siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வியாழன், 4 ஏப்ரல், 2013

முதியவர் ஆபாச நடவடிக்கை: நீதிபதி எச்சரிக்கை



சுவிட்சர்லாந்திலுள்ள ஜுரா மாநிலத்தைச் சேர்ந்த வயதான விவசாயி(80) ஒருவர், சிறுவர் சிறுமிகளிடம் தொடர்ந்து தவறாக நடந்துகொண்டார் என்பதால் இவரை பொலிசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர்.
மேலும் இவர் பிறர் முன்னிலையில் மிகச்சிறிய கால்சட்டையை அணிந்துகொண்டு தனது உறுப்பு பலரது பார்வையில் படும்படி ஆபாசமாக நடந்துசெல்வது, சிறுவர்களிடம் பாலியல் முறைகேடுகளில் ஈடுபடுவது போன்ற குற்றங்களுக்காக பொலிசார் இவரை போரெண்ட்டூயி(Porrentruy) நீதிமன்றத்தில் நிறுத்தியபொழுது நீதிபதி இவருக்கு 720 ஃபிராங்க் அபராதம் விதித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து பெரிய கால்சட்டை அணிய வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த 2010ம் ஆண்டிலும், அதற்கு பத்தாண்டுகளுக்கு முன்னரும் இந்த எண்பது வயது முதியவர் மீது இதுபோன்ற குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 

இறைச்சி உணவில் ஆர்வம் குறைந்த சுவிஸ்

 ஆய்வறிக்கை தகவல் ,,
சுவிட்சர்லாந்தில் கடந்த 2012ம் ஆண்டில் இறைச்சி உணவு குறித்து புரோவியான்டி(Proviande) என்ற அமைப்பு நடத்திய ஆய்வில், ஒவ்வொருவருக்கும் தலா 3.4 சதவீதம் இறைச்சி உண்பதில் ஆர்வம் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.
கடந்த வருடம் ஒவ்வொருவரும் சராசரியாக 51.72 கிலோகிராம் இறைச்சி உணவை சாப்பிட்டுள்ளனர். அதாவது ஒருவர் ஒரு நாளைக்கு சுமார் 141 கிராம் சாப்பிட்டதாகச் இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது.

இறைச்சி உணவு குறைந்ததற்குப் பொருளாதாரம் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் மக்களில் பலர் வெளி உணவகங்களில் இறைச்சி உண்பதைக் குறைத்துவிட்டனர்.
இருந்தாலும் சுவிட்சர்லாந்தில் இறைச்சியின் தரமும், சுவையும் மக்களைக் கவர்ந்திருப்பது உண்மை தான். ஏனெனில் அண்டை நாடுகளான ஜேர்மனி, பிரான்சில் இருந்து இறக்குமதியாகும் இறைச்சியை விட சுவிட்சர்லாந்தில் கிடைக்கும் இறைச்சியே சிறந்தது என்று 64 சதவீதம் பேர் இந்த ஆய்வில் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
மேலும் சுவிட்சர்லாந்தில் கடந்த வருடம், சராசரியாக ஒருவர் பன்றி இறைச்சியை 23.54 கிலோவும், கோழிக்கறி 11.31 கிலோவும், மாட்டிறைச்சி 11.06 கிலோவும் சாப்பிட்டதாக இந்த ஆய்வறிக்கை புள்ளிவிபரத்துடன் விளக்குகிறது
 

திருடர்களின் கைவரிசையால் காணாமல் போன ???


