siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 25 அக்டோபர், 2012

ஒரு மாத பச்சிளம் குழந்தையை விற்ற தந்தைக்கு சிறைத்தண்டனை

வியாழக்கிழமை, 25 ஒக்ரோபர் 2012, By.Rajah.
சீனாவில் ஒரு மாத பச்சிளம் குழந்தையை விற்ற தந்தைக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. சீனாவின் ஜியாங்சு மாகாணத்தை சேர்ந்தவர் சுவோ(வயது 36). நகை வியாபாரம் செய்து வருகிறார்.
வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால் தவித்த சுவோ, தன் ஒரு மாத குழந்தையை 6 லட்சம் ரூபாய்க்கு விற்று விட்டார். இதுகுறித்து சுவோவின் மனைவி பொலிசில் புகார் செய்தார்.
இதையடுத்து சுவோவை பொலிசார் கைது செய்தனர். குழந்தையை விற்ற குற்றத்துக்காக சுவோவுக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
தாயிடமிருந்து குழந்தையை பிரித்த குற்றத்துக்காக 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. குழந்தை தற்போது தாயிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது