siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

யாழில் ஆறுமாத காலப் பகுதியில் 62 சிறார்கள் துஸ்பிரயோகம்



செவ்வாய்க்கிழமை, 14 ஓகஸ்ட் 2012,
 

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த முதல் ஆறுமாத காலப்பகுதிகளில் 62 சிறார்கள் வன்முறைகள் மற்று துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகியிருப்பதாக யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட சிறுவர் நன்னடத்தை திணைக்களத்தின் தகவல்களின் அடிப்படையில் இந்த விடயம் புலனாகியுள்ளது.
இதில் பாலியல் ரீதியான சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு 22 சிறுவர்கள் உள்ளாக்கப்பட்டுள்ளனர். உடல் ரீதியான துஷ்பிரயோகத்துக்கு 13 சிறுவர்களும் உளரீதியான துஷ்பிரயோகத்துக்கு 2 சிறுவர்களும் உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
கவனிப்பாரற்று 8 சிறுவர்களும், சட்டத்தை குழப்பிய 11 சிறுவர்களும் இனங்காணப்பட்டுள்ளனர். நெருக்கீட்டுக்கு ஆளாகிய நிலையில் ஒரு சிறுவரும் மற்றும் ஒரு சிறுவர் தற்கொலை செய்ய முன்வந்துள்ளமை குறித்தும் பதிவுகள் செய்யப்பட்டுள்ளன.
இளவயதில் 4 சிறுவர்கள் திருமணம் செய்து கொண்டுள்ளமையும் இதன்போது தெரியவந்துள்ளது. இருப்பினும், யாழ்.போதனா வைத்தியசாலைத் தரவுகளின் பிரகாரம் முதல் 7 மாத
காலப்பகுதிகளில் 81 பாலியல் ரீதியான சிறுவர் துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது

0 comments:

கருத்துரையிடுக