வட இங்கிலாந்தில் உள்ள நியூ கேஸ்டில் நகரில் உள்ள மேயர் இல்லத்தில் அந்நகரின் தொல்பொருட்கள் மற்றும் அரிய வகை பரிசுப் பொருட்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது.இந்த இல்லத்தின் கதவுகளை உடைத்துக்கொண்டு நள்ளிரவில் நுழைந்த திருடர்கள், அங்கிருந்த சுமார் 1 1/2 லட்சம் பவுண்ட்கள் மதிப்புள்ள பொருட்களை அள்ளிச் சென்றுவிட்டனர்.
திருடப்பட்ட பொருட்களில் உலகின் மிக உயரிய பரிசு என கருதப்படும் நோபல் பரிசு பதக்கமும் ஒன்றாகும். ஆயுதப் போட்டியை உலகநாடுகள் கைவிட வேண்டும் என்று சேவையாற்றிய இங்கிலாந்து நாட்டின் முன்னாள் வெளியுறவு மந்திரி ஆர்தர் ஹெண்டர்சனுக்கு 1934ம் ஆண்டு அமைதிக்கான இந்த நோபல் பரிசு வழங்கப்பட்டது.
அவர் நியூ கேஸ்டில் நகரைச் சேர்ந்தவர் என்பதால் அவரது மறைவிற்கு பிறகும் இந்த பரிசு பதக்கம் நகர மேயரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. இதையும் திருடர்கள் கொண்டு சென்றுவிட்டது உள்ளூர் மக்களுக்கு வேதனை அளிக்கும் செய்தியாக உள்ளது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, பெருமைக்குரிய நோபல் பதக்கத்தை எடுத்தவர்கள், உடனடியாக அதை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என நியூ கேஸ்டல் நகர்வாசி ஒருவர் கூறினார்.

திருடர்களின் கைவரிசையால் காணாமல் போன நோபல்


வட இங்கிலாந்தில் உள்ள நியூ கேஸ்டில் நகரில் உள்ள மேயர் இல்லத்தில் அந்நகரின் தொல்பொருட்கள் மற்றும் அரிய வகை பரிசுப் பொருட்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது.இந்த இல்லத்தின் கதவுகளை உடைத்துக்கொண்டு நள்ளிரவில் நுழைந்த திருடர்கள், அங்கிருந்த சுமார் 1 1/2 லட்சம் பவுண்ட்கள் மதிப்புள்ள பொருட்களை அள்ளிச் சென்றுவிட்டனர்.
திருடப்பட்ட பொருட்களில் உலகின் மிக உயரிய பரிசு என கருதப்படும் நோபல் பரிசு பதக்கமும் ஒன்றாகும். ஆயுதப் போட்டியை உலகநாடுகள் கைவிட வேண்டும் என்று சேவையாற்றிய இங்கிலாந்து நாட்டின் முன்னாள் வெளியுறவு மந்திரி ஆர்தர் ஹெண்டர்சனுக்கு 1934ம் ஆண்டு அமைதிக்கான இந்த நோபல் பரிசு வழங்கப்பட்டது.
அவர் நியூ கேஸ்டில் நகரைச் சேர்ந்தவர் என்பதால் அவரது மறைவிற்கு பிறகும் இந்த பரிசு பதக்கம் நகர மேயரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. இதையும் திருடர்கள் கொண்டு சென்றுவிட்டது உள்ளூர் மக்களுக்கு வேதனை அளிக்கும் செய்தியாக உள்ளது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, பெருமைக்குரிய நோபல் பதக்கத்தை எடுத்தவர்கள், உடனடியாக அதை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என நியூ கேஸ்டல் நகர்வாசி ஒருவர் கூறினார்

மரங்களிலிருந்து பரவும் மகரந்தக் காய்ச்சல்: பேராசிரியர் ?


ஜேர்மனியில் விரைவில் வசந்த காலம் தொடங்கவுள்ள நிலையில் மரங்களில் மலர்கள் பூத்துக் குலுங்குவது வழக்கம்.
இது குறித்து மருத்துவமனையின் காது மூக்குத் தொண்டை மருத்துவர் பேராசியர் ஆண்டிரீயாஸ் டீஸ்(Andreas Dietz) கூறுகையில், வசந்த காலங்களில் மரங்களில் பூக்கும் மலர்களின் மகரந்ததால் ஒவ்வாமை ஏற்பட்டு தூசிக் காய்ச்சல் பரவும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது மரங்களில் இலைகளோ, மலர்களோ பூக்கவில்லை. ஆனால் இன்றிருக்கும் குளிர் நாளை மாறி வெப்பம் பரவத் தொடங்கியதும் மலர்கள் மலரும்.
அப்பொழுது மகரந்தம் காற்றில் பரவும் வேளையில் ஒவ்வாமை தாக்கும் மனிதர்கள் தங்கள் கைகளில் கைக்குட்டையை வைத்துக் கொண்டு மூக்கை காத்துக் கொள்ள வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.
முதன் முதலில் மலரும் birch மலரில் இருந்து பரவும் மகரந்தத்தால் பாதிக்கப்படுவோரை மருத்துவமனைகள் விரைவில் எதிர்பார்க்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து வடஅமெரிக்காவில் இருந்து ஜேர்மனிக்கு வந்திருக்கும் Ragweed என்ற செடியின் மலர்களால் பரவும் மகரந்தம் வீரியம் மிக்கவை. இதனாலும் ஒவ்வாமை ஏற்பட்டு காய்ச்சல் வரும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்

புதன், 3 ஏப்ரல், 2013

வெளிநாட்டு இளம் பெண்கள் இந்தியா செல்ல தடை ?


இந்தியாவில் தொடரும் பாலியல் புகார்களால் வெளி நாட்டில் இருந்து இந்தியாவிற்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ளும் பெண் சுற்றுலா பயணிகளின் வருகை மிக கடுமையாக வீழ்ச்சி அடைத்துள்ளது.
அண்மை காலமாக இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் குறித்து பரவலாக பேசப்பட்டு வருகின்றது.
டெல்லி மருத்துவ மாணவி கற்பழித்து கொலை, தனது கணவருடன் சைக்கிள் பயணம் மேற்கொண்ட சுவிஸ் பெண் கற்பழிப்பு, ஆக்ராவில் விடுதி ஒன்றில் தங்கி இருந்த வெளிநாட்டு பெண்ணை மானபங்கம் செய்ய முயற்சித்தது என்று தொடர்ந்து பெண்களுக்கு எதிரான செய்திகள் தினம் தினம் இந்திய ஊடகத்தில் இடம் பிடிக்க தொடங்கின.
எனவே பிரிட்டன், பிரான்ஸ், சுவிஸ், அவுஸ்திரேலியா போன்ற மிகப் பெரும்பாலான நாடுகள் தங்கள் நாட்டு மக்களுக்கு அதுவும் குறிப்பாக இளம் பெண்கள் இந்தியா செல்வதை தவிர்ப்பது நல்லது என்று அறிவுறுத்தி வருகின்றது.
இதனால் அதிர்ச்சி அடைந்த வெளிநாட்டினர் பலர் தங்கள் இந்திய பயணத் திட்டத்தை மாற்றி அமைத்துள்ளனர். முன்பதிவு செய்யப்பட்டு இருந்த விடுதிகள் மற்றும் சுற்றுலா முன்பதிவுகளை ரத்து செய்துள்ளனர்.
இதனால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் இந்திய வருகை சுமார் 30 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது
 

மாலியின் போர்ப் பயிற்சிக்கு உதவும் சுவிஸ் ,.,


ஐரோப்பிய ஒன்றியம், மாலி ராணுவத்துக்கு பயிற்சி அளிக்க சுவிஸ் ராணுவத்தின் உதவியை நாடியபொழுது சுவிஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் பாதுகாப்புத்துறை அமைச்சரிடம் கலந்தாலோசித்து பின்னர் உதவுவதாகக் கூறியுள்ளார்.
இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் புர்கால்டெர்(Burkhalter) ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், மாலியின் தலைநகரான பமாகோஷில் முகாமிட்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய ராணுவப்பயிற்சியில் சுவிஸ் வீரர்களும் இனி கலந்து கொண்டு மாலி வீரர்களுக்கு பயிற்சி அளிப்பர் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் சர்வதேச மனிதநேயச் சட்டத்தை மதிக்கும் சுவிஸ் வீரர்கள் இந்தப் பயிற்சியின்பொழுது துப்பாக்கி எடுத்துச் செல்லமாட்டார்கள். மற்றும் ராணுவ ஆயுத பயிற்சி அளிக்கமாட்டார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சுவிட்சர்லாந்தில் இருந்து ஐநூறு வீரர்கள் மாலிக்கு வரவேண்டும் என்று இந்தக்குழு எதிர்ப்பார்க்கின்றது

செவ்வாய், 2 ஏப்ரல், 2013

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள்: நாசா கண்டுபிடிப்]


அமெரிக்க நாசா நிறுவனம் மார்ஸ் ரோவர் கியூரியாசிட்டி என்ற விண்கலத்தை அனுப்பி செவ்வாய் கிரகத்தை தற்பொழுது ஆராய்ந்து வருகின்றது.
இந்த விண்கலமானது, முன்னர் செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்ந்ததற்கு அடையாளமான பெர்குளோரேட்ஸ் என்ற உப்பு படிமங்களை கண்டுபிடித்துள்ளது.
இந்த உப்பு கலந்த பாறைத் துகள்களை சூடுபடுத்தும்பொழுதும் இதிலிருந்து குளோரினேட்டட் ஹைட்ரோ கார்பன்கள் வெளியேறியது.
அப்பொழுது கூடவே அதிக அளவிலான ஆக்சிஜனும் வெளியேறுவதை விஞ்ஞானிகள் பார்த்துள்ளனர். {புகைப்படங்கள்}




