siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 25 அக்டோபர், 2012

எங்களது தொழிற்சாலை மீது இஸ்ரேல் தான் தாக்குதல் நடத்தியது:

 வியாழக்கிழமை, 25 ஒக்ரோபர் 2012, By.Rajah.
 சூடான் குற்றச்சாட்டுஎங்களது நாட்டிலுள்ள ஆயுத தொழிற்சாலை மீது இஸ்ரேல் தான் தாக்குதல் நடத்தியது என சூடான் குற்றம் சுமத்தி உள்ளது. சூடான் தலைநகர் கார்டோமில் ஆயுத தொழிற்சாலை ஒன்று உள்ளது. இத்தொழிற்சாலையின் மீது கடந்த செவ்வாயன்று நடத்தப்பட்ட தாக்குதலில் 2 பேர் இறந்தனர்.
இந்நிலையில் 4 இஸ்ரேல் விமானங்கள் தான் எங்கள் ஆயுத தொழிற்சாலையின் மீது தாக்குதல் நடத்தியது என கலாசார மற்றும் செய்தித்துறை அமைச்சர் அகமது பிலால் உஸ்மான் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கிருந்து பாலஸ்தீன தீவிரவாதிகளுக்கு ஆயுதங்கள் கடத்தப்படுவதாக சந்தேகம் எழுந்ததன் பேரிலேயே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
பன்னாட்டு சட்டத்தை மீறி சூடான் ரசாயன மற்றும் உயிரி ஆயுதங்களை தயாரிப்பதாக கூறி கடந்த 1998ஆம் ஆண்டில் இத்தொழிற்சாலை மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.