siruppiddy nilavarai.com

Footer Widget 1

வியாழன், 30 ஆகஸ்ட், 2012

மட்டக்களப்பில் பஸ் விபத்து: 14 பேர் காயம்

30.08.2012.BYrajah.
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் 14 பேர் காயமடைந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்வண்டியொன்று கிரான்குளம் பகுதியில் பாதையைவிட்டு விலகி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் அவர்களில் 9 பேர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஆரையம்பதி வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி டொக்டர் ரமேஸ் தெரிவித்தார்.
இதேவேளை, ஆரையம்பதி வைத்தியசாலையில் 5 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்