siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

டுபாயில் உள்ள கடையில் மடிக்கணணிகள் அபேஸ்: மாட்டிக்கொண்டன் இலங்கையர் !

14.08.2012.டுபாய், ஜீமெய்றாவிலுள்ள மருந்து கடையொன்றினுள் களவாக நுழைந்து மூன்று மடிக்கணினிகளை திருடியதாக கூறப்படும் ஐந்து இலங்கையர்கள் டுபாய் குற்றவியல் நீதிமன்றில் விசாரணைக்குட்படுத்தப்படுகின்றனர். மேற்படி மருந்து கடையில் பணிபுரிந்து வந்தவர்களே இத்திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இவர்கள் மீது இரண்டு பாதுகாப்பு பெட்டகங்களை பழுதாக்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதில் ஒருவர் மடிக்கணினிகளை விற்க முயன்றபோது பிடிபட்டுள்ளார். வேறு கடைகளில் பல களவுகளை செய்துள்ளதாக இவர் கூறியுள்ளார். இவ் வழக்கு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 23 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

0 comments:

கருத்துரையிடுக