siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 4 செப்டம்பர், 2012

கவிதை மழை{பெண் குழந்தையின் எச்சரிக்கை!!!!!]

04.09.2012.BYrajah.அடிக்கடி சண்டை,அவனுக்குரியவளிடம்,
அடுப்பு,
எரிக்க விறகு இல்லை,
ஆனாலும்
ஆண் குழந்தை,
இல்லையென்ற,
சோகம்,
அவனுக்கு.

எப்பொழுதும்,
வெறுப்பின்,
வெளிப்பாடு,
எல்லோர் மீதும்,

பால் சாப்பிட்டு,
முடித்த,
அவனுடைய குழந்தை ,
அரை நித்திரையில்,
திடுக்கிட்டது.
அம்மாவின்,
வயிற்றை ,
தொட்ட போது,
தயார் நிலையில்,
அடுத்த குழந்தை,

எச்சரிக்கை விடுத்தது குழந்தை,
அந்த உயிரிடம்,
வரு முன் யோசி,
ஏற்கனவே இங்கு இருக்கும்,

எல்லோருக்கும்,
அப்பாவின் வாயில்,
சனியன்தான்.
"நீ அடுத்த சனியன்,
ஆகிவிடுவாய் "
நீ பெண்ணாக இருந்தால்,
எச்சரிக்கை,
வெளி வரு முன்னே,
எச்சரிக்கை