siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

சீபா உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொள்ள முடியாது!- இலங்கை



வெள்ளிக்கிழமை, 24 ஓகஸ்ட் 2012,
 

இந்திய அரசாங்கத்துடனான சீபா உடன்படிக்கை ஏற்படுத்திக் கொள்ள முடியாது என இலங்கை இந்திய அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த உடன்படிக்கைக்கு இலங்கையில் ஏற்பட்ட எதிர்ப்புகளே இதற்கு பிரதான காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

எனினும் கடந்த 2000ம் ஆண்டு முதல் காணப்படுகின்ற சுதந்திர வர்த்தக உடன்படிக்கை குறித்த அதிக கவனம் செலுத்துமாறு இலங்கை, இந்தியாவை கோரி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த மாதம் இலங்கை வந்திருந்த இந்திய வர்த்தக துறை அமைச்சர், சீபா உடன்படிக்கை தொடர்பிலான பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்து பேசி இருந்தார்.

எனினும் இதனை ஆரம்பிப்பதில் இலங்கை அரசாங்கத்துக்கு நாட்டமில்லை என்று அவரிடம் அரசாங்க தரப்பில் கூறப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த உடன்படிக்கையால், உள்நாட்டு வர்த்தக துறை பாதிப்படையும் என தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாகவே உள்நாட்டு சேவையாளர்கள் இதற்கு எதிர்ப்பினை வெளிக்காட்டி வருகின்றனர்