siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

சனி, 28 டிசம்பர், 2013

அடுத்த 2 ஆண்டுக்கான நிதி திட்டத்தில் கையெழுத்திட்டார்


அமெரிக்காவில்  புதிய பட்ஜெட்க்கு ஒப்புதல் கிடைகாமல் கடந்த அக்டோபர் மாதம் அரசு நிறுவங்கள் முடங்கி கிடந்தனர். பலர் வேலை வாய்பை இழக்கும் நிலை ஏற்பட்டது.

இது போன்று ஒரு நிலை அடுத்த 2 ஆண்டுகளில் ஏற்படாமல் இருக்க அமெரிக்க அதிபர் ஒபாமா 2014-2015ம் ஆண்டு பட்ஜெட் திட்டத்தில் கையொப்பம் இட்டார். இது குறித்து  அமெரிக்க வெள்ளை மாளிகை நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-

2014ஆம் ஆண்டு பாதுகாப்பு அதிகார சட்ட முன்மொழிவில் ஓபாமா கையொப்பமிட்டுள்ளார். மேலும் பாதுகாப்பு மற்றும் போர் செலவுகளுக்கு 60 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் வரை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனெட் அவை மற்றும் பிரதிநிதிகள் அவை இந்த 2 நிதி ஆண்டு வரவு செலவு திட்டங்களை ஏற்றுக்கொண்டுள்ளன. ஓபாமாவும், இத்திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். என்று தெரிவித்துள்ளது.

வெள்ளி, 27 டிசம்பர், 2013

பிரதமருக்கு எதிரான வன்முறையில் போலீஸ்காரர் பலி - 48 பேர் படுகாயம்!

தாய்லாந்து நாட்டில் பிரதமருக்கு எதிரான போராட்டத்தில் மீண்டும் வன்முறை வெடித்தது. போலீசாருடன் மோதலில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க கண்ணீர் புகை குண்டுகளை வெடித்து துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த மோதலில் போலீஸ்காரர் இறந்தார். மேலும் 48 பேர் காயம் அடைந்தனர்.
பிரதமருக்கு எதிராக போராட்டம் - தாய்லாந்து நாட்டு பிரதமர் யிங்லக் ஷினாவத்ராவை பதவி விலக வலியுறுத்தி கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி போராட்டம் நடந்து வருகிறது.
   
அதை ஏற்க மறுத்த பிரதமர் பிப்ரவரி 2–ந்தேதி பொதுத்தேர்தல் நடத்தப்படும் என அறிவித்தார். இதற்கான பணிகள் மும்முரமாக நடக்கின்றன. இத்தேர்தலை புறக்கணிப்பதாக முக்கிய எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி அறிவித்தது. ஆனாலும் பிரதமர் தலைமையிலான ஆளுங்கட்சியும், வேறு சில கட்சிகளும் வேட்பாளர்களை நிறுத்துவதில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
மீண்டும் தீவிரம் : இதனால் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டக்காரர்களும் கடந்த சில நாட்களாக தங்களது போராட்டத்தை தீவிரப்படுத்தினர். இந்நிலையில் தலைநகர் பாங்காக்கில் உள்ள ஒரு விளையாட்டு அரங்கில் 27 கட்சி பிரதிநிதிகள் கூடி வேட்பாளர்களை தேர்வு செய்ய இருந்தார்கள். இதனால்

விளையாட்டு அரங்கை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த விளையாட்டு அரங்குக்கு காலை 7 மணி அளவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டனர். பூட்டிக்கிடந்த ‘கேட்’டை உடைத்து அரங்கத்துக்குள் செல்ல முயன்றனர். உடனே போலீசார் இவர்களை தடுக்க முயன்றனர்.

மோதல் கட்டுப்படுத்த கண்ணீர் புகை வீச்சு:
இதனை அடுத்து இரு தரப்பினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. போலீசாரை நோக்கி கற்கள் வீசப்பட்டன. எனவே ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வெடித்து, ரப்பர் குண்டுகளால் துப்பாக்கி சூடு நடத்தினர்.

இதில் 48 ஆர்ப்பாட்டக்காரர்கள், போலீஸ் அதிகாரிகள் உள்பட சிலர் படுகாயம் அடைந்தனர். பின்னர் காயம் அடைந்த போலீசார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி போலீஸ்காரர் நரோவ் பித்சித் (45) பரிதாபமாக செத்தார். தற்போது மீண்டும் போராட்டம், மோதல் தீவிரம் அடைந்துள்ளதால் வன்முறைவெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
 

செவ்வாய், 24 டிசம்பர், 2013

பொலிஸ் நிலையத்துக்குள் வைத்து 200 பொதுமக்கள் சுட்டுக்கொலை!

தெற்கு சூடானில் மோசமான கொடூரங்கள் இழைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் கூறுகின்றன.ஒருவாரத்துக்கு முன்னர் அங்கு வெடித்த இன வன்முறைகளில் பெருமளவு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இருநூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூட்டாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்றை நேரில் பார்த்த மூன்று சாட்சிகள் தன்னிடம் பேசியுள்ளதாக ஜூபாவில் உள்ள செய்தியாளர் ஒருவர் தெரிவித்தார்.இவர்களில் பெரும்பாலானவர்கள் நியூர் இனக்குழுவைச் சேர்ந்தவர்கள்.அனைவரையும் போலீஸ் நிலையம் ஒன்றுக்குள் தள்ளிவிட்டு, அவர்களை அரசபடையினர் சுட்டுக்கொன்றதாக நேரில் கண்டவர்கள் கூறியுள்ளனர்.
   
அண்டையிலுள்ள கிராமங்களுக்குள் நுழைந்த ஆயுததாரிகள், வீடு வீடாகச் சென்று டின்கா இனக்குழுவைச் சேராதவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று தேடித் தேடி சுட்டுக்கொன்றதாக இன்னொருவர் கூறினார்.இதுதவிர, நாடெங்கிலும் உள்ள ஐநா அலுவலக வளாகங்களில் சுமார் 45 ஆயிரம் பொதுமக்கள் தஞ்சமடைந்துள்ளனர்.தெற்கு சூடானில் 80 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் வீடுகளைவிட்டு வெளியேறியுள்ளனர். அதிகாரபூர்வமான கணக்குகளின்படி, 500 பேர் வரை உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், உயிரிழப்பு எண்ணிக்கை அதனைவிட அதிகம் என்று தொண்டுநிறுவனங்கள் கூறுகின்றன.

இந்திய சிறுவன் துஷ்பிரயோகம்: இலங்கையர் மீது குற்றச்சாட்டு

 டுபாயில் 14 வயது இந்திய சிறுவன் ஒருவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு  உட்படுத்தியதாக இலங்கையைச்சேர்ந்த நீச்சல் அதிகாரி ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
டுபாய், ஜுமேரியா கிராமத்தில் இந்த சம்பவம் கடந்த மே மாதம் 28 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

நீச்சல் பயிற்சியளிக்கும் 23 வயதான இலங்கையைச்சேர்ந்த  நீச்சல் அதிகாரி 14 வயதான இந்திய சிறுவனை  வல்லுறவு செய்ததாக நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
தமிழ் மொழிப்பெயர்ப்பு வசதி இல்லாத காரணத்தால் வழக்கு விசாரணை ஜனவரி 5 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

திங்கள், 23 டிசம்பர், 2013

மக்களை காப்பாற்ற சென்ற விமானத்தின் மீது தாக்குதல்

தெற்கு சூடானில் மக்களை காப்பாற்ற சென்ற விமானத்தின் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியதற்கு அமெரிக்கா ஜனாதிபதி ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தெற்கு சூடானில் ஜனாதிபதி சல்வா கீரின் ஆட்சியை கைப்பற்றும் நோக்கத்தில், அங்குள்ள புரட்சி படையினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனால் கடந்த சில நாட்களாக இராணுவத்துக்கும், புரட்சி படையினருக்கும் இடையே நடந்து வந்த மோதல்கள் தீவிரமடைந்து உள்நாட்டு போராக உருவெடுத்துள்ளது.
இதற்கிடையே தெற்கு சூடானில் உள்ள ஜொங்கோலி மாநிலத்தின் அபோக்கோ நகரில் ஐ.நா அலுவலகத்தின் மீது சுமார் 2 ஆயிரம் நுவர் இன தீவிரவாதிகள் கடந்த 18ம் திகதி தாக்குதல் நடத்தினர்.
இதில் சூடான் இராணுவத்தை சேர்ந்தவர்கள் உட்பட மொத்தம் 22 பேர் பலியாகினர்.
எண்ணை வளம் மிக்க ஜொங்கோலி மாகாணத்தில் உள்ள போர் என்ற நகரம் தற்போது புரட்சி படையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

எனவே அங்கு இராணுவத்துக்கும், புரட்சிப் படைக்கும் இடையே உச்சகட்ட போர் நடந்து வருகிறது.
எனவே, தெற்கு சூடானில் வாழும் தங்கள் நாட்டு மக்களை திரும்ப அழைத்து செல்ல அமெரிக்கா ஏற்பாடு செய்தது. இதற்காக 45 ராணுவ வீரர்களுடன் 3 போர் விமானங்கள் தெற்கு சூடானுக்கு விரைந்தன.

புரட்சிப் படையினரின் பிடியில் உள்ள போர் நகரத்தில் அவை தரையிறங்க முயன்ற போது, அமெரிக்க போர் விமானங்களின் மீது துப்பாக்கி சூடு நடத்தியும், குண்டுகளை வீசியும் புரட்சிப் படையினர் ஆவேச தாக்குதல் நடத்தினர். இதில் 4 அமெரிக்க வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.
இந்த தாக்குதலுக்கு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இன்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், ஆயுத பலத்தை பயன்படுத்தி தெற்கு சூடானின் ஆட்சியை கைப்பற்ற

நினைப்பவர்களின் இத்தகைய செயல்பாடுகள் அமெரிக்காவும், சர்வதேச சமுதாயமும் அளித்து வரும் நீண்டகால ஆதரவை இழக்கும் நிலைக்கு தெற்கு சூடானை தள்ளிவிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் தங்கள் நாட்டினரை திரும்ப அழைத்துக் கொள்ளும் அமெரிக்காவின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்
 

சனி, 21 டிசம்பர், 2013

எல்லையை கடக்கும் கனடா மக்களுக்கு 5 டிப்ஸ்

 அமெரிக்காவிற்கு விடுமுறை காலத்தில் பயணிகள் தங்கள் பயணத்தின் போது பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள கனடாவில் எல்லை பகுதி சேவை நிறுவனம் 5 டிப்ஸ்களை அளிக்கின்றது.

இவ்விடுமுறை காலத்தில் எல்லையை கடப்போர் கவனிக்க வேண்டிய 5 குறிப்புகள்:
1. தங்களின் பிரயாண பத்திரங்களை தயார் நிலையில் வைத்துகொள்ள வேண்டும்.
2. தாங்கள் வாங்க வேண்டிய பொருட்களை பற்றிய தகவல்களை சேகரித்து வைக்க வேண்டும்.
3. வண்டியில் கொண்டு செல்லப்படும் பொருட்களை பற்றிய தகவல்கள் அறிந்திருக்க வேண்டும்.
4. கைபேசி மர்றும் வானொலி போன்ற மின்னணு பொருட்களை சோதனை ஆய்வு சாவடி அருகில் நெருங்கும் போது அணைத்து வைத்தல் அவசியம்.

5. கைவசம் உள்ள பணத்தை தெரிவிக்க வேண்டும் (அதாவது கனடாவில் நுழையும் போது 10,000 கனடியன் டொலர்கள் மட்டுமே வைத்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது).
இதனையடுத்து அடையாள அட்டைகள், சிறுவர்களின் பிறப்பு சான்றிதழ்கள், வாங்கிய பொருட்களுக்கான ரசீதுகள், பாஸ்போர்ட் மர்றும் விசா பத்திரங்கள் போன்ற அனைத்து முக்கிய ஆவணங்கலையும் பத்திரமாக வைத்திருப்பது மிக அவசியம்.

மேலும்(Duty free shop) விமான நிலையத்தில் இருக்கும் கஸ்டம்ஸ் வரிகள் இல்லாத கடைகளில் பொருட்களை வாங்கினாலும், சுங்க அதிகாரிகளின் சோதனையின் போது அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பது அவசியம்.
 


 

வியாழன், 19 டிசம்பர், 2013

நவற்கிரி வேள்ட் நியூஸ் : சுவிஸ் மக்களே நட்புடன் வாழுங்கள்! துணை தூதரின் !!!...

நவற்கிரி வேள்ட் நியூஸ் : சுவிஸ் மக்களே நட்புடன் வாழுங்கள்! துணை தூதரின் !!!...: சுவிஸ் நாட்டு மக்கள் அனைவரிடமும் நட்புறவு கொண்டு வாழவேண்டும் என்று துணை தூதரக தலைவராய் பதவியேற்றுள்ள டாம் மேட்லாக் தெரிவித்துள்ளார். சுவி...

சுவிஸ் மக்களே நட்புடன் வாழுங்கள்! துணை தூதரின் !!!

சுவிஸ் நாட்டு மக்கள் அனைவரிடமும் நட்புறவு கொண்டு வாழவேண்டும் என்று துணை தூதரக தலைவராய் பதவியேற்றுள்ள டாம் மேட்லாக் தெரிவித்துள்ளார்.
சுவிஸ் நாட்டின் துணை தூதரக தலைவராக பிரிட்டிஷ் நாட்டின் டாம் மேட்
லாக் பதவியேற்றுள்ளார்.
இந்நிலையில் நாளிதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டி ஒன்றில், சுவிஸ் நாட்டிற்கு புதிதாக குடியேறிய மக்கள் உடன் சுவிஸ் மக்கள் நட்புரவு வைத்துக்கொள்ள முயற்சியெடுக்க வேண்டும்.

தன் வேலை, தன் வாழ்க்கை என்ற எண்ணத்தை விடுத்து எல்லோரையும் சந்தித்து கலந்துரையாடுவதால் அந்நாட்டில் நிரந்தர குடியுரிமை பெற்ற மக்களுக்கு அறிமுகம் ஆவது மட்டும் இல்லாமல் சில சமயங்களில் இது போல் செய்வது உதவிகளையும், நன்மைகளையும் பயக்கும் என்று கூறியுள்ளார்.
மேலும் சுவிஸில் வாழ்க்கை செலவு அதிகமாய் இருப்பினும் இயற்கை காட்சிகளை ரசிக்கும் வண்ணம் வெளியே சென்று ஆராய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
 

புதன், 18 டிசம்பர், 2013

துயர சம்பவத்தை ஏற்படுத்திய ஞாபகப்பரிசு

 
பிரான்சில் இராணுவ வீரர் ஒருவர், ஞாபகார்த்த அடைளமாக வைத்திருந்த ராக்கெட் ஒன்று வெடித்து சிதறியதில் மூன்று பேர் படுகாயமடைந்தனர்.

கடந்த 2007ம் ஆண்டு அக்டோபர் 4ம் திகதி சகவீரர் வைத்திருந்த ராக்கெட் எதிர்பாரவிதமாய் மாடியிலிருந்து கீழே விழுந்தது.

இதில் வீரர் ஒருவர் தன் கால்களை இழந்தார், மற்றெரு வீரர் கேட்டும் திறனையும், மூன்றாவது வீரர் கால்களையும் இழந்து விட்டனர்.

இச்சம்பவம் நேர்ந்த போது அவர்கள் வசிக்கும் வீட்டின் ஜன்னல் கதவுகள் உடைந்தன, இக்குண்டு வெடிப்பினால் உலோக துண்டுகள் குறித்த வீரர் மீது விழுந்து படுகாயமடைந்தார்.
இதனை தொடர்ந்து ராக்கெட்டை வைத்திருந்த வீரரை கைது செய்ததுடன், வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

நீதிமன்ற விசாரணையில், தன் சக ஊழியர்களுக்கு எதிர்பாரவிதமாய் துன்பம் விளைவித்ததற்காக கண்ணீர் மல்க வருத்தம் தெரிவித்துள்ளார்.
 
 

தூதரக அதிகாரிகளின் ஐடி கார்டுகளை திரும்ப


இந்தியாவில் பணியாற்றும் அமெரிக்க  தூதரக அதிகாரிகளுக்கு அளித்துள்ள அடையாள அட்டைகளை திரும்ப தர வேண்டும் என்று மத்திய அரசு அமெரிக்காவுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் உள்ள அமெரிக்க அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகளை மறு ஆய்வு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் அடிப்படையிலேயே அடையாள