கூட தீங்கு விளைவிக்காத நல்லவரான விக்ரமை காதலிக்க ஆரம்பிக்கிறார். ஆனால் விக்ரம் அடிக்கடி எங்கோ போய், யாரையாவது கொலை செய்துவிட்டு, மறுநாள் காலையில் பியானோ வாசிப்பைத் தொடர்கிறார். ஒரு பக்கம் எமியின் காதல், மறுபக்கம் லண்டன் போலீஸின் தேடல் என்று போகும்போது, ஃப்ளாஷ்பேக்கில் விக்ரம் ஒரு இந்திய உளவுத்துறையின் முக்கிய அதிகாரி என்றும், அனுஷ்காவை மணந்த புதுமாப்பிள்ளை என்றும் தெரிகிறது. நாசர், கொலையாளி விக்ரம் தான் என்று கண்டுபிடிப்பதில் முதல்பாதி முடிகிறது.

மெதுவாக நகரும் முதல்பாதிக்கு நேரேதிராக இரண்டாம் பகுதியில் படம் ஃபுல் ஸ்பீடில் பறக்கிறது. இந்திய ராணுவம் தொலைத்த ஒரு விஷயத்தைத் தேடி விக்ரம் லண்டன் வர, அங்கே அவர் வாழ்க்கையே தலைகீழாய் ஆன கதையும், போலீஸீன் பிடியில் சிக்காமலேயே விக்ரம் வில்லன்களை பழி வாங்கும் கதையும் விறுவிறுப்பாக சொல்லப்படுகிறது.

கல்யாணம் ஆனபின்னும் முதலில் ஃப்ரெண்ட்ஸ் ஆகி, பிறகு லவ்வர் ஆகி, அதன்பிறகே மற்றதெல்லாம் எனும் மனைவின் கண்டிசன், எக்கோ கான்செப்ட், சந்தானத்தின் ஒன் லைனர்கள், அழகான லண்டன் மாநகரம், லண்டன் குண்டுவெடிப்பை கதையில் புகுத்திய சாமர்த்தியம் என பல விஷயங்கள் படத்தை ரசிக்க வைக்கின்றன.


பிறவி நடிகனான விக்ரம், இதிலும் அந்த கதாபாத்திரமாகவே மாறி நம்மை அசத்துகிறார். உளவுத்துறை அதிகாரிக்கும், கண் பார்வையற்றவருக்கும் பாடி லாங்குவேஜில் அவர் காட்டும் வித்தியாசங்கள் அருமை. உடலை கேரக்டருக்கு ஏற்றபடி அவர் மாற்றி இருந்தாலும், ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் முகத்தில் முதுமை தனித்துத் தெரிகிறது. நல்ல நடிகரான விக்ரம் முகத்தைக் கொஞ்சம் கவனிப்பது நல்லது.


முதல் பாதியில் எமி ஜாக்சன் தான் அதிகக் காட்சிகளில் வருகிறார். ஆங்கிலேயெ முகம் என்பதால், நமக்கு அவர்மேல் பெரிதாக ஈடுபாடு வரவில்லை. ஆனால் எமி நன்றாக நடிக்கவே செய்கிறார். வெள்ளைக்குதிரை லட்சுமி ராய் இந்தப் படத்தில் இருந்தாலும், நண்பனின் மனைவியாக வருவதால் குத்துப்பாட்டுக்கும் நோ சான்ஸ்..
எல்லாவற்றுக்கும் சேர்த்து, ஃப்ளாஷ்பேக்கில் அனுஷ்கா வருகிறார். அறிமுகக் காட்சியிலேயே மழையில் நனைந்த அனுஷ்காவைக் காட்டுபோது தியெட்டரே அதிர்கிறது. விக்ரமை போலீஸ் எஸ்.ஐ என்று நினைத்துகொண்டு, அவர் பேசும் வசனங்கள் ரசிக்க வைக்கும் காமெடி

டாக்ஸி டிரைவரான சந்தானம், விக்ரம் கொலை செய்யப்போகும்போதெல்லாம் சரியாக வந்து மாட்டிக்கொள்வது நல்ல காமெடி.

முகமூடியில் நரேன் - ஜீவாவை விரட்டிய நாசர், இதில் விக்ரமை விரட்டுகிறார். ஆனாலும் ஈழத்தமிழராக வருவதால், இரு கேரக்டர்களும் ஒன்றாகத் தெரியவில்லை. விக்ரமின் உயிருக்குயிரான நண்பனாக ஜெகபதிபாபு வருகிறார். நல்ல நடிப்பு
மொத்தத்தில் தாண்டவம் எத்தகைய எதிர் பார்ப்பும் இன்றி செல்லுங்கள் ஏமாற்றம் இருக்காது. .....அருமையான படம் என்று சொல்ல முடியவில்லை என்றாலும் படம் பிடிக்கவே செய்யும் எல்லாருக்கும்

அமெரிக்காவில் தீவிரவாதி வேடத்தில் தம்பியை வீதியில் உலவ விட்ட வாலிபர்



Friday28September2012By.Rajah. அமெரிக்காவில் அரிசோனா மாகாணத்தில் உள்ள போனிஸ்நகரை சேர்ந்தவர் மைக்கேல் டி டர்லி. இவர் தனது தம்பிக்கு தீவிரவாதி வேடமிட்டார். அவரது முகத்தை துணியால் மூடினார். போலி ராக்கெட் லாஞ்சர் துப்பாக்கியை கொடுத்து அதை தோளில் சுமந்தபடி போயனிஸ் நகரின் மிகவும் பரப்பரப்பான வீதியில் உலவ விட்டார்.

அதை வீடியோ காமிரா மூலம் படம் பிடித்து அதை யூடியூப் இணைய தளத்தில் வெளியிட்டார். அதைபார்த்த மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
மக்களிடையே தீவிரவாதி குறித்த பீதியை ஏற்படுத்திய டர்லியை கைது செய்தனர். அவரிடம் விசாரித்த போது, கடந்த ஜூலை 20-ந்தேதி அரோரா சினிமா தியேட்டரில் மர்ம நபர் சுட்டதில் 20 பேர் பலியாகினர். அதை தொடர்ந்து நகரில் போடப்பட்டுள்ள போலீஸ் பாதுகாப்பு குறித்து பரி சோதிக்கவே நான் இவ்வாறு நடந்து கொண்டேன் என தெரிவித்தார். ஆனால் இந்த சம்பவத்தை பார்த்த ஒரு போலீஸ் அதிகாரி இதை கண்டு கொள்ளவில்லை என குற்றம்சாட்டினார். ஆனால் இதை போலீசார் மறுத்தனர். சம்பவத்தன்று போனியஸ் நகர வீதியில் தீவிரவாதி வேடத்தில் ஒரு நபர் சுற்றி வருவதையும், அவருடன் டர்லி வீடியோ காமிராவுடன் வந்ததையும் ஒரு போலீஸ் அதிகாரி பார்த்தார். ஆனால் அந்த நபர் டர்லி தம்பி வைத்திருந்த போலி ராக்கெட் லாஞ்சர் துப்பாக்கியை பறிமுதல் செய்யவில்லை எந்தவிதமான பதட்டத்தையும், பரபரப்பையும் அவர் காட்டிக் கொள்ளவில்லை.. டர்லியிடம் இது குறித்து அவர் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் ஒரு சினிமா படத்துக்காக தான் ஷுட்டிங் நடத்துவதாக கூறி விட்டார். எனவே தான் அந்த அதிகாரி இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என போலீஸ் செய்தி தொடர்பாளர் ஜேம்ஸ் ஹோல்ம்ஸ் கூறினார். இதற்கிடையே கைது செய்யப்பட்ட டர்லி ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் ரொக்க ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

அதிக ஆண்மையுடன் இருந்தால் ஆயுள் குறைவு. ஆய்வில் அதிர்ச்சி தகவல்



Friday28September2012.By.Rajah.உலகஅளவில் ஆண்களைவிட பெண்களே அதிக ஆயுளுடன் உள்ளனர். ஆண்கள் முன்கூட்டியே இறந்து விடுவதற்கு அவர்கள் ஆண்மையுடன் இருப்பது தான் காரணம் என்று ஆய்வு ஒன்று சொல்கிறது.

ஆண்களின் உயிர்அணு பையில் டெஸ்ட்ரோன் என்ற ஹார்மோன் எப்போதும் சுரந்து கொண்டே இருக்கும். இந்த ஹார்மோன் தான் செக்ஸ் உணர்ச்சியை தூண்டும். இதனால் ஆண்களுக்கு இதயம் பலவீனமாகி, நோய் எதிர்ப்பு சக்தியும் குறைந்து விடுகிறது. இதனால் அவர்கள் ஆயுளும் குறைகிறது என்று ஆய்வு சொல்கிறது.

அதே நேரத்தில் மாடுகளுக்கு ஆண்மையை அகற்றுவது போல குறிப்பிட்ட வயதில் ஆண்களின் ஆண்மையை அகற்றிவிட்டால் அவர்களும் நீண்டநாள் வாழ முடியும் என்று ஆய்வாளர்கள் சொல்கின்றனர். இதற்கு கொரியாவில் நடந்த சம்பவம் ஓன்றை உதாரணமாக கூறுகின்றனர்.

கொரியாவில் முன்பு கோசுன் பேரசு என்ற மன்னர் ஆட்சி நடந்து வந்தது. அப்போது இளைஞர்களின் ஆண்மையை அகற்றிவிட்டு அவர்களை அரண்மனை காவலராக நியமித்தனர். 81 பேர் இதே போல நியமிக்கப்பட்டு இருந்தனர். இவர்கள் அனைவரும் நீண்ட நாட்கள் உயிருடன் இருந்தனர்.

அவர்களின் சராசரி ஆயுள் 70 அக இருந்தது. 3பேர் 100 வயதுக்கு மேலும் உயிருடன் இருந்தனர். ஆனால் அப்போது கொரியர்களின் சராசரி ஆயுள் 50 ஆகத்தான் இருந்ததது. எனவே ஆண்மை இல்லாமல் இருந்தால் அதிக நாட்கள் உயிர் வாழலாம் என்று ஆய்வாளர்கள் உறுதிபட சொல்கின்றனர்

தீவுப் பிரச்சனையில் சீனாவுடன் எந்தவிதமான சமரசத்துக்கும் நாங்கள் தயாராக இல்லை. ஜப்பான் பிரதமர்

         
 

Friday28September2012தீவுப் பிரச்னை தொடர்பாக சீனாவுடன் எந்தவிதமான சமரசத்துக்கும் வாய்ப்பில்லை என்று ஜப்பான் பிரதமர் யோஷிகிஹோ நோடா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நியூயார்க் வந்துள்ள யோஷிகிஹோ நோடா செய்தியாளர்களிடம் கூறியது: ""இப்பிரச்னையை சீனா தவறாகப் புரிந்துகொண்டுள்ளது.

சீனாவில் உள்ள ஜப்பானிய பிரஜைகளை தாக்கி, அவர்களது உடமைகளைச் சேதப்படுத்துவோர் மீது அந்நாட்டு அரசு கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்காகூ தீவுகள், சர்வதேச சட்டப்படியும், வரலாற்று ரீதியாகவும் ஜப்பானின் ஒருங்கிணைந்த பகுதியாகும். இதில் நாங்கள் தெளிவாக உள்ளோம். இது தொடர்பாக சீனாவுடன் எந்தவிதமான சமரசத்துக்கும் நாங்கள் தயாராக இல்லை'' என்றார்.

கிழக்கு சீனக் கடற்பகுதியில் இந்தத் தீவுக் கூட்டங்களை டயாயூ என்ற பெயரில் சீனா அழைக்கிறது. அந்தத் தீவு தனக்குச் சொந்தமானது என்றும் உரிமை கோரி வருகிறது.
சீனா பதிலடி: ""சம்பந்தப்பட்ட தீவை தன்னுடையது என்று கூறுவதன் மூலம் ஜப்பான் தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்கிறது. மற்ற நாடுகளின் இறையாண்மையை ஜப்பான் மதித்து நடக்க வேண்டும்'' என்று சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் கின் காங் கூறினார்.

முன்னதாக இரு நாடுகளின் வெளியுறவுத் துறை துணை அமைச்சர்களுக்கு இடையே நியூயார்க்கில் பேச்சுவார்த்தை நடந்தது. கடுமையான வாதப் பிரதிவாதங்கள் நிகழ்ந்த போதிலும், தீர்வு எதுவும் ஏற்படவில்லை. எனினும், தொடர்ந்து பேச்சு நடத்தித் தீர்வு காண்பதையே விரும்புவதாக இரு நாடுகளும் கூறி வருகின்றன

சீனாவில் இருந்து 3000 பஸ்களை இறக்குமதி!இலங்கை அரசாங்கம்


Friday28September2012By.Rajah.இலங்கையில் தனியார் பஸ் உரிமையாளர்களின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாது, சீனாவில் இருந்து 3000 பஸ்களை இறக்குமதி செய்வது குறித்து அரசாங்கம் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது.
கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாகவும், இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் குமார் வெல்கம தெரிவித்துள்ளார்.
குறித்த பஸ்களை இறக்குமதி செய்வதன் மூலம் இலங்கையின் போக்குவரத்துப் பிரச்சினைகளை தீர்க்கமுடியும் என்று இலங்கை அரசாங்கம் அண்மையில் அறிவித்தது.
இலங்கை போக்குவரத்து சபையில் 5000 பஸ்கள் சேவையில் ஈடுபடுகின்றன அதில் 3500 பஸ்கள் வரை பாவனைக்கு ஏற்றவகையில் அமைந்திருக்கவில்லை.
எனவே சீனாவில் இருந்து பஸ்களை இறக்குமதி செய்ய ஆலோசிக்கப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். எனினும் இதற்கு தனியார் பஸ் உரிமையாளர்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
போக்குவரத்துத்துறையில் ஆதிக்கத்தை ஏற்படுத்துவதற்காகவே அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுப்பதாக தனியார் போக்குவரத்து துறையினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இலங்கைக்கு தொடர்ந்தும் சொகுசு வாகனங்கள் இறக்குமதி
இலங்கையில் இறக்குமதி வரியற்ற வகையில் பாவனைக்காக 312 வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
இறுதியாக ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வந்த கப்பலில் இருந்து 525 வாகனங்கள் இறக்கப்பட்டன.
அதில் 312 சொகுசு வாகனங்கள், இறக்குமதி தீர்வையற்ற வகையில் தருவிக்கப்பட்டுள்ளன.
அதில் பெரும்பாலானவை, Montero Sport, KIA/Hyundai SUV, BMW X 1, X 3, 520D ,Audi A 4, A6 ரகங்களை சேர்ந்தவையாகும்
இந்த வாகனங்கள் ஒவ்வொன்றும் சுமார் 5000 அமரிக்க டொலர் பெறுமதியை கொண்டவையாகும்.
இலங்கை அரசாங்கத்துக்கு இறக்குமதி வரியற்ற வாகனங்கள் காரணமாக பல மில்லியன் ரூபாய்கள் நட்டம் ஏற்பட்டுள்ளது.
எனினும் அதனையும் மீறி இறக்குமதி செய்யப்படடு சொகுசு வாகனங்கள், மூன்று வருடங்களுக்கு விற்பனை செய்யப்படக்கூடாது என்று நடைமுறையை மீறி மூன்றாமவருக்கு விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி சுமார் 10 ஆயிரம் வாகனங்கள் பொதுச்சேவையில் உள்ளவர்களினால் மாற்று ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன

இலங்கையில் ஆட்கடத்தல் நடவடிக்கைகளின் முக்கிய கேந்திர நிலையங்களாக மலேசியா,நைஜீரியா!


Friday28September2012By.Rajah.சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்கள், தங்களது செயற்பாடுகளுக்கு மலேசியா மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகளை பயன்படுத்தி வருவதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
சுற்றுலா வீசாக்களைப் பயன்படுத்தி குறித்த நாடுகளுக்கு இலங்கை அகதிகளை அழைத்து அங்கிருந்து சில நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளின் முக்கிய கேந்திர நிலையங்களாக மலேசியா மற்றும் நைஜீரியா ஆகிய நாடுகள் செயற்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சுற்றுலா வீசா மூலம் அழைத்துச் செல்லப்படும் சிலர் அங்கேயே நிர்க்கதியான நிலையில் கைவிடப்படுவதாகவும் வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இவ்வாறு கைவிடப்பட்ட 300 பேர் மலேசியாவில் தங்கியிருப்பதாக தெரிவித்துள்ளது.
சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகள் குறித்து குடிவரவு குடியகழ்வுத் திணைக்களத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

வியாழன், 27 செப்டம்பர், 2012

நயினை நாகபூசணி அம்மன் ஆலயத்துக்கு வரும்

 27.09.2012.By.Rajah.இந்துக்களுக்கு வசதி ஏற்படுத்துங்கள்; நம்பிக்கை பொறுப்புச் சபை தலைவர் கடற்படையிடம் கோரிக்கை
நாகபூஷணி அம்மன் ஆலயத்துக்கு வரும் அடியவர்கள் குறித்த நேரங்களில் இடம்பெறும் பூசைகளுக்குச் செல்ல பிரத்தியேக வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நயினாதீவு நாகபூஷணி அம்மன் கோயில் நம்பிக்கை பொறுப்புச் சபை தலைவர் ஏ.தியாகராஜா புங்குடுதீவு கடற்படை தலைமை அதிகாரிக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். நாகபூஷணி அம்மன் ஆலயத்துக்கு வரும் இந் துக்களுக்கு தனியான வரிசை அமைத்து வழங்கல் எனும் தலைப்பில் எழுதிய கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஆலயத்தின் பூசைகள் இடம்பெறும் நேரங்கள் காலை 7 மணி, நண்பகல் 12 மணி, மாலை 5.30 மணி மற் றும் 6.30 மணி என்பனவாகும். இதில் அபிஷேகம் மற்றும் சாந்தி என்பன காலை 8.30 மணி முதல் 12 மணி வரை இடம்பெறும்.
அடியார்கள் யாழ். குடா நாடு மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் இருந்து வருகின்றனர். இந்த வேளைகளில் தென்பகுதிகளில் இருந்து வரும் மக்களும் இந்து அடியார்களும் கலந்து நீண்ட வரிசையில் நிற்கும் போது இந்துக்கள் அம்பிகையின் பூசை நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியாத அளவுக்குப் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
நீண்ட நேரம் படகுகளுக்கு வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளதால் பூசை வழி பாட்டை உரிய நேரத்துக்குச் சென்று வழிபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 2010, 2011 காலப் பகுதிகளில் இந்துக்களுக்கு என தனியான வரிசை ஏற்படுத்தப்பட்டு உரிய நேரத்தில் பூசைக்கு செல்ல வழியேற்படுத்தி கொடுக்கப்பட்டது.
இந்த வசதி தற்போது செய்து கொடுக்கப்பட வில்லை. இதனால் இந்துக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இந்த நிலையை கருத்தில் எடுத்து இந்துக்கள் உரிய நேரத்தில் பூசை வழிபாடுகளுக்குச் செல்ல பிரத்தியேகமான தனியான வரிசையை ஏற்படுத்தி தருமாறு கேட்டுக் கொள்கிறோம். என்றுள்ளது.
இந்தக் கடிதத்தின் பிரதி வடக்கு கடற்படை தலைமை அதிகாரி, அரச அதிபர், வேலணை பிரதேச செயலர், வேலணை பிரதேசசபை தலைவர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.



உலக தமிழர்கள் கிளிநொச்சியில் நடந்த மனதை உருக்கும் சம்பவங்களை பாருங்கள்!

        
27.09.2012.ByRajah.பொதுமக்களுடைய நிலத்தை ஆக்கிரமித்திருக்கும் படையினரை அங்கிருந்து வெளியேறுமாறு வலியுறுத்தியும், வடக்கில் மக்களுடைய நிலங்களில் ஆக்கிரமித்திருக்கும் படையினர் அங்கிருந்து வெளியேற வேண்டும் என வலியுறுத்தியும், தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று கிளிநொச்சி நகரில் நடத்தியிருந்த போராட்டம் வெற்கறிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது.
இன்று காலை 11மணியளவில் மாவட்டச் செயலகத்தின் முன்பாக கூடிய மக்கள் தமது நிலங்களில் ஆக்கிரமித்துள்ள படையினர் அங்கிருந்து வெளியேறவேண்டும் என பதாகைகளை தாங்கியவாறு கோசங்களை எழுப்பியவாறு உணர்ச்சிபூர்வமாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
முன்னதாக குறித்த போராட்டத்தில் மக்களை கலந்துகொள்ளவிடாது தடுப்பதற்குப் படையினர் கடும் பிரயத்தனம் எடுத்திருந்தனர். எனினும் மக்கள் முழுமையாக கலந்து கொண்டனர்.
இந்நிலையில் போராட்டம் சுமார் ஒரு மணிநேரம் இடம்பெற்றது. இதில் காணாமல்போனோர் மற்றும் சிறைகளிலுள்ளோரின் உறவினரும் கலந்து கொண்டு தங்கள் உறவினர்களை மீட்டுத்தருமாறு கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்திருந்தனர்.
மேலும் இந்தப்போராட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் மனோ கணேசன், கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, வினோ, மற்றும் சி.சிறிதரன் ஆகியோரும், தமிழ் தேசிய மக்கள் முன்னிணியின் சார்பில் அதன் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செ.கஜேந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
போராட்டத்தின் முடிவில் ஜ.நாவுக்கான வதிவிடப்பிரதி நிதியிடமும், மாவட்டச் செயலரிடமும் மகஜர்கள் கையளிக்கப்பட்டுள்ளன.
காணாமல் போன எமது உறவுகளை மீட்க சர்வதேசமே மனமிரங்கு!- கிளிநொச்சியில் உறவுகளைப் பறிகொடுத்த தயார்மார் கதறல்
சர்வதேசமே இராணுவத்தால் கைது செய்யப்பட்டு காணாமல் போன எமது பிள்ளைகளை மீட்டுத்தர நடடிவடிக்கை எடு என கிளிநொச்சி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட உறவுகளை இழந்த தாய்மார் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் இன்று கிளிநொச்சியில் நடைபெற்ற போராட்டத்தின் போதே அவர்கள் இக்கோரிக்கையை விடுத்துள்ளனர்.
காணாமல் போனவர்களின் புகைப்படங்களை வைத்துக்கொண்டு கண்ணீர் மல்க நெஞ்சை உருக்கும் வகையில் அவர்கள் ஒன்றாக சர்வதேசத்திடம் நீதி கோரினார்கள்.
இராணுவத்தினரால் கடத்தப்பட்டும் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டும் காணாமல் போன தமது உறவுளை மீட்டுத்தரவும் தமிழர்களுக்கான நீதியை வழங்கவும் சர்வதேச தலையிட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

























 

உலக வெப்பமயமாதலின் எதிரொலி: 10 கோடி பேர் உயிரிழக்க நேரிடும் அபாயம்



27.09.2012.By.Rajah.உலக வெப்பமயமாதல் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை என்றால், 2030ஆம் ஆண்டுக்குள் உலகளவில் 10 கோடிக்கும் அதிகமானவர்கள் இறக்க நேரிடும் என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. 2010 மற்றும் 2030ஆம் ஆண்டில் வானிலை மாற்றத்தால் மனித இனம் மற்றும் பொருளாதாரத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து டாரா என்ற மனித இன நலம் சார்ந்த நிறுவனம் ஆய்வு நடத்தியது.
அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுற்றுச்சூழலை மாசுப்படுத்தும் வாயுக்கள் அதிகளவில் வெளியிடப்படுவதால், உலகில் வெப்பநிலை அதிகரித்து வருகிறது, துருவப் பகுதிகளிலும் பனி உருகுகிறது.
இதனால் வறட்சி, கடல் நீர் மட்டம் உயர்தல் போன்ற அபாயங்கள் ஏற்படும். தற்போது காற்று மாசு, பசி, நோய் போன்றவற்றால் 50 லட்சம் பேர் ஆண்டுதோறும் இறக்கின்றனர்.
பெட்ரோலியப் பொருட்களை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் 2030ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 60 லட்சமாக உயரும்.
இவர்களில் 90% பேர் வளரும் நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். அடுத்த 10 ஆண்டு இறுதிக்குள் மொத்தம் 10 கோடி பேர் உயிரிழக்கக்கூடும்.
தொழிற்துறைகள் வளர்வதற்கு முன்பு இருந்ததை விட இப்போது 0.8 சதவீதம் அளவுக்கு வெப்பநிலை உயர்ந்துள்ளது.
கடந்த 2010ஆம் ஆண்டு கேன்கன் சுற்றுச்சூழல் மாநாட்டின் போது, உலக வெப்பத்தை 2 சென்டிகிரேட் வரை குறைக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள 200க்கும் மேற்பட்ட நாடுகள் ஒப்புக்கொண்டன.
ஆனால், மாசு ஏற்படுத்தும் வாயுக்கள் அளவைப் பார்த்தால் 2 சென்டிகிரேட் வெப்பத்தை குறைப்பது கூட போதுமானதாக இருக்காது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

நவீன மயமாக்கப்படும் மருத்துவப் பதிவேடுகள்

27.09.2012.By.Rajah.சுவிட்சர்லாந்தில் கடந்த சில வருடங்களாக மருத்துவத் துறையில் "பதிவேடுகள், நோயாளி விபரங்கள், மருந்துச் சீட்டு, எக்ஸ்ரே, ஸ்கேன்" போன்றவை அனைத்தும் காகித வடிவத்திலிருந்து நவீனமயமாக்கப்பட்டு கணனி வடிவத்தில் இருப்பது குறித்து அதிகமாக விவாதிக்கப்படுகின்றது. கணனி பதிவுகள் மலிவானவை, குழப்பமற்றவை, நிரந்தரமானவை என்பதால் விபரங்களை CD க்களில் பாதுகாக்கப் பலரும் விரும்புகின்றனர். நோயாளியின் நோய் விபரம், அதற்காக நடைபெற்ற பரிசோதனை விபரங்கள், மருந்துப் பட்டியல் ஆகியன காகித வடிவத்திலிருந்தால் விரைவில் கிழிந்து போகும். ஆனால் CD க்களாக மாற்றினால் பாதுகாப்பாக இருக்கும்.
கணனி சார்ந்த மருத்துவர்கள் இந்த மருத்துவ மின் பதிவுகளின் தரத்தை உயர்த்தி செலவைக் குறைக்க முயல்கின்றனர். காகிதங்களில் பாதுகாக்கும் போது மருத்துவரின் கிறுக்கலான எழுத்துகள் தவறான மருந்துகளைப் பெற வழிவகுக்கும்.
இது போன்ற தவறுகள் மின்பதிவுகளில் ஏற்படாது. அமெரிக்காவில் மட்டும் இத்தவறுகளால் ஆண்டொன்றுக்கு 1,00,000 மரணங்கள் ஏற்படுகின்றன.
ஆனால் சுவிட்சர்லாந்தில் ஒரு நாளைக்கு மூன்று முதல் ஐந்து பேர் வரை உயிரிழக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. இத்தகவலை மருத்துவத் தகவலியல் கழகத்தின் தலைவரான கிறிஸ்ட்டியன் லோவிஸ்(Christian Lovis) தெரிவித்தார்.
நல்ல தரமான சிகிச்சைக்கு நோயாளி பற்றிய தகவல்களின் நம்பகத்தன்மையும் துல்லியமும் மிகவும் முக்கியம் என்றார் லோவிஸ். தகவல் தெரிவித்தல் தவிர வேறு கூடுதல் பயன்கள் எதுவும் இம் மின்பதிவுகளால் இல்லை, என்றும் தெரிவித்தார்.
மின்நலவாழ்வுத் திட்டத்தில் மருந்து, நோயாளி கோப்பு, தொலை மருந்துகள், நுகர்வோர் உடல்நலத் தகவலியல், அயலக மருத்துவ சேவை, மற்றும் தொலைதூதரகத்திலிருக்கு நோயாளி குறித்த தகவல்களைச் சேகரித்து தொகுத்தல் ஆகிய அனைத்தும் அடங்கும்