இந்த பெர்குளோரேட் உப்புகள் மூலம் செவ்வாய் கிரகத்தில் முன்னர் உயிரினங்களின் புழக்கங்கள் இருந்திருக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்
 

விளையாட்டு போட்டியில் ஊழல்: சுவிஸ் அதிகாரிகள் மீது ,.,


இந்திய தலைநகர் டெல்லியில் கடந்த 2010ம் ஆண்டு நடைபெற்ற கொமன்வெல்த் விளையாட்டு போட்டியில் ஏற்பட்ட ஊழல் வழக்கில் சுவிட்சர்லாந்து நிறுவனத்தை சேர்ந்த மூன்று அதிகாரிகளுக்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியுள்ளது.
டெல்லியில் நடைபெற்ற கொமன்வெல்த் விளையாட்டு போட்டிற்கான ஏற்பாடு மற்றும் கட்டமைப்பு பணிகளில் குழு தலைவராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுரேஷ் கல்மாடி எம்.பி., இந்த ஊழல் குறித்து கைது செய்யப்பட்டார். தற்பொழுது இவர் பிணையில் விடுவிக்கப் பட்டுள்ளார்
இந்த வழக்கை சி.பி.ஐ. தொடர்ந்து விசாரித்து வருகின்றது.
மேலும் காமன்வெல்த் போட்டிகளின் முடிவுகளை அறிவிக்கும் விளம்பர பலகை, ஸ்கோர் போர்டு ஆகியவற்றை அமைத்ததில் 95 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இதற்கான கருவிகளை வினியோகம் செய்த சுவிஸ் டைமிங் லிமிடெட் என்ற நிறுவனத்தை சேர்ந்த மூன்று அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இவர்கள் மூவருக்கும் சம்மன் அனுப்பும் நடவடிக்கையை மேற்கொள்ளும்படி டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து மூன்று அதிகாரிகளுக்கும் சம்மன் தயார் செய்து அதை உள்துறை அமைச்சகத்துக்கு சி.பி.ஐ அனுப்பி வைத்துள்ளது.
 

புதுமைகள் படைப்பதில் சுவிஸ் முதலிடம்


ஐரோப்பிய ஒன்றியம் நடத்திய அண்மைகால ஆய்வின்படி, அதன் உறுப்பினர் நாடாக இல்லாத சுவிட்சர்லாந்து புதுமைகள் படைப்பதில் முதலிடத்தைப் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.
இது குறித்து புதுமை மதிப்பீட்டுக் கழகம் இந்த வாரம் ஓர் அறிக்கையை சமர்ப்பித்தது. அதில் ஐரோப்பிய ஒன்றியத்தில் 27 உறுப்பினர் நாடுகளிலும் உள்ள ஆராய்ச்சி மற்றும் புதுமைகளை அறிந்து தனது முடிவுகளை வெளியிட்டுள்ளது.
இந்த ஆய்வில் குரோஷியா, ஐஸ்லாந்து, மேசிடோனியா, நார்வே, செர்பியா, துருக்கி, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளும் சேர்த்து கொள்ளப்பட்டன.
பதினைந்து அம்சங்களை அடிப்படையாக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டதில் வெளிப்படையான, சிறப்பான மற்றும் கவர்ச்சியான ஆய்வு முறைகளை பின்பற்றுவதில் சுவிட்சர்லாந்து முன்னணியில் இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த மூன்று ஆய்வு முறைகளையும் நிறுவனமுதலீடு, அறிவுசார் சொத்துகள் மற்றும் பொருளாதார விளைவுகளை அறிவதற்கு சுவிட்சர்லாந்து பயன்படுத்தியுள்ளது.
மேலும் ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் இருக்கும் ஸ்வீடன், ஜேர்மனி, டென்மார்க், ஃபின்லாந்து போன்ற நாடுகளும் புதுமைகள் படைப்பதில் முன்னணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது