siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

புதிய ரயில் வண்டி அட்டனில் வெள்ளோட்டம்

24.08.2012.
சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட புதிய ரயில் வண்டி நேற்று மாலை அட்டன் ரயில் நிலையத்திலிருந்து வெள்ளோட்டம் விடப்பட்டது.

சீனாவில் இருந்து தருவிக்கப்பட உள்ள 13 புதிய இரயில் வண்டிகளில் 5 வண்டிகள் ஏற்கனவே இலங்கையை வந்தடைந்துள்ளன. இவற்றில் ஒன்றை மலையக மார்க்கத்தில் ஈடுபடுத்துவதற்கான பரீட்சார்த்த பயணமே நேற்று மேற்கொள்ளப்பட்டதாக இலங்கை ரயில்வே திணைக்களத்தின் திட்டமிடல் பணிப்பாளர் விஜய சமரசிங்க தெரிவித்தார்.