siruppiddy nilavarai.com

Footer Widget 1

புதன், 1 ஆகஸ்ட், 2012

கடற்றொழிலுக்குச் சென்றவர் சடலமாக மீட்பு: யாழ்ப்பாணத்தில் சம்பவம்

 
புதன்கிழமை, 01 ஓகஸ்ட் 2012,
கடற்றொழிலுக்குச் சென்ற கடற்றொழிலாளி ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று கொழும்புத்துறை அரியாலை துண்டி கடற்பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இதில் வவுனியாiவை சொந்த இடமாகக் கொண்ட கிருஷ்ணசாமி ஸ்ரீரஞ்சன் வயது 53 என்றவரே சடலமாக மீட்கப்பட்டவராவார்.
இவர் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் ஈச்சமோட்டையிலுள்ள தனது உறவினருடைய வீட்டிற்கு வந்திருந்த நிலையில் உறவினரின் குடும்ப வறுமை காரணமாக கடற்றொழிலுக்குச் சென்றுள்ளார்.
ஆயினும், ஆழம் குறைந்த கடற்பகுதியில் நண்டு பிடித்துக் கொண்டிருக்கையில் மங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவரது சடலம் மரண விசாரணைகளின் பின்னர் பிரேதப் பரிசோதனைகளுக்காக யாழ். போதானா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு

0 comments:

கருத்துரையிடுக