siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 4 செப்டம்பர், 2012

அழகு பெண்ணின் (உண்மை)புலம்பல்...கவிதை





04.09.2012.BY.rajah.
எனகென்று எப்பொழுதும்
ஒர் கூட்டம்
நல்லவர் கெட்டவர்

அறிவது கடினம்...

பார்க்கும் பொழுது பார்த்து
பேசாதவரும் உண்டு
பார்த்துப் பார்த்துப்
பேசுகிறவரும் உண்டு

காதல் கடிதம் ஒருவரிடம்.
அன்பின் வார்த்தை மற்றொருவர்(வித்தை)
யாரை அழைப்பது யாரை வெறுப்பது...???!!!

பயணம்...
ஒரே ஆற்றில்தான்...
முடியும்...
ஒரே சொல்லில்தான்...
அது "படுக்கை"      
நட்புக்காக..எறிந்தால் இரவில்

பூமிக்கு ஒளியாக....

எறிந்து கீழே வீழ்ந்தால்

விண் மீனாக....

இவை என்றென்றும்

அழியாத நம் நட்புக்காக
கவிதை என்றொரு ஊடகமாம் - அதில்
கலைகள் அனைத்தும் கலந்திடுமாம்.!

கவிதை என்றொரு ஊடகமாம் - அது
களைகள் அனைத்தும் களைந்திடுமாம்.

சிந்தனை சிந்திடும் சான்றோரின் - உயர்
சிந்தைகள் யாவும் சுமந்திடுமாம்.

அரும்பென கற்பனை பூத்திடுமாம் - கட்டிக்
கரும்பென கலைச்சொல் இனித்திடுமாம்.

விருந்தென இதனை படித்திட்டால் - மேலும்
அறுந்திடும் ஆசை பிறந்திடுமாம்.

சாதிக் கொடுமையை சாடிடுமாம் - உயர்
நீதிக்கு தொள்தனை தந்திடுமாம்.

கருவகம் ஆகிடும் உருவகமாய் - அந்த
உருவகம் ஆகிடும் உயிரகமாய்.

அணிநயம் ஆகிடும் அணிகலனாய் - அந்த
அணிகலன் எய்திடும் நனிபயனாய்.

உலகில் இதுபோல் கலையுண்டோ - உடன்
உரைத்திட வாரீர் உயர்ந்தோரே .....
காதல் ஒரு கண்சிமிட்டல்...
உன்னில் தொலைந்தது,
ஒரு கண்சிமிட்டலால்தான்,
அந்த கண்சிமிட்டும்,
நேரத்தில்தான்,
என் உலகம்,
நனைத்து போகிறது.
ஒரு மழை சாரலை போல