siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

காகம் காட்டுவதாகக் கூறி இரண்டரை வயதுக் குழந்தை மீது பாலியல் குற்றம் புரிந்த தந்தை

 

24.08.12012.
தனது இரண்டரை வயது மகளை தினமும் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி வந்த ஜோர்தான் நாட்டுப் பிரஜை ஒருவரை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது,
ஜோர்தான் நாட்டுப் பிரஜையான யூசுப் மொஹமட் அல் முவர் என்பவர் இலங்கைப் பெண்ணை மணம் முடித்து கொழும்பில் வசித்து வந்துள்ளார். இவர்களுக்கு இரண்டரை வயது பெண் குழந்தை உள்ளது.
இச் சந்தேக நபர் தனது மகளை காகங்களைக் காட்டுவதாகக் கூறி தினமும் வீட்டின் மேல்மாடிக்கு அழைத்துச் செல்வதை வழமையாகக் கொண்டுள்ளார். அதன்போதே பாலியல் ரீதியாக குற்றம் புரிந்துள்ளதாக தெரியவந்துள்ளது. கணவரின் நடத்தையில் சந்தேகம் கொண்ட மனைவி இது தொடர்பாக ஆராய்ந்து பார்த்ததில் குழந்தை பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளதை அறிந்துகொண்டுள்ளார்.
அதன் பின்னர் கிரண்ட்பாஸ் பொலிஸ் நிலையத்தில் அவர